TerrorisminFocus

Saturday, February 25, 2012

வங்கிக் கொள்ளையன் மாட்டிக் கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்!!..

சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் போலி மோதலில் போலீசாரால் கொல்லப்பட்டது நமக்குத் தெரியும். வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் மொத்தமாக கொள்ளையடித்தவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கி போலீசார் தமது 'நீதிபரிபாலனத்தை' நிலைநாட்டியுள்ளனர். தமிழக போலீசின் இந்த 'அருஞ்சாதனை' நிகழ்ந்த காலத்தில்தான் நாமும் இங்கு வாழ்ந்தோம் என்பதே 'பெருமைக்குரிய' விசயம். ஆனால், சென்னை போலீசின் கடமை இத்துடன் முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் 'கணக்கை' முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது. அது வேறு யாருமல்ல, கில்மா காலேண்டர் புகழ் சாராய மல்லையாதான் அந்தக் கொள்ளையன்.


ஏற்கனவே என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்

கொள்ளைக்காரன் மல்லையா - என்கவுன்டர் வெயிட்டிங் லிஸ்ட்

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமானப் பயணச் சேவை வழங்கி வரும் இந்த கொள்ளைக்காரன் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள மக்களின் பணத்திலிருந்து இது வரை ஆட்டையப்போட்டுள்ள தொகை 7000 கோடிகளுக்கும் மேல். இது தவிர கிங்பிஷர் ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் 44 லட்சம், வருமான வரி 422 கோடிகளையும் கொள்ளையடித்துள்ளான் இந்த கேடி பக்கிரி. கிங் பிஷர் ஊழியர்களின் வருமான வரி 42 கோடிகளையும் அரசுக்கு கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளான் இந்தக் கிரிமினல். 2011 இறுதியில் பணமில்லாமல் தொங்கிச் சரிந்தது கிங் பிஷர் நிறுவனம். உடனே கோடிக்கணக்கில் கொட்டி கைதூக்கி விட்டன இந்திய வங்கிகள். இந்த வகையில் SBI மட்டும் 1457 கோடி கடனாகவும், 180 கோடிகள் கிங் பிஷர் பங்குகளை(5.67% share - இதன் இன்றைய மதிப்பு வெறும் 76 கோடிகள்) துட்டு கொடுத்து வாங்கியதன் மூலமும் கொட்டியது (மொத்தம் 1650 கோடிகள்). இதே போல தனியார் வங்கியான ஐசிஐசிஐ 430 கோடிகள் கடனாகவும், 5.3% பங்குகளை துட்டு கொடுத்து வாங்கியும் உள்ளது. 
 
குதிரை குப்புறத் தள்ளியதோடல்லாமல் குழியும் பறித்த கதையாக, மொத்தத்தில் 19 வங்கிகள் மக்களின் சேமிப்பிலிருந்து பல்லாயிரம் கோடிகளை கடனாக கொடுத்துள்ளதுடன் அல்லாமல், நஷ்டத்தில் ஓடும் இந்நிறுவனத்தின் 23% பங்குகளையும் வாங்கியுள்ளன. 23% பங்குகளை வைத்துள்ள இவ்வங்கிகளின் கூட்டமைப்பு கிங்பிஷரின் செயல்பாடுகளை முறைப்படுத்தி அதனை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முயற்சி செய்தனரா என்றால் இல்லை. காரணம் இந்நிறுவனம் ஒரு மூழ்கும் கப்பல் என்று தெரிந்தேதான் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொட்டியுள்ளனர். செப்டம்பர் 2011னில் கனடா நாட்டு நிறுவனமான வெரிடாஸ் கிங்பிஷரின் யோக்யதையை அம்பலப்படுத்தி அது ஒரு '420' நிறுவனம் என்று அறிவித்துள்ளது. இதோ இப்போது பிப்ரவரி 2012ல் மீண்டும் ஒருமுறை கடன் கொடுங்கள் அய்யா என்று கொள்ளையடிக்க கிளம்பியுள்ளான் மல்லையா. இப்படியாப்பட்ட நிறுவனத்துக்கு வங்கிகள் மீண்டும் கடன் கொடுத்து கை தூக்கிவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிறது ரிசர்வ் வங்கி.

இன்றைக்கு 19 வங்கிகள் கிங் பிஷரில் கொட்டிய கோடிக்கணக்கான பணம் கணக்குப் புத்தகத்தில் மட்டும் இருக்கும் பணமாக மாறிவிட்டது(non performing asset). நிலைமை இப்படியிருக்கு இப்போது இன்னொரு முறை கிங்பிஷருக்கு 1500 கோடிகளை கொடுத்துள்ளது SBI. ஊர் பணத்தை எடுத்து உலையில் போடுவது போல, கவனிக்கவும்  நண்பர்களே,  SBIன் பிம்பிலிக்கிபியாப்பியான முதலீடுகளில் பெரும்பகுதி முதலீடு கிங் பிஷரில் இடப்பட்டதுதான். 
 
 
 
ஆஹ, நஸ்டம் என்னவோ கடன் கொடுத்த வங்கிகளுக்கும், குப்பைக்கூடைக்குக் கூட தகுதியில்லாத பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கிய பங்குதாரர்களுக்கும், கிங் பிஷர் ஊழியர்களுக்கும்தான், நம்ம சாராய மல்லையாவின் சொத்து மதிப்போ 22850 கோடிகளில் கும்மென்றுதான் உள்ளது. இந்த நாதாரிக்கு கடன் கொடுப்பதே ஒரு கிரிமினல் குற்றம் இதில் இவனது சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் கொடுப்பது என்றால் அப்படி ஒரு கடன் தேவையில்லை என்று சொல்கிறான் மல்லையா. 

கிங்பிஷர் மட்டுமல்ல, மல்லையாவின் பிற குடி-கூத்து நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து வங்கிகளுக்கு மொட்டையடித்துள்ள கடன் தொகை 14000 கோடிகள். டாடா, அம்பானி, மித்தல் போன்ற இப்படியாப்பட்ட மலைமுழுங்கித் திருடர்கள்தான் நாட்டின் பெருமைமிகு குடிமகன்களாக வலம் வருகிறார்கள். 

டாடா, அம்பானி, மல்லையாவுக்கு எப்போது?

பீஹாரில் ஒரு திருடரை(மல்லையாவுக்கே மரியாதை கொடுக்கும்  போது....) போலீசுக்காரன் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்று தண்டனை கொடுத்தான். நாட்டு மக்களின் சேமிப்பையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் 20 அடுக்கு மாட மாளிகைகள், ஹெலிகாப்டர்கள், உல்லாச விடுதிகள், கடலில் மிதக்கும் சொர்க்கம் போன்ற கப்பல்கள், கில்மா கூத்துகள் என உல்லாசமாக கோட்டமடிக்கும் மல்லையா, டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு இந்த தண்டனைகளை யார் கொடுப்பது?

இன்று காலை இந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தியறிக்கை சொல்கிறது, ஆந்திர விவசாயிகள் பலர் கடன் வழங்கிய நிறுவனங்கள் தமக்கு செய்த அவமானங்கள் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று. 1.5 லட்சம் கடன் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தாய் வயிற்றுப் போக்கு வந்த தனது குழந்தையை மருத்துவரிடம் காட்ட அனுமதி மறுக்கப்பட்டாள். ஒரு லட்சம் கடனை திருப்பிச் செலுத்து இல்லையென்றால் உன் பிள்ளைகளை விபச்சாரத்திற்கு அனுப்பு என்று மிரட்டப்பட்டதை எதிர்க்க வழியின்றி தற்கொலை செய்து கொண்டாள் இன்னொரு தாய். 
 
இவர்களின் தற்கொலைகள் நாட்டு மக்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான், 'எங்களுக்கு மானம் ரோசம் இருக்கு நாண்டு கொண்டோம். டாடா அம்பானி மல்லையா உள்ளிட்டவர்களின் முதலாளித்துவ கொள்ளைகளையும், எங்களது தற்கொலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மான ரோசம் இருக்கா? இருந்தால் 'தற்'கொலைகளின் சூத்திரங்களை தலைகீழாக மாற்றுங்கள்' என்பதுதான். மாற்றுவீர்களா?

அசுரன்

(நன்றி தி இந்து மற்றும் நம் கூகிள் உறவினர்கள் எல்லாம்....)
 

அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் ! 

தனியார்மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்! 

 

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !

இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!!

 

 

 

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்  

ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!

நானோ கார் : மலிவின் பயங்கரம் !

2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!

நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!  

ரூ 3,74,937 கோடி ஊழல்!

 

Tuesday, December 06, 2011

அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் சொறிநாய்கள் முல்லைப் பெரியாறு என்றால் மூடிக் கொண்டு போவதேன்?


யப்பனை தரிசிக்கச் சென்ற தமிழக பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்களை தண்டிக்க ஐயப்பன் அவதாரம் எடுத்து வரவேண்டாம், குறைந்த பட்சம் இந்துக்களுக்கு, இந்து ராஜ்யம் காண அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் அடிமடையர்களாவது குரல் கொடுத்திருக்க வேண்டாமா?கொடுக்கவில்லையே? ஏன்? இவர்களின் அகண்ட பாரதத்தில் தமிழர்களுக்கு இடமில்லையா? அல்லது கேரளாவில் தமிழர்களை தாக்கியதே ஆர் எஸ் எஸ் கோமாண்டிகள் என்பதால் வாயை மூடிக் கொண்டார்களா?

‘இந்து’ பக்தர்களை தாக்கியவர்களை எதிர்க்க வக்கற்ற இந்த சொறிநாய்கள் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டு என்று ஆர்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர். ‘இந்து’ தமிழ் பக்தர்களின் வழிபடும் உரிமையை தடுத்ததை எதிர்க்க வக்கற்றவர்கள் சிரிரங்கம் பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம் கொழுப்பேறிய கோயில் உலா சடங்கிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகின்றனர். ஆக, ஆர் எஸ் எஸ்ன் அகண்ட பாரத கோமனத்தின் அடிமடி ஓட்டையிலே கேரள முல்லை பெரியாறு கிழிந்து தொங்குகிறது அதை மூடி மறைக்கக் கூட முயற்சி செய்யாமல் மதவெறி, சாதி வெறி பேசி வளம் வருகிறார்கள் சொறிநாய்கள்.

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் வாழும் தமிழர்களையோ அல்லது தமிழகத்தில் வாழும் கேரள மக்களையோ யாரும் தாக்கவில்லை. சாதாரண மக்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளின் ஊடாக மொழி, இன, மத பேதமின்றி இயல்பாக பழகியே வருகிறார்கள். இவற்றை உடைத்து ஒரு மோதல் நடக்க வேண்டுமென்றால் அது அமைப்பு வழிப்பட்ட முறையினால் மட்டும்தான் நடக்க இயலும். அப்படித்தான் குஜராத்-ஒரிஸ்ஸா-மும்பை இனவெறி தாக்குதல்களாகட்டும், அல்லது காங்கிரசு நடத்திய பஞ்சாப் படுகொலைகளாகட்டும் நடந்துள்ளன.

அத்தகைய அமைப்புகளாக அங்கு மொழி வெறி கிளப்பி சதி வேலைகள் செய்வதில் முன்னணியில் இருப்பவர்கள் ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும், காங்கிரசும். இவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சி பி எம்மு மொழி வெறி கிளப்பி வருகிறது. தமக்கு வோட்டுப் பொறுக்க வசதியான கேரளாவில் மொழி வெறி கிளப்பி தமிழர்களை தாக்கும் இக்கட்சிகள், இங்கு தமிழர்களின் நலன் என்று ராமர் கோயிலையும், கூடங்குளம் அணு உலையையும் முன்னிறுத்தி ஏய்க்கின்றனர்.

மதவெறியும், சாதிவெறியும், மொழி வெறியும் தான் ஆர் எஸ் எஸ் போன்ற இக்கட்சிகளின் மூலமந்திரம். மக்களை பிரித்து ஏய்க்க இது போல தகிடு தத்தம் செய்யும் தேசிய கட்சிகளையும், மத வெறி பயங்கரவாதிகளையும் ஆப்படித்து அடித்து விரட்டினால் மட்டும்தான் முல்லை பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும். அதை செய்ய முதுகெலும்புள்ளவர்கள் அணி திரள வேண்டியுள்ளது.

அசுரன்

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள அரசு வழக்கறிஞர் அறிக்கை

Mullai Periyaru – Environmental impact of Dams and Kerals’s PR Machine

Friday, November 18, 2011

அப்பன் குதிருக்குள் இல்லை - ஆர் எஸ் எஸ்ன் சுய வாக்குமூலம்!!!

குண்டு வைத்து கலவரம் உருவாக்கி, நாட்டை கூறு போட்டு, மக்களை மோத விட்டு ரத்த ஆற்றில் அரசியல் ஆதாயம் தேட சதி செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் மாலேகான் உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் என்பது கடந்த சில ஆண்டுகளில் அம்பலமானது. எங்கே தன் பெயர் தான் கெட்டுவிட்டது, வழக்குகளிலிருந்தாவது தப்பிவிடுவோம் என்று பயந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பு மாட்டிக் கொண்டவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்லி எஸ்கேப் ஆனது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் பிற்பாடு முதலில் சிவசேனாவும், பிறகு பாஜகவும், பிறகு ஆர் எஸ் எஸ்ம் ஒவ்வொருவாராக குண்டு வைத்தவர்களுக்கும், குண்டு வைக்கும் போது செத்தவர்களுக்கும் ஆதரவு(சம்பந்தமில்லை ஆனா ஆதரிப்போம் – இப்படி சொல்வதற்குப் பதில் ரெண்டு சட்டி #$#% சாப்பிடலாம்) தெரிவித்தனர்.

பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் முஸ்லீம் அமைப்புகளும் கூட தடை செய்யப்பட்டன. ஆனால் ஆர் எஸ் எஸ்ன் நேரடி தொடர்பு பல குண்டு வெடிப்புகள், சதிகளில் பல்வேறு ஆதரங்களுடனும், சுய வாக்குமூலங்களாவும் வெளி வந்துள்ளன என்ற போதும் இந்த பயங்கரவாத அமைப்பு இன்னும் தடை செய்யப்படவில்லை. இந்நிலையில், உண்மையான சதிகாரர்கள் (குண்டு வைத்த சுவாமி அசெமானந்தாவின் வாக்குமூலம்) இந்து பயங்கரவாதிகள் என்பதால் மலேகான் குண்டு வெடிப்பு நடந்தவுடனே வழக்கம் போல கைது செய்யப்பட்டு 5 வருடம் சிறையில் வைக்கப்பட்டிருந்த முஸ்லீம்களை இப்போது பெயிலில் விடுவித்தது நீதிமன்றம்.

நேற்று வரை குண்டு வைத்த இந்து பயங்கரவாதிகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறி வந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்போ இப்போது கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகளையும் வெளியே விடுங்கள் என்று சொல்கிறது. அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்வாங்களே அது மாதிரி இல்லை?

நல்லவன் எனில் என்ன செய்ய வேண்டும்? நாட்டுக்கு நேர்மையானவன் எனில் என்ன செய்ய வேண்டும்? மக்கள் மீது அன்புள்ளவன் எனில் என்ன செய்ய வேண்டும்? குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளவனை நொங்கை பிதுக்கி உண்மையை வரவைத்து தண்டனை கொடுங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்? ஆனால் ஆர் எஸ் எஸ் காவி சொறிநாய் என்ன சொல்கிறான் என்றால், குற்றம் செய்தவனையும் வெளியே விடு என்கிறான். உண்மையில் இவனை வெளியே விட்டு வைத்திருப்பதுதான் நாம் செய்கின்ற பெரிய தப்பாக போய்க்கொண்டிருக்கிறது.


அசுரன்

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !

மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!

நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளே மற்றுமொரு நிரூபணம்!!

Tuesday, August 09, 2011

நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளே மற்றுமொரு நிரூபணம்!!

(இந்து-காவி பயங்கரவாத கும்பலின் கொடி)

ஒருவனது மூளை ஆர்எஸ்எஸ் நோயால் பீடிக்கப்பட்டுள்ளதா என்பதை சில வசனங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அவை 'இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இந்துக்களுக்கு நீதியில்லையே', 'சிறுபான்மையினரை குளிர்விக்கும் அரசியல் செய்கிறார்கள்', 'பொலிடிகலி இன்கரக்ட்', 'இந்துக்களை கொன்ற கஷாபை இன்னும் கொல்ல முடியவில்லை? இங்கு மறைமுகமாக ஆட்சி செய்வது முஸ்லீமே'.

இந்த வசனங்களுக்கு எதிர் கேள்வியாக சில விவரங்களை முன் வைத்தால் மேற்படி நபர்கள் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள். இந்து என்று இவன் சொல்லுபவர்களில் நாடு முழுவதும் வியாபித்துள்ள பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களை சாதியின் பெயரால் ஒடுக்குவதும் இழிவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்ன் உயிர்நாடியாய் விளங்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்தான் என்பதையோ, அத்வானி, மோடி போன்ற பயங்கரவாதிகள் நாட்டின் தலைவர்களாகவே உலா வரும் போது கஷாப் குறைந்த பட்சம் சிறையில் இருப்பதுதான் இங்கு ஒப்பிடத்தக்கது என்பதையோ கூட பேசத் தேவையின்றி சமீபத்தில் சில விசயங்கள் நடந்துள்ளன.

குஜராத்தில் முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்தான் நரவெறி பிடித்த பாசிசப் சொறிநாய் மோடி. இப்படுகொலையை விசாரிக்க பல அமைப்புகள் பல மட்டங்களில் உருவாக்கப்பட்டு கடைசியில் அது சிறப்பு புலனாய்வு குழுவிடம்(SIT) கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குழுவோ இப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதிகளுக்கு விசாரணை விவரங்களை அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் சாட்சிகளையும், ஆதாரங்களையும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் உதவியுள்ளது.

பெரிய யோக்யவான் போல வேசம் போடும் காவி சாக்கடையான் குருமூர்த்திக்கும் இதில் தொடர்பு உள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணை விவரங்களை இந்த சொறிநாய்க்கும் அனுப்பியுள்ளது. அவன் இதை வழக்கறிஞர் ராம் ஜெத்மாலினிக்கு அனுப்பி வைத்து குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான அமித் ஷாவிற்கு உதவியுள்ளான். பெரிய நன்னூல் போல ஹிந்துவிலும், துக்ளக்கிலும் கழிந்து தள்ளும் குருமூர்த்தி சொறிநாய்தான் இப்படி கிரிமினல்தனமாக செயல்பட்டுள்ளான். இப்படியெல்லாம் விசாரணை நடத்திதான் இவர்கள் யார் பயங்கரவாதி யார் நல்லவன் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.

குஜராத் வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழு நீர்த்து போகச் செய்கிறது என்றும், இனப் படுகொலையின் போது இந்து மதவெறியர்களை போலீஸு கண்டுகொள்ள வேண்டாம் என்று மோடி ஆணையிட்டதையும் ஐஏஎஸ் அதிகாரி பாட் (இனப்படுகொலையின் போது அவர் உளவுத் துறையில் இருந்தார்) அம்பலப்படுத்தினார் முன்பு. அதற்காக அவர் இப்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்துள்ளது மோடி அரசு.

இவையெல்லாமே காங்கிரசு மத்தியில் ஆளும் போதுதான் நடக்கின்றன. காங்கிரசாகட்டும், பாஜகாவாகட்டும் இவர்கள் கட்சி வேறுபாடின்றி ஆர்எஸ்எஸ் இந்து வெறி சித்தாந்திகளாகத்தான் உள்ளனர் என்பதும், இந்திய அரசு அமைப்பு என்பதே ஆர்எஸ்எஸ்ன் மனசாட்சிதான் என்பதையும் பல முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. அதுதான் இப்போது இன்னும் வலுவாக நிரூபணமாகியுள்ளது.

அன்று 'இரும்பு' மனிதன் வல்லபாய் படேல் என்கிற நேருவின் அல்லக்கை தன்னை ஆர்எஸ்எஸ் வெறியனாக அறிவித்துக் கொண்டான். இன்றோ நரசிம்மராவ் இந்தியா என்பது இந்து தேசம்தான் என்று ஆர்எஸ்எஸ் குரலில் கூவிய செய்தி வெளிவருகிறது. பாபர் மசூதி தீர்ப்பு, ஒரிஸ்ஸா கந்தமால் பஜ்ரங்தள் பயங்கரவாதி தாராசிங் வழக்கு, மும்பை இனப்படுகொலை வழக்கு, குஜராத் இனப் படுகொலை வழக்கு, ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகள், ஆர்எஸ்எஸ் பாஸ் இந்திரேஸ் குமார் குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டுள்ளது பற்றிய வழக்கும் இன்னும் பல்வேறு வழக்குகளில் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்ஐ இந்த அரசு சுட்டு விரல் நீட்டிக் கூட கண்டித்ததில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஏனேனில் நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் காவி சொறி நாய்கள்தான். இவர்களின் நோக்கம் நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கு கூறு போட்டுக் கொடுத்துவிட்டு கமிஷன் காசில் பெரும்பான்மை மக்களைச் சுரண்டி வாழ்வதே ஆகும். இந்த 'நல்ல' நோக்கத்தைத்தான் 'இந்து' என்றும் 'தேசம்'என்றும் 'பாரத மாதா'என்றும் சொல்லி ஏய்க்கிறார்கள். மாமா வேலை செய்யும் இந்த தேசத் துரோக காவி வெறியர்களுக்கு சட்டமும், அரசும், நீதிமன்றமும் தண்டனை வழங்கிவிடும் என்று நம்புவது காக்கா உட்கார பனம் பழம் விழும் என்று நம்பி காத்திருப்பது போலத்தான்.எனவே, வீதிகளில் சொறிநாய்களுக்கு கிடைப்பது என்னவோ அதனை இவர்களுக்கு கொடுக்கும் வகையில் மக்களை அணிதிரட்டுவதே இப்போது அவசர அவசியத் தேவையாய் உள்ளது.

அசுரன்


இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
  
மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

 முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!


18 வருசமா ஆட்டையப் போட்டவங்களும், கடைசியா மாட்டிக்கிட்டவனும்!!

அவனவன் எடுக்குற முடிவு - வாயில ஈ போனா எனக்கென்ன பீ போனா எனக்கென்ன?

Thursday, August 04, 2011

அவனவன் எடுக்குற முடிவு - வாயில ஈ போனா எனக்கென்ன பீ போனா எனக்கென்ன?

வெளிய போற எடியூரப்பாவுக்கு பதில் அவனோட அல்லக்கை கர்நாடகா 'பன்னீர்செல்வம்' சதானந்த கௌடா என்ற ஒரு விளக்கெண்ணைய் மண்டையன் முதலமைச்சராகப் போறானாம். அவன் வந்து உக்காரதுக்கு முன்னாடியே அவன பத்தின ஊழல் செய்தி வந்திருச்சி.

ஆன வரும் பின்னே மணியோச வரும் முன்னேங்கற மாதிரி, பிக்காலிப் பசங்க அத்தனை பேரும் பொறுக்கிகளா இருக்கானுங்க இதுல நல்ல பொறுக்கியாப் பாத்து பொறுக்கி எடுத்து வோட்டுப் போடனும் என்று சில பேரு பொறுக்கித்தனமா சொல்லிட்டுத் திரியுறானுங்க.

ரப்பர் ஸ்டாம்பும் அதன் மேனுபேக்சரரும்


இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம், கல்மாடி என்ற களவாடிய காமென்வெல்த் பொறுப்புள உக்கார வைச்சது பிரதமர்னு சொல்லி பாஜக குத்தாட்டம் போட்டது, பதிலுக்கு பாஜக எம்.பி. கல்மாடிய ரெகமண்டு பன்னதயும், பதிலுக்கு அந்த எம்.பி.ய கல்மாடி ரெகமெண்ட் செஞ்சதையும் அம்பலப்படுத்தியது காங்கிரசு.

திருடா... திருடா...

சுருக்கமாச் சொல்லனும்னா, பிரதமர் மன்னு மோகன் சிங்கோட வார்த்தயத்தான் கடன் வாங்கனும். இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நாக்கப் பிடுங்கற மாதிரி பாஜகவினர் கேள்வி கேப்பாங்களே என்ன செய்யப் போறீங்க என்று மன்னுவிடம் கேட்டதற்கு அவன் சொன்னான், "பாஜக மட்டும் யோக்யமா, அவனும் என்ன மாதிரி ஊரக் கொள்ளையடிச்ச நாதாரிதாங்கறத பேசுவோம்" என்று. இதுதான் உண்மை. இத நேரடியச் சொல்லாம அத்தன பேரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடிக்கிறாய்ங்க.

மன்னுவோட மேற்படி கருத்துக்கு பதிலா பெரிசா புடுங்கப் போறதா சீன் போட்ட பாஜக ஒரு மண்ணையும் செய்யல. ஆஹ, ரெண்டு பேரும் எதோ அக்கிரிமெண்டு போட்டுக்கிட்டு அமைதியாப் போயிட்டாங்க. நடுவில லோக்பால் பேப்பர எரிச்சி இந்த அக்கப்போருக்கு விளக்குப் பிடிச்சிட்டு இருக்காரு நம்ம அன்னா ஹசாரே என்ற அகில இந்தியா டிராபிக் ராமசாமி.

விளக்குப் பிடிச்ச மன்னாரு அகில இந்திய டிராபிக் ராமசாமி


கூட்டுக் களவானிங்க. அவிங்க என்னவோ தெளிவாத்தான் இருக்காங்க. பாருங்க இத்தன அமளிக்கும் காரணம் பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகளின் பகற் கொள்ளையே. மேற்படி விவகாரங்கள் அனைத்திலும் இதுதான் அம்பலமாகியுள்ளது. 2ஜி மோசடியில் 20கோடி டாடா லஞ்சம் கொடுத்தது, கர்நாடக ரெட்டி சகோதரர்கள் கொள்ளையிடவும், ஜிண்டால் (நம்ம ஊரு திருவண்ணாமலை கிட்ட ஒரு மலைய ஆட்டயப் போட்டுருக்காங்க இவிங்க), அதானி போன்ற நிறுவனங்களின் ஆட்டயப் போடவும்தான் கர்நாடகாவில் சர்வகட்சி அயோக்கியர்களும் ஊழல் செய்துள்ளனர். இன்னும் இதுவரையான அனைத்து ஊழல் கொள்ளைகளும் நாட்டின் வளங்களை கொழுத்த முதலாளிகள் கொள்ளையிடவே செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையும் இந்த அமளி துமளி நாடகத்தில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. அன்னா ஹசாரே பிடித்த விளக்குக் கூட பாராளுமன்ற அக்கப் போருக்குத்தானேயொழிய அதன் அடிகொள்ளியான பன்னாட்டு-தரகு முதலாளிகளின் பகற் கொள்ளையை வெளிச்சமிட்டு காட்ட அல்ல.

ஏனேனில் இவர்கள் அனைவருமே மேற்படி முதலாளிகளின் ஏவல் நாய்கள்தான். ஏவல் நாய்களுக்கேயுரிய மனோபாவத்துடன் ஒருத்தனை ஒருத்தன் போட்டுக் கொடுக்கிறார்கள் அவ்வளவுதான் விசயம்.  இந்த நாடகத்துக்கு  முடிவு கட்ட வகையின்றி வாயில் ஈ போவது தெரியாமல் வேடிக்கைப் பாக்குது சனம் இதுதான் சகிக்க இயலாததாக உள்ளது....

அசுரன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!

ரூ 3,74,937 கோடி ஊழல்!

ஊழல் சிறப்பிதழ்!!


Wednesday, August 03, 2011

அம்மானா சும்மாயில்லாடா....

பாசிச வெறியும், மனிதப் பண்புகள் கிஞ்சித்துமற்ற ஆணவமும் கலந்த பேய்தான் ஜெயா என்பதை அனைவரும் அறிவோம். இந்தப் பாசிச பேயின் வாயாலேயே பாசிசச் சட்டம் என்று ஒரு சட்டம் வசவு வாங்கியுள்ளது. ஜெயலலிதா வாயால் பேர் பெற்ற அச்சட்டம்தான் மத வெறி வன்முறை தடுப்புச் சட்டம், 2011.



ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம், சீக்கியர், கிருத்துவர்கள் மீதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதும், மொழிச் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளின் போது மத்திய அரசு நேரடியாக அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொள்ள இச்சட்டம் வகை செய்கிறது. இதன் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் காக்கப்படுவர் என்பதை இச்சட்டத்தின் நோக்கமாக மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு சொல்லுகிறது.



இச்சட்டம் உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் இந்து பயங்கரவாதிகளின் தேசத் துரோக சதிகளையும், கலவரங்களையும் தடுத்துவிடும் என்பது பகல் கனவே. ஆயினும், பேரளவில் கூட இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரானதொரு செயல்பாடு நடப்பதை ஜெயலலிதா கொதித்தெழுந்து எதிர்ப்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

இதற்கு முன்பு மாநில அரசின் அதிகாரத்தை தூக்கியெறியும் சட்டங்கள் பல மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. வாட் வரி விதிப்பு முதல் வட கிழக்கு-காஷ்மீர் மாநிலங்களில் உள்ள ஆயுதப் படை சிறப்புச் சட்டம் வரை பல இவ்வாறானவையே. இவற்றையெல்லாம் பாசிசப் பேய் ஜெயா உளப்பூர்வமாகவே ஆதரித்தவர்தான். மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தை பாசிசம் எனக் குறிப்பிடும் இந்த பூதம்தான் 'பொடா', 'உபா', பசு வதை தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், எஸ்மா, டெஸ்மா போன்ற பாசிச சட்டங்களை எல்லாருக்கும் முந்திக் கொண்டு ஆதரித்துள்ளதுடன், தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமுல்படுத்தியும் உள்ளார்.



சோழியான் குடுமி சும்மா ஆடுமா என்ன? தான் ஒரு பச்சைப் பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே ஓலமிட்டவர்தான் இந்த பாசிசப் பாப்பாத்தி. இவர் இன்றைக்கு முதலமைச்சர் ஆனதில் ஊர்த் திருடன் கலைஞரின் அராஜக ஆட்சிக்கெதிரான மக்களின் வெறுப்பு ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ் பார்ப்பன தேசத் துரோக கும்பல் திட்டமிட்டு எல்லா வலது சாரி(வலது-இடது கம்யூனிஸ்டு வலதுசாரிகளையும் சேர்த்து) சக்திகளையும் பாசிச ஜெயாவின் பின்னே திரட்டியது முக்கியக் காரணமாக உள்ளது.

போன ஜெயலலிதா ஆட்சிகளைப் போல ஜெயாவின் தனிப்பட்ட அகங்காரமும், சசிகலா குடும்பத்தின் அவசரமும் மட்டுமே கூத்தாடும் ஆட்சியல்ல இது. கல்லு குடித்த சொறிக் குரங்கின் ஆட்டத்தைப் போல பாசிச ஜெயாவின் ஆணவத் திமிரும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதியாலோசனைகளும் சேர்ந்து களமிறங்கும் புதுவகைப்பட்ட ஆட்சி இது.



எனவேதான் மிகச் சரியாக மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தின் இலக்கு எதுவாக இருக்க முடியும் என்பதை புரிந்து முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்த முகமூடி ஆட்சி. சமச்சீர் கல்வி வெறுப்பு, ஈழத் தமிழ் ஆதரவு வேசம், இந்து மதவெறி ஆதரவு, போலீஸு ரவுடித்தனம் என ஆரம்பித்த ஒரிரு மாதங்களிலேயே தான் யார் என்பதையும், தனக்குப் பின்னே இருக்கும் காவி நோய் பீடித்த மூளை எந்த வகைப்பட்டது என்பதையும் காட்டியுள்ளார் அம்மையார். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. பாசிச முகமுடிக்கு பின்னே இருந்து ஆடும் ஆர்எஸஎஸ் இந்து மதவெறி கும்பலின் சதிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அரங்கேறும். ஈழத்தாயின் கரங்களை வலுப்படுத்தியவர்கள் எல்லாம் வறுத்தெடுக்கப்படுவார்கள். இருண்ட காலம் பாகம் 3ன் இலக்கு பரிபூரண பார்ப்பன பாசிச தமிழகம் என்பது அப்போதாவது மரமண்டைகளுக்கு உரைக்குமா தெரியவில்லை.


அசுரன்

Tuesday, July 26, 2011

18 வருசமா ஆட்டையப் போட்டவங்களும், கடைசியா மாட்டிக்கிட்டவனும்!!



நேற்று நீதிமன்றத்தில் 2G ஊழல் பற்றி ஆ. ராசா சில விசயங்களை போட்டுடைத்துள்ளார். கேபினெட் அமைச்சகம் அலைக்கற்றையை ஏலம் விடக் கூடாது என்று முடிவெடுத்ததினால்தான், அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விடாமல் கையளித்ததாக ஆ. ராசா சொல்லியுள்ளார்.

மேலும், "நான் பின்பற்றிய முறை தவறானது எனில், 1993லிருந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்த அத்தனை பேரும் இதைத்தான் செய்துள்ளனர், அவர்களும் சிறையிலிருக்க வேண்டியவர்கள்தான்" "பாஜகாவின் அருன் சோரி 26 உரிமங்களையும், தயாநிதி மாறன் 25 உரிமங்களையும், நான் (ஆ, ராசா) 122 உரிமங்களையும் கொடுத்துள்ளோம். இவையனைத்துமே ஏலம் விடப்பட்டு கொடுக்கப்பட்டவையல்ல. அவர்கள் செய்தது தவறில்லை என்றால், என்னை மட்டும் விசாரிப்பது ஏன்?" என்று கேட்டுள்ளார்.

இதைத்தான் பல முறை நாமும் சொல்லி வருகிறோம். உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் வளங்கள் எல்லாம் அடி மாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்கக் கொடுக்கப்படுகிறது என்று. இதில் பாஜக, காங்கிரசு, சிபிஎம், டி எம் சி என்ற பேதம் கிடையாது. அனைவரும் மாமாக்கள் என்று சொல்லி வருகிறோம்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக் கொண்டது ஆ. ராசா எனில் இதே போல அரசு சொத்துக்களை, உரிமங்களை பாஜக காலத்திலிருந்து குறைந்த விலைக்கு விற்றது, இலவசமாகக் கொடுத்தது, கரும்பு தின்னக் கூலி போல தனியார் கையில் காசையும் கொடுத்து அரசு நிறுவனத்தையும் ஒப்படைத்தது போன்ற அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கு டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் அமைச்சகத்தையே வைத்திருந்தார்கள் பாஜக மாமாக்கள்.

இவர்களின் ஆட்சியில் அம்பானி, டாடா உள்ளிட்ட தரகு முதலாளி கும்பல் ஆட்டயப் போடாத எண்ணைய் வயலா(உதா: பன்னா மெத்தா, கோதாவரி)? தொலைத் தொடர்புத் துறை உரிமங்களா (உதா: சிடிஎம்ஏ மோசடி, ISD மோசடி)? இவர்கள் ஆட்சியில் டாடா உள்ளிட்ட கொள்ளைக் கும்பல் ஆட்டயப் போடாத நிறுவனங்களா (BSNL, மாடர்ன் பிரட்)?



அது மட்டுமா, டாடா, அம்பானி போன்ற 'கொழுத்த' ஏழைகளுக்கு கொள்ளையடிக்க வசதி செய்து கொடுப்பதில் எதிர்கட்சி, ஆளும் கட்சி பேதமின்றி தோழமையுணர்வுடன் பாஜக-காங்கிரசு கூட்டணி செயல்பட்டுள்ளதற்கு உதாரணங்கள் ஒன்றா இரண்டா?

பாஜக-காங்கிரசு புனித கூட்டணிக்கு அப்படியொரு உதாரணம் நீராராடியா டேப் விவகாரத்தில் வெளிவந்தது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையை புட்டு புட்டு வைத்தது நீராராடியா டேப்.

கடந்த 18 வருடங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து அள்ளிக் கொடுத்து கொள்ளையிடப்பட்ட நாட்டின் சொத்துக்கள், 73 லட்சம் கோடிகளுக்கும் மேல். இவர்களின் கூட்டுக் களவானித்தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்தான் கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் வயல் ஊழல். 2G ஊழலுக்கு இணையான இந்த ஊழலை கணக்குத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியது. ஆயினும் பாஜகவோ, சிபிஎம்மோ அல்லது வேறெந்த எதிர்கட்சியுமோ இதனை மக்களரங்கிற்கு கொண்டு வந்து காங்கிரசை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யவில்லை.விவகாரம் அத்தோடு முடிவுக்கு வந்தது. ஏனெனில் இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள்.

இதே போல, போன வாரம் கர்நாடக முதலமைச்சர் கோமாளி எடியூரப்பாவின் மெகா ஊழலை அம்பலப்படுத்தினார் லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. பல கோடி ரூபாய்க்கு சுரங்க ஊழலிலும், நில ஊழலிலும் எடியூரப்பா நேரடி தொடர்பிருப்பதை அவரது அறிக்கை அம்பலப்படுத்தியது. இதை வைத்து கர்நாடக எதிர்க்கட்சிகள் பெரும் கலகத்தை உருவாக்கினார்களா என்றால் இல்லை. ஏனெனில் ஹெக்டேவின் அறிக்கை எடியூரப்பாவை மட்டுமல்ல, காங்கிரசின் எஸ். எம். கிருஷ்ணா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி போன்றோரையும் சேர்த்து அம்பலப்படுத்தியிருந்தது. மேலும், எடியூரப்பா மாட்டிக் கொள்வது இது முதல்முறையும் அல்ல. நிலபேர ஊழலிலும், சுரங்க மோசடி ஊழலிலும், சட்டமன்ற குதிரை பேர ஊழலிலும், தேவ கவுடாவின் நாற்காலி சண்டை நாடகங்களில் கோமாளியாகவும் இன்னும் பல கோமாளித்தனமாக செயல்பாடுகளிலும் அவமானப்பட்டவன்தான் இந்த எடியூரப்பா. இதற்கு முன்பே சில முறை நீதிபதி ஹெக்டே இவனை அம்பலப்படுத்தி ஒன்றும் வேலைக்காகவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் அழுததும் உண்டு. இத்தனை நடந்தும் கோமாளி எடியூரப்பா வெட்கமின்றி சிரித்துக் கொண்டேதான் வலம் வருகிறான். இதே காலகட்டத்தில் பயங்கரவாத கட்சியான பாஜகவின் தலைவன் நிதின் கட்காரியின் மகன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடக்கிறது(கொஞ்ச காலம் முன்புதான் மிக ஆடம்பரமான திருமணம் ஒன்றை கட்காரி நடத்தியிருந்தான்).








(இன்னுமாடா நம்மள நம்புறாய்ங்க... அது அவிங்க தல விதி....!!)


இவையெல்லாம் காங்கிரசைப் பொறுத்தவரை ஒரேயொரு அம்சத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், 'நீ மட்டும் யோக்கியமா' என்று வாயடைக்கும் கருணாநிதி டெக்னிக்தான் அது. ஏனேனில், பாஜக மத்தியில் ஆட்சி செய்த போதும் சரி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் போதும் சரி ஊழல், மோசடி புகாரில் மாட்டிக் கொண்ட யாரொருவரையும் பொறுப்பிலிருந்து நீக்கியதில்லை. இது தவிர்த்து இந்த விவகாரங்களில் அத்தனை பேறும் ஒன்றாக கை நனைத்து பன்னாட்டு, உள்நாட்டு கொள்ளைக்கார முதலாளிகளுக்கு திருட்டு சேவகம் செய்துள்ளதால் வாயை மூடிக் கொண்டு விவகாரங்களை குழி தோண்டி புதைக்கவே செய்கின்றனர். சிரித்து கொண்டே வலம் வருவது எடியூரப்பா மட்டுமா? ஆ. ராசா, ஜெயலலிதா, அத்வானி, வாஜ்பேயி, வெங்காய நாயுடு, பா. சிதம்பரம், மன்மோகன், பிரகாஷ் கரத், புத்ததேவு, மோடி என அத்தனை அயோக்கியன்களும்தான் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருகிறார்கள்.

மாட்டிக் கொண்ட திருடர்களும், கொள்ளையர்களும் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருவது எதனால்? அது சுற்றியிருக்கும் மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தால்தான். இங்கு நாம் கடிந்தது கொள்ள வேண்டியது திருட்டு கும்பலின் வெட்கங்கெட்ட நகைப்பையா அல்லது அதை அங்கீகரிக்கும் மக்களின் அரசியல் மொன்னைத்தனத்தையா?

அசுரன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!


ரூ 3,74,937 கோடி ஊழல்!


ஊழல் சிறப்பிதழ்!!



Related Posts with Thumbnails