TerrorisminFocus

Friday, August 18, 2006

பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோ பியா

பத்ரி என்பவர் இந்தியாவில் ஏழ்மை ஒழிப்பில் அக்கறை செலுத்தி அதற்க்கான ஒரு தீர்வாக பொருளாதார அமைப்பு ஒன்றை தனது கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.


பத்ரியின் நல்ல நோக்கங்கள் பாராட்டுக்கு உரியது.

அந்த கட்டுரை நல்ல விசய்ம்தான்.

முதலாளித்துவ வளர்ச்சிக்கு இது போன்ற பொருளாதார அமைப்புதான் இன்றைய இந்தியாவின் தேவை. இத்துடன் துண்டு துக்காடாவாக இருக்கும் நிலங்களை இணைத்து கூட்டுறவு பண்ணைகள் மூலம் ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட முன்னேறிய வடிவத்தில் விவசாய உற்பத்தியும் மாற்றி அமைக்கப்பட்டால், நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு ஒரளவு புதிய ஜன நாயாக புரட்சிக்கு பிந்தைய இந்திய பொருளாதார அமைப்பை ஒத்திருக்கிறது.


புதிய ஜனநாயக பொருளாதார அமைப்புக்கும், பத்ரி கூறிய அமைப்புக்கும் உள்ள மிக மிக முக்கியாமான வித்தியாசம் என்ன என்பதையும், அந்த வித்தியாசங்களின் அடிப்படையில் பத்ரி கூறிய அமைப்பு எப்ப்டி ஒரு உட்டோ பியன் கனவு என்பதையும் விளக்குகிறேன்.


#1) விவசாயத்தை - விவசாயிகளை விரட்டயடிக்காமல், முதலாளித்துவ மயமாக்கும் விசயம் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பில் இல்லை என்பது ஒரு முக்கியமான விசயம்.

#2) மற்றொரு விசயம் இந்த பொருளாதார சீர்திருத்தம், எந்த விதமான அரசு அதிகாரம் செலுத்தும் போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான் இந்த பொருளாதார அமைப்பு வரமா, சபாமா என்பது அடங்கியுள்ளது.


*********
முதல் விசயத்தில் விவாதிக்க ஒன்றுமில்லை. அது வெளிப்படையாக தெரியும் விசயம்.

இரண்டாவது விசய்ம்தான் சிறிது விளக்கம் தேவைப்படுகிறது.

பத்ரி, மேற்சொன்ன பொருளாதார அமைப்பு(விவசாய சீர்திருத்தம் தவிர்த்த) இந்தியா முழுவதும் வீச்சாக அமல் படுத்தப்படுமா?


அமல்படுத்தப்படுவதற்க்கான(இதே வடிவத்தில் இல்லாவிட்டாலும் வேறு வடிவங்களில் - Ex. உலக வங்கி உதவியுடன் தற்பொழுது செயல்படுத்தப்படும் கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள்) சாத்தியம் அதிகமுள்ளது. இதைப் பற்றி இந்த பின்னூட்டத்தின் பிற்பகுதியில் சொல்கிறேன். அவ்வாறு அமல் படