TerrorisminFocus

Tuesday, July 26, 2011

18 வருசமா ஆட்டையப் போட்டவங்களும், கடைசியா மாட்டிக்கிட்டவனும்!!



நேற்று நீதிமன்றத்தில் 2G ஊழல் பற்றி ஆ. ராசா சில விசயங்களை போட்டுடைத்துள்ளார். கேபினெட் அமைச்சகம் அலைக்கற்றையை ஏலம் விடக் கூடாது என்று முடிவெடுத்ததினால்தான், அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விடாமல் கையளித்ததாக ஆ. ராசா சொல்லியுள்ளார்.

மேலும், "நான் பின்பற்றிய முறை தவறானது எனில், 1993லிருந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்த அத்தனை பேரும் இதைத்தான் செய்துள்ளனர், அவர்களும் சிறையிலிருக்க வேண்டியவர்கள்தான்" "பாஜகாவின் அருன் சோரி 26 உரிமங்களையும், தயாநிதி மாறன் 25 உரிமங்களையும், நான் (ஆ, ராசா) 122 உரிமங்களையும் கொடுத்துள்ளோம். இவையனைத்துமே ஏலம் விடப்பட்டு கொடுக்கப்பட்டவையல்ல. அவர்கள் செய்தது தவறில்லை என்றால், என்னை மட்டும் விசாரிப்பது ஏன்?" என்று கேட்டுள்ளார்.

இதைத்தான் பல முறை நாமும் சொல்லி வருகிறோம். உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் வளங்கள் எல்லாம் அடி மாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்கக் கொடுக்கப்படுகிறது என்று. இதில் பாஜக, காங்கிரசு, சிபிஎம், டி எம் சி என்ற பேதம் கிடையாது. அனைவரும் மாமாக்கள் என்று சொல்லி வருகிறோம்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக் கொண்டது ஆ. ராசா எனில் இதே போல அரசு சொத்துக்களை, உரிமங்களை பாஜக காலத்திலிருந்து குறைந்த விலைக்கு விற்றது, இலவசமாகக் கொடுத்தது, கரும்பு தின்னக் கூலி போல தனியார் கையில் காசையும் கொடுத்து அரசு நிறுவனத்தையும் ஒப்படைத்தது போன்ற அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கு டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் அமைச்சகத்தையே வைத்திருந்தார்கள் பாஜக மாமாக்கள்.

இவர்களின் ஆட்சியில் அம்பானி, டாடா உள்ளிட்ட தரகு முதலாளி கும்பல் ஆட்டயப் போடாத எண்ணைய் வயலா(உதா: பன்னா மெத்தா, கோதாவரி)? தொலைத் தொடர்புத் துறை உரிமங்களா (உதா: சிடிஎம்ஏ மோசடி, ISD மோசடி)? இவர்கள் ஆட்சியில் டாடா உள்ளிட்ட கொள்ளைக் கும்பல் ஆட்டயப் போடாத நிறுவனங்களா (BSNL, மாடர்ன் பிரட்)?



அது மட்டுமா, டாடா, அம்பானி போன்ற 'கொழுத்த' ஏழைகளுக்கு கொள்ளையடிக்க வசதி செய்து கொடுப்பதில் எதிர்கட்சி, ஆளும் கட்சி பேதமின்றி தோழமையுணர்வுடன் பாஜக-காங்கிரசு கூட்டணி செயல்பட்டுள்ளதற்கு உதாரணங்கள் ஒன்றா இரண்டா?

பாஜக-காங்கிரசு புனித கூட்டணிக்கு அப்படியொரு உதாரணம் நீராராடியா டேப் விவகாரத்தில் வெளிவந்தது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையை புட்டு புட்டு வைத்தது நீராராடியா டேப்.

கடந்த 18 வருடங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து அள்ளிக் கொடுத்து கொள்ளையிடப்பட்ட நாட்டின் சொத்துக்கள், 73 லட்சம் கோடிகளுக்கும் மேல். இவர்களின் கூட்டுக் களவானித்தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்தான் கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் வயல் ஊழல். 2G ஊழலுக்கு இணையான இந்த ஊழலை கணக்குத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியது. ஆயினும் பாஜகவோ, சிபிஎம்மோ அல்லது வேறெந்த எதிர்கட்சியுமோ இதனை மக்களரங்கிற்கு கொண்டு வந்து காங்கிரசை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யவில்லை.விவகாரம் அத்தோடு முடிவுக்கு வந்தது. ஏனெனில் இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள்.

இதே போல, போன வாரம் கர்நாடக முதலமைச்சர் கோமாளி எடியூரப்பாவின் மெகா ஊழலை அம்பலப்படுத்தினார் லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. பல கோடி ரூபாய்க்கு சுரங்க ஊழலிலும், நில ஊழலிலும் எடியூரப்பா நேரடி தொடர்பிருப்பதை அவரது அறிக்கை அம்பலப்படுத்தியது. இதை வைத்து கர்நாடக எதிர்க்கட்சிகள் பெரும் கலகத்தை உருவாக்கினார்களா என்றால் இல்லை. ஏனெனில் ஹெக்டேவின் அறிக்கை எடியூரப்பாவை மட்டுமல்ல, காங்கிரசின் எஸ். எம். கிருஷ்ணா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி போன்றோரையும் சேர்த்து அம்பலப்படுத்தியிருந்தது. மேலும், எடியூரப்பா மாட்டிக் கொள்வது இது முதல்முறையும் அல்ல. நிலபேர ஊழலிலும், சுரங்க மோசடி ஊழலிலும், சட்டமன்ற குதிரை பேர ஊழலிலும், தேவ கவுடாவின் நாற்காலி சண்டை நாடகங்களில் கோமாளியாகவும் இன்னும் பல கோமாளித்தனமாக செயல்பாடுகளிலும் அவமானப்பட்டவன்தான் இந்த எடியூரப்பா. இதற்கு முன்பே சில முறை நீதிபதி ஹெக்டே இவனை அம்பலப்படுத்தி ஒன்றும் வேலைக்காகவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் அழுததும் உண்டு. இத்தனை நடந்தும் கோமாளி எடியூரப்பா வெட்கமின்றி சிரித்துக் கொண்டேதான் வலம் வருகிறான். இதே காலகட்டத்தில் பயங்கரவாத கட்சியான பாஜகவின் தலைவன் நிதின் கட்காரியின் மகன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடக்கிறது(கொஞ்ச காலம் முன்புதான் மிக ஆடம்பரமான திருமணம் ஒன்றை கட்காரி நடத்தியிருந்தான்).








(இன்னுமாடா நம்மள நம்புறாய்ங்க... அது அவிங்க தல விதி....!!)


இவையெல்லாம் காங்கிரசைப் பொறுத்தவரை ஒரேயொரு அம்சத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், 'நீ மட்டும் யோக்கியமா' என்று வாயடைக்கும் கருணாநிதி டெக்னிக்தான் அது. ஏனேனில், பாஜக மத்தியில் ஆட்சி செய்த போதும் சரி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் போதும் சரி ஊழல், மோசடி புகாரில் மாட்டிக் கொண்ட யாரொருவரையும் பொறுப்பிலிருந்து நீக்கியதில்லை. இது தவிர்த்து இந்த விவகாரங்களில் அத்தனை பேறும் ஒன்றாக கை நனைத்து பன்னாட்டு, உள்நாட்டு கொள்ளைக்கார முதலாளிகளுக்கு திருட்டு சேவகம் செய்துள்ளதால் வாயை மூடிக் கொண்டு விவகாரங்களை குழி தோண்டி புதைக்கவே செய்கின்றனர். சிரித்து கொண்டே வலம் வருவது எடியூரப்பா மட்டுமா? ஆ. ராசா, ஜெயலலிதா, அத்வானி, வாஜ்பேயி, வெங்காய நாயுடு, பா. சிதம்பரம், மன்மோகன், பிரகாஷ் கரத், புத்ததேவு, மோடி என அத்தனை அயோக்கியன்களும்தான் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருகிறார்கள்.

மாட்டிக் கொண்ட திருடர்களும், கொள்ளையர்களும் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருவது எதனால்? அது சுற்றியிருக்கும் மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தால்தான். இங்கு நாம் கடிந்தது கொள்ள வேண்டியது திருட்டு கும்பலின் வெட்கங்கெட்ட நகைப்பையா அல்லது அதை அங்கீகரிக்கும் மக்களின் அரசியல் மொன்னைத்தனத்தையா?

அசுரன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!


ரூ 3,74,937 கோடி ஊழல்!


ஊழல் சிறப்பிதழ்!!



Friday, May 27, 2011

பாலாறும், தேனாறும் ஓடுதாம் குஜராத்தில்!!

குஜராத்து ஒளிருகிறது என்றும், ரத்தக் கறை படிஞ்ச கைனாலும் ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் உத்தமரய்யா நம்ம மோடி, அவர்தான் இந்தியாவ வாழ வைக்கப் போற தெய்வம்மய்யா என்றும் வெளக்கமாத்து மோடிக்கு பார்ப்பன பட்டுக் குஞ்சலங்கள் காவடி எடுத்து ஆடின. இவர்களின் பிரச்சாரத்தையும் உண்மை என்று நம்பி ரொம்ப நல்லவர்களாம், பாசிட்டிவ் திங்கிங் 'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பர' பிரிவு ஒன்றும் கூத்தாடியது.

இந்தியாவின் டிராபிக் ராமசாமி(நன்றி பாரதி தம்பி) அன்னா ஹசாரே வேறு தனது உண்ணாவிரத நாடகத்தின் முடிவில் மோடியின் குஜராத்து ஒளிருது, அங்கு நடக்கும் ஆட்சி வடிவை பிற மாநிலங்களும் பின்பற்றனும் என்று வெறும் உரலை இடித்துக் கொண்டிருந்த பட்டுக் குஞ்சலங்களுக்கு சிறிது அவலை எடுத்துப் போட்டார். இதில் மோடிக்கு விளம்பரம் கிடைத்ததோ இல்லையோ ஹசாரேயின் டவுசர் கழண்டு காவி கோமணம் பல்லிளித்து விட்டது.

இதோ, சுதாரித்துக் கொண்ட ஹசாரே குஜராத்து வளர்ச்சியின் அருகதை என்னவென்று சொல்லியுள்ளார். 'குஜராத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்றும் மது விலக்கு சட்டமிருந்தும் கூட சாராய வெள்ளம் ஓடுகிறது என்றும், ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் மோசடி கோலோச்சுகிறது' என்று போட்டுடைத்துள்ளார்.

கூடப் போன அக்னிவேஷ் அவர்கள், குஜராத்து ஒளிர்வதற்கு சிரியல் பல்பு போட்டு கரண்டு சப்ளை பன்னுபவர்கள் யார் என்று நேற்று சொல்லியுள்ளார். 'அமெரிக்க ஊடக மாமாக்களின் உதவியுடன் குஜராத்தின் வளர்ச்சி பற்றி பொய்யான சித்திரத்தை முன்னிறுத்துகிறார்கள்' என்றுள்ளார் அக்னிவேஷ் (மாமா - வார்த்தை உதவி நாம்). இவிங்களோட போன கெஜ்ரிவால்னு ஒருத்தர், இப்படியே நிலத்த புடுங்கினு இருந்தா குஜராத்தில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றுள்ளார்.

ஏற்கனவே குஜராத்து வளர்ச்சியின் தராதரம் என்னவென்பதை பலரும் தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆயினும் ஏகாதிபத்திய சுரண்டல் வேட்கைக்கு பொருத்தமாக திட்டங்களை மின்னல் வேகத்தில் நடைமுறைப்படுத்த குஜராத்து போன்று அரசு பாசிசம் இருக்குமிடங்கள் வசதியாக இருக்கின்றன. எனவேதான் இதனை ஒரு மாடலாக அனைத்து ஊடகங்களும் முன்னிறுத்துகின்றன. ஆனால் அங்கோ உண்மையில் விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள், முஸ்லீம் சிறுபான்மையினர் என பல மக்கள் பிரிவினரும் அரசியல்-பொருளாதார-கலாச்சார ரீதியாக ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்கள் உரிமைகள் ஏதுமற்று அற்பமான உரிமைகளை கோருபவர்கள் கூட பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். இந்து மதவெறி பயங்கரவாதமும், அரசு-ஏகாதிபத்திய பயங்கரவாதமும் சேர்ந்து ஒடுக்குகின்றன குஜராத்தில்.

குஜராத்தில் சாராய ஆறு மட்டும் ஓடவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின், முஸ்லீம் சிறுபான்மையினரின் ரத்த ஆறும், விவசாயிகளின், தொழிலாளர்களின் கண்ணீர் ஆறும் சேர்ந்தே ஓடுகிறது. இதனைத்தான் வளர்ச்சி என்கிறார்கள் மக்கள் விரோதிகள். இதற்கு இசைப் பாட்டு பாடுகிறார்கள் யுப்பி வர்க்க அல்பைகள்.

அசுரன்

Thursday, March 17, 2011

நன்றி விக்கிலீக்ஸ், நல்ல இந்திய ஜனநாயகம்!

விக்கிலீக்ஸ் இந்தியா கேட் எப்போ ரிலீஸ் ஆவும்னு ஆவலா ரொம்ப நா காத்திருந்தேன். சரியா தேர்தல் நெருங்கி வற்ற நேரமாப் பாத்து ரிலீஸ் பன்னிருக்காய்ங்க. இதுல அம்பலமாயிருக்கிற விசயங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாதவை அல்ல. ஆனால் அவை அவர்களின் சொந்த வாக்குமூலங்களாக ஆணித்தரமாக அம்பலமாகியிருக்கின்றன என்பதுதான் இங்கு விசயம். என்னென்ன அம்பலமாகியிருக்கின்றன?

1) இந்திய அமைச்சரவையை அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்க மாற்றியுள்ளனர். இந்தியாவை அமெரிக்காரன் தான் ஓட்டிட்டு இருக்கான்.




2) அமெரிக்காவுடனான அணு ஒப்பந்த்தத்தை பாரளுமன்ற பன்றித் தொழுவத்தில் நிறைவேற்றிட அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பணம் கொடுத்துள்ளனர் காங்கிரசு கட்சியினர் . அமுக்கான் பாண்டியன் பிரதமரிலிருந்து அத்தனை அயோக்கியனும் இதற்காக அலைஞ்சிருக்கானுங்க.

வாஜ்பேயியோட மருமகப் பிள்ளை மூலம் பாஜக ஓட்டுக்களை வாங்கவும் முயற்சி நடந்துள்ளது. பாஜகக்காரன் வருவான்னு காங்கிரசுக்கு முன் அனுபவம் இருந்தனாலத்தான் அவிங்க முயற்சி செஞ்சிருக்கானுங்க. அந்த முன் அனுபவம்: பவர் புரோக்கர் நிராராடியாவின் கைங்காரியத்தால் ரிலையன்ஸ் அம்பானிக்காக முன்பு ஆதரவு ஓட்டுப் போட்டது எதிர்கட்சி பாஜக(நிரா ராடியா டேப்). ஆனால், அணு ஒப்பந்த்தின் போது பாஜக நல்லவன் வேசம் கட்டிக் கொண்டதற்கு பின்னணி எனன்வென்பது இன்னும் தெரியவில்லை (நாம எதிர்த்தாலும் பாஸ் ஆயிரும்னு தெரிஞ்சனாலக் கூட இருக்கலாம்). இங்கு கவனிக்க வேண்டிய விசயம், அமெரிக்காரனுக்காக காங்கிரசுக்காரன் நூற்றுக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து ஓட்டு வாங்குகிறான் எனில் இது பேரு ஜனநாயகமாய்யா? அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட இந்திய பாராளுமன்றக் கிளைக்கும், இன்றைக்கு அமெரிக்கா செனட்டுக்கு உட்பட்டு வேலை செய்யும் இந்திய பாராளுமன்றக் கிளைக்கும் என்ன வித்தியாசம்?

3) இலங்கையில் ஈழ இன அழிப்புப் போரின் இறுதிக் காலங்களில் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களையெல்லாம் திசைதிருப்பி இலங்கை சிங்கள இனவெறி அரசைப் பாதுகாக்கும் வேலையை செய்திருப்பவர் திருவாளர் 'உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்' இந்தியா அவர்கள் என்று அமெரிக்கத் தூதரக கேபிள் உரையாடல் பதிவுகள் அம்பலமாக்கியிருக்கின்றன.


இது மட்டுமில்லாமல் விளக்குப் பிடிக்கும் மூன்றாம் தர மாமா வேலையும் பார்த்துள்ளது நமது பெருமை மிகு பாரத மாதா கி ஜே. விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து இலங்கையைப் பாதுகாக்க இந்திய ராடார்களுக்கு வலுவில்லை என்பதால் அமெரிக்காவின் உதவியைக் கேட்டுள்ளனர் சிரிலங்காப் படையினர் அந்தத் தகவலும் விக்கிலீக்கில் வெளிவந்துள்ளது. இதன் அர்த்தம் இந்தியா அங்கு ராடார் கொடுத்து உதவியுள்ளது என்பதுதான்.



4) நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் வெற்றியை முறியடிக்க அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகள், உள்ளடி வேலைகள் விக்கிலீக்ஸால் அம்பலமாகியிருக்கின்றன. ஏற்கனவே நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட (அப்சலூயுட் மெஜாரிட்டி, ரிப்பெரசன்டேட்டிவ் ஒதுக்கீடு கொண்ட அரசியலமைப்புச் சட்டம் இயற்றும் தேர்தல் அங்கு நடந்துள்ளது. இந்தியாவில் அப்படி ஒன்று நடக்கவேயில்லை ஆயினும் நாம் ஜனநாயகமாம்) நேபாள அரசை சீர்குலைக்க அங்குள்ள இந்தியத் தூதரகம் சதி வேலை செய்தது சமீபத்தில் இதே 'தி இந்து'ப் பத்திரிக்கையில் அம்பலமானது கவனத்தில் கொள்ளத்தக்கது.



5) மியான்மாரில் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடும் தலைவர் ஆங் சன் சூ கிய் வீட்டுச் சிறையில் இருந்தார். அவரை கைவிட்டு விட்டு அங்குள்ள ராணுவ சர்வாதிகார கும்பலுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது 'ஜனநாயக இந்தியா' அரசு.



6)
 தேச பக்த வேசம் போடும் பயங்கரவாத கட்சியான பாஜகவின் அமெரிக்க எதிர்ப்பு ஏமாற்றும் விக்கிலீக்ஸில் அம்பலமாகி சிரிப்பாய் சிரிக்கிறது. அயோக்கியக் கிரிமினல் புணந்தின்னி சொறிநாய் அத்வானி தனது ஹிட்லர் மீசையில் மட்டுமல்ல பொய், மோசடி, சுத்துமாத்துக்களிலும் ஹிட்லருக்குக் குறைவில்லாத 420  என்பதையும், ரெட்டை நாக்குப் பீப் பொறுக்கி என்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. வெளிய தேசபக்த வீறாப்புப் பேசி அமெரிக்காவை  எதிர்த்துவிட்டு உள்ள போயி அவனோட கால்ல விழுந்து கதறிருக்கானுங்க இந்த காவி டவுசர் டப்பா மண்டையங்க.

இத விட அசிங்கம் நம்ம ஆர்எஸ்எஸ் கியிஞ்ச கோமனம் வாஜ்பேயிய பத்தின விசயம்.

நாம என்னவோ மன்னுமோகன் சிங்தான் பெரிய பூட்ஸ் நக்கினு நினைச்சுட்டு இருக்கோம், ஆனா அவன விட பெரிய பூட்ஸ் நக்கி வாஜ்பேயின்னு அமெரிக்காரனே  சர்டிபிகேட் கொடுக்கிறான். அத்தோட நில்லாம, காங்கிரசுக்காரன விட பாஜகக்காரன் இருந்தா இந்த நாட்ட இன்னும் சீக்கிரமாக் கூட்டிக் கொடுத்துறுப்பானுங்களேன்னு வருத்தப்படறான் அமெரிக்காக்காரன். இதுதாம்பா ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் சொல்லும் இந்து தேசியம்.

ரெட்டை நாக்கு காவி கும்பலின் அமெரிக்க தேசபக்தி
 


இது  தவிர பிரதமர் அலுவலகத்தில் மலையாள மாபியா(அதிகாரிகள்தான்) கோட்டமும் அம்பலமாகியுள்ளது.


இன்னும் நிறைய வரும். நண்பர் மா. சிவக்குமார் போன்றோர் இங்கு ஏதோ ஜனநாயகம் நிலவுவது போல அவ்வப்போது திடீர் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அருள்வாக்குக் கொடுப்பது வழக்கம். அவர்களின் சிந்தனைக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

இன்னொருவருக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். பெயரில் கம்யூனிசத்தை வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும், தனது வரலாறு முழுவதும் கட்சி மாறி கட்சி மாறி காவடி தூக்குவதற்கு மயிர் பிளக்க வியாக்கியானம் கொடுப்பதை மட்டுமே செய்துள்ள சிபிஎம்யைச் சேர்ந்த தோழர் மாதவராஜ் அவர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பனம்.

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

இந்தியாவில் ஜனநாயகம் நிலவுது... ஜனநாயகம் நிலவுது....

இந்த மொற நாங்க காவடி தூக்குற கட்சிக்கே ஓட்டுப் போட்டா

இந்த தடவயாவது.. நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது...


ஸார் டேப்பு அந்து ரொம்ப நேரம் ஆச்சி....


நன்றி தி இந்து

அசுரன்

Thursday, January 20, 2011

உச்சிக் குடுமி மன்றத்தின் ஆர் எஸ் எஸ் தீர்ப்பு - தாராசிங்

ச்சரிக்கை செய்திருந்தது போலவே உச்சிக்குடுமி நீதிமன்றம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் தாராசிங்கிற்கு மரண தண்டனையை நிராகரித்துள்ளது. மேலும், 11 ஆர் எஸ் எஸ் கிரிமினல்களின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது.

""
1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.

இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
"" (புதிய ஜனநாயகம் 2010)

2005ல் இப்படியென்றால், 2010ல் உச்சிக்குடுமி மன்றம் இன்னும் ஒரு படி மேலே சென்று, மத மாற்றம்தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்ற அரியதொரு ஆர் எஸ் எஸ் கண்டுபிடிப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.

"We hope Mahatma Gandhi's vision of religion playing a positive development integrating into a prosperous nation will be realized. There is no justification from interfering in someone's belief through force, conversion or false premise that one religion is better than the other."

இதைத்தானே ஆர் எஸ் எஸ்ம் சொல்லுது? அதாவது இனிமே எவனாவது மதமாற்றத்திற்கு பிரச்சாரம் செய்தால் கொலைகள் நிகழும் என்று ஆர் எஸ் எஸ்ன்  குரலில் சொல்கிறது உச்சிக்குடுமி மன்றம்.

தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், ஆர் எஸ் எஸ்-பஜ்ரங்தள்ளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவே அவனுக்கு ஆயுள் தண்டனை. அதே நேரத்தில் பினாயக் சென்னுக்கோ அவர் அரசின் அயோக்கியத்தனத்தை அமைதி வழியில் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே அவருக்கெதிராகக் கொடுக்கப்பட்ட எல்லாமே பொய் ஆதாரங்கள் என்ற போதும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அயோக்கியத்தனத்துடன் ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரன் கூட கொஞ்சம் நேர்மையா இருந்தானே?

இப்படி, நீதிமன்றங்களே ஆர் எஸ் எஸ்ன் பினாமிகளாக இருக்கும் போது ஆப்டர் ஆல் பத்ரி சேஷாத்ரியின் கிழக்குப் பதிப்பகமும், பா.ராகவனும் ஆர் எஸ் எஸ் பினாமிகளாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

தங்களை நடுநிலைவாதிகள் என்றும், இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஏதோ ஒன்று, எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதாகவும் அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

அசுரன்


காவிக் கறை படிந்த தீர்ப்புகள்



இது துரோகத்தின் விளை நிலம்!


பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!


பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!


டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!


சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!


அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!

Friday, December 10, 2010

விக்கிலீக்கை ஆதரிப்போம்!!

மீபத்தில் விக்கிலீக் வெளியிட்ட ரகசிய அமெரிக்கத் தூதரக உரையாடல்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. உலகிலுள்ள பல்வேறு அரசுகள், குறிப்பாக யுத்தவெறி பிடித்த அமெரிக்க அரசின் ரகசிய அயோக்கியத்தனங்களை துகிலுரித்தன விக்கிலீக்கின் இந்தச் செயல்பாடுகள். இதனைத் தொடர்ந்து கடும் கோபமுற்றுள்ள அமெரிக்கா விக்கிலீக்கின் ஸ்தாபகர் ஜூலியன் ஆசென்ஜை போலியான பாலியல் பாலாத்கார குற்றத்தில் லண்டனில் கைது செய்துள்ளது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.










இது தவிர விக்கிலீக் தளத்திற்கான பணப்பட்டுவாடாவை கையாண்டு வந்த விசா, மாஸ்டர் கார்டு மற்றும் பே பால் போன்ற தனியார் நிறுவனங்கள் தற்போது தமது சேவைகளை தீடிரென்று நிறுத்திக் கொண்டுள்ளனர். விக்கிலீக் தளம் செயல்பட்டு வந்த அமேசான் வழங்கி தனது சேவையை தடை செய்து விட்டது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், விக்கிலீக் சட்டவிரோதமான செயலில் இறங்கியுள்ளது என்பதே ஆகும். இது நகைப்புக்குரியது, ஏனேனில் ரகசிய ஆவணங்களை பத்திரிகைகளில் வெளியிடுவது சட்டவிரோதமானது அல்ல.










மேலும், அமெரிக்கா மற்றும் அதன் அல்லக்கை நாடுகளின் சகல மூன்றாம்தர இணையப் பொறுக்கிகளும் தற்போது விக்கிலீக்கின் இணையச் செயல்பாடுகளை முடக்க சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் பல்வேறு இணையக் திசைதிருப்பித் தளங்களில் (மிரர் சைட்டுகள்) தற்போது விக்கிலீக் செயல்பட்டு வருகிறது. விவரம் இங்குள்ளது: . இவற்றுக்கு எதிராக உலகம் முழுவதிலும் விக்கிலீக்கிற்கு ஆதரவாக ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் இவற்றில் நம்பிக்கை கொண்ட ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். அரசு இணையதளங்களும், விக்கிலீக் எதிர்ப்புத் தளங்களான விசா, மாஸ்டர் கார்டு, அமேசான் போன்றவை விக்கிலீக் ஆத்ராவாளர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.


இன்னிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விக்கிலீக்கை பாதுகாக்க வேண்டிய அவசியம் உணர்ந்து விக்கிலீக்கின் மீது நடந்து வரும் இந்த அநீதிகளை எல்லாருக்கும் பெரும் அளவில் கொண்டு செல்லவேண்டும். விக்கிலீக்கின் போராட்டத்தில் அதற்கு பக்கபலமாக நிற்க வேண்டும்.

பதிவர்களாகிய நாம் விக்கிலீக்கை ஆதரிப்போம் என்ற லோகோவை நமது தளங்களில் ஒட்டியும், பேஸ்புக், டிவிட்டர்களிலும், இமெயில்களிலும் விக்கிலீக் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டும். நேர் உரையாடல்களில் இது குறித்து பேசியும் தமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளனர்.

தோழமையுடன்,
அசுரன்

விக்கிலீக் லோகோ:






wikileaks facebook: http://www.facebook.com/wikileaks#!/wikileaks?v=wall

தடையை மீறி விக்கிலீக்: http://www.wikileaks.ch/mirrors.html

விக்கிலீக்ஸ் பற்றிய ஒரு தொடர் பதிவு:

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 8

Saturday, November 13, 2010

பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!

மியான்மார்ல ராணுவ ஆட்சியாம். என்ன கொடுமை பாருங்க 15 வருசமா ஆங்சான் சூகியி என்ற தலைவரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனராம். இப்போதான் ரிலீசே செஞ்சிருக்காங்க. ராணுவ ஆட்சின்னா எப்படி இருக்கும்? நம்ம மாதிரி 'ஜனநாயாக' நாட்டுல இருக்குறவங்களுக்கு அந்த கஸ்டம் புரியாதுதான். இப்படியும் பலர் பெருமிதத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.

அது சரி. ஆங்சான் சூகியியாவது தற்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் சர்மிளா. அவரை கைது செய்து 10 வருடங்களாகின்றன. அவருக்கு என்று விடுதலை? 60 வருட ஜனநாயகம் சர்மிளாவுக்கு தராததை, மியான்மார் ராணுவ ஆட்சி ஆங்சான் சூகியிக்கி தந்திருக்கு என்று சொல்லலாமா?

ஐரோம் சர்மிளா




இந்திய ராணுவம் - ஊர் மேயும் மைனர் பொறுக்கிகள்


ஜம்மு-காஷ்மீரிலும், மணிப்பூரில் 1961லிருந்தும், பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் 1972லிருந்து ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடுங்கோலாட்சிதான் நடக்கிறது. அரசே ஒத்துக் கொண்ட படி இதுவரை 20,000 பேருக்கும் மேல் காணாமல் போயுள்ளனர் மணிப்பூரில். தேச சேவை செய்வதாகக் கதை விட்டுக் கொண்டு தேக சேவை செய்யும் ராணுவப் பொறுக்கிகள் மீதுள்ள 458 வழக்குகளை விசாரிக்கக் கோரியுள்ளது ஜம்மு காஷ்மீர் அரசு. இன்று இத்தகைய ராணுவ ஆட்சி தண்டகாரன்யா, மத்திய இந்தியா, மேற்கு வங்கம் என விரிவாகி வருகிறது. நிலைமை இப்படியிருக்கு ஈயம் பித்தளையைப் பார்த்து பல்லிளித்த கதையாக இந்திய ஜனநாயகம், மியான்மார் ராணுவநாயகம் என்று வெத்துப் பெருமை பேசி இளித்துக் கொண்டழைகிறார்கள் சிலர்.

நாடாளுமன்றத்தில் படுத்துபுரளும் ஒரு எம். பி.



பன்றித் தொழுவத்தில் படுத்துப் புரளும் சில பன்றிகள் (பன்னினும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரிஎம்.பி.னும் சொல்லலாம்)

பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வைத்தால் அது #$%டேஸ்@#@ திங்காமல் இருந்துவிடப் போகிறதா என்ன? பன்றித் தொழுவத்துக்கு செண்ட் அடிச்சி நாடாளுமன்றமென்று பேர் வைத்தால் அது மியான்மார் ராணுவ ஆட்சியிலிருந்து இந்திய போலி ஜனநாயகத்தை வித்தியாசப்படுத்திவிடுமா என்ன?

அசுரன்

Related:

Irom And Her Sisters


Murder In Plain Sight

Irom And The Iron In India’s Soul

Tuesday, October 26, 2010

டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!

ருந்ததிராய் மற்றும் கிலானி இருவரையும் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்ய வேண்டும் என்று மதச்சார்புள்ள பாஜகவும், 'போலி கம்யூனிஸ்டுகளின் அக்மார்க் முத்திரையுடன்' மதசார்பற்றதாக காட்டப்படும் காங்கிரசும் ஒரே களேபாரம் செய்தன நேற்று. பிரச்சினை என்னவென்றால், 'விடுதலை ஒன்றுதான் தீர்வு' (Azadi - The Only Way) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்ற பேருண்மையை அவர்கள் இருவரும் பேசிவிட்டார்கள். அதுவும் டெல்லியில். குறிப்பாக அருந்ததிராய் சொன்னது #$த்தில் சுண்ணாம்பு தடவியது போலாகிவிட்டது: "காஷ்மீர் எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது".

இந்தக் கருத்தரங்கம் நடந்த முடிந்தவுடன், உள்துறை அமைச்சரை சந்திக்க ஓடி வந்தனர் எதிர்கட்சி பாஜகவினர். உள்துறை அமைச்சரும் விடியோ ஆதாரங்களைப் பார்த்து நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்துள்ளதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்.


டீச்சர்.. அவன் என்னக் கிள்ளிட்டான் - கோள் மூட்டும் துஸ்டத்தனமான சிறுமி


மனித உரிமை என்ற பெயரில் பிரிவினைவாதிகளையும், நக்சல்களையும் ஆதரிக்கிறார்கள் அருந்ததி ராய் போன்றோர் என்று மதவாதிகளையும், காவி பயங்கரவாதிகளையும், தேச விரோதிகளையும், நாட்டின் எதிரிகளையும் வைத்து கட்சி நடத்தும் பாஜக குதியோ குதி என்று குதிக்கிறது.

வரலாறு முழுவதும் இந்துத்துவத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பாத்திரம் ஏற்றுள்ள காங்கிரசு, இதற்கும் வாசித்துள்ளது. காங்கிரசுத் தலைவர் சத்யப் பிரகாஷ் மால்வியா அருந்ததிராய் தனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார். சட்ட அமைச்சர் மொய்லி, 'ரெண்டு பேரும் இப்படிச் சொன்னது ரொம்ப துரதிருஷ்டமானது' என்று சொல்கிறார். யாருக்கு துரதிருஷ்டம்? யாருக்கோ.... என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் பேசிக் கொள்வார் போல என்று நினைத்தால் அடுத்த வரியில் சொல்கிறார், 'பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கத்தான் செய்யுது.. ..அதுக்காக மக்களோட தேசப் பற்றுணர்வை புண்ணாக்கும் விதமாகப் பேசக் கூடாது' என்று தொடர்கிறார். யாருக்கு துரதிருஷ்டம் என்று தெளிவாகவே எச்சரிக்கை செய்து விட்டார்.

பேச்சு சுதந்திரம் பற்றி மொய்லி சொல்வது இருக்கட்டும், ஜான் ஸ்டுவர்ட் மில் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்ப்போம். ஜான் ஸ்டுவர்ட் மில் யாரென்று தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், எனக்கும் அவர் யாரென்று தெரியாது. பேச்சு சுதந்திரம் என்பது என்னவென்றால், 'ஒருவருடைய கருத்தினால் பலருக்கு துன்பம் ஏற்படுவதை தடுப்பது என்ற நோக்கத்தில் மட்டுமே அவருடைய வாயை பலவந்தமாக அடைப்பதை நியாயப்படுத்த முடியும்' என்கிறார்(நன்றி: தி இந்து - அக்டோபர் 27, 2010 தலையங்கம்). எடுத்துக்காட்டுக்கு நம்ம நண்பர் அதியமானின் கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் அதை அவர் பேசும் உரிமை அவருக்கு உண்டு என்ற உண்மையை நான் அங்கீகரிப்பதாகும். இதைத்தான் அருந்ததி ராயும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார், 'மதவெறி படுகொலையாளர்களாயும், மொத்த மொத்தமாக படுகொலைகள் செய்தவர்களையும், ஊழல்வாதிகளையும், கொள்ளையர்களையும், பாலியல் வன்புணர்வாளர்களையும், ஏழைகளைச் சுரண்டி கொழுப்பவர்களையும் சுதந்திரமாக அலைய விட்டு விட்டு, நீதி வேண்டும் என்று கேட்க்கும் என்னைப் போன்றவர்களை சிறையிலடைக்க முயலும் இந்த தேசத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன்' என்று. கிலானி இன்னும் ச்ஜிம்பிளாக முடித்துக் கொண்டார், 'எம்மேல ஏற்கனவே 70 கேசு இருக்கு இது 71வ்து' என்று.


இந்த லாவணிகள் எல்லாம் முடிவதற்குள்ளாக அருந்ததி ராயையும், கிலானியையும் கைது செய்வது பற்றிய பரிசீலனைகளை காங்கிரசு முடித்துக் கொண்டு ரிசல்டை அறிவித்துவிட்டது. இதுக்கெல்லாம் கைது செய்ய முடியாது என்று. சரி, உண்மையிலேயே காங்கிரசு பேச்சு சுதந்திரத்தை மதித்துத்தான் இந்த முடிவை எடுத்ததா? இல்லை நண்பர்களே, அத்வானி, மோடி போன்ற கிரிமினல் பாசிஸ்டுகளை பெருமைமிக்க தலைவர்களாக அலைய விடும் காங்கிரசு, எளிய உண்மைகளை உரக்க பேசிய குற்றத்திற்காக சீமான், பினாயக் சென், ஹிமான்சு குமார், ஐரோம் சர்மிளா உள்ளிட்ட பலரை சிறையிலடைத்தும், அடித்து மிரட்டியும் ஒடுக்கியுள்ளது.

அருந்ததிராய், கிலானி இருவரையும் சதி செய்ய முயன்றதாகக்(124A) கூறி கைது செய்யவே டெல்லி போலிசுக்கு முதலில் மத்திய காங்கிரசு அரசு பரிந்துரைத்துள்ளது. பிறகுதான் பின் வாங்கியுள்ளது.

அருந்ததிராய் விசயத்தில் அவரை முடக்கிப் போட நடந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதைத் தாண்டி இதில் காங்கிரசின் ஜனநாயக முகம் எதுவும் இல்லை. காஷ்மீர் மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களும், அருந்ததிராயின் செல்வாக்குமே காங்கிரசை பதுங்கித் தாக்க அறிவுறுத்துகிறது. சுருக்கு இறுகுகிறது, வாயை அடைத்துக் கொள் என்று சாத்வீகமாக அருந்ததிராயை மிரட்டுவது ஒன்றுதான் இந்த விசயத்தை பொறுத்த வரை காங்கிரசின் அதிகபட்ச இலக்கு. மிரட்டல் அருந்ததிக்கு மட்டுமல்ல, மனசாட்சியுள்ள எல்லாருக்கும்தான்.

மக்களின் வெறுப்பை மேலும், மேலும் சம்பாதித்து நாடு முழுவதும் அம்பலப்பட்டுப் போயுள்ளது இந்திய அரசு. இந்நிலையில் பெரும் பீதியுற்றுள்ள அரசு தனது பாசிச அஸ்திரங்களைத்தான் ஒரேயடியாக நம்பியுள்ளது. எனவேதான் தன்னை நோக்கிய சிறு சலசலப்பையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிறது. அதை தேசப் பற்று என்று நியாயம் பேசுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் பிரச்சினைகளுக்காக களம் இறங்கிப் போராடிய பல்வேறு ஜனநாயக சக்திகளை சமீப காலங்களில் கைது செய்தும், மிரட்டியும் முடக்கிப் போட்டுள்ளது இந்திய அரசு(தெஹல்கா). சீமான் கைதின் போது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் மையக் கருவும் இதுதான், 'சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே'.

பன்னாட்டு கம்பனிகளுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களைக் கொல்லும், காங்கிரசும், சிபிஎம்மும் ஒரு பக்கம் என்றால், அதே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களை மதத்தின் பெயரால் கொல்லும் பாஜக இன்னொரு பக்கம். இதுதான் இந்திய 'ஜனநாயகம்'. இப்படி அரசியலமைப்புச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்துத்துவத்திற்கும் மீறப்படுமானால் அது தேசப்பற்றுக்கு விரோதமானது அல்ல என்பதே இவர்களின் நியாயம். தேசப்பற்று என்றால் என்னவென்று இந்தச் சிறுபிள்ளைகளுக்கு சரியான வகையில் பாடம் புகட்டுவதே ஜனநாயக சக்திகளின் இன்றைய பெரும் கடமையாக முன்னெழுந்துள்ளது.

அசுரன்

Related Posts with Thumbnails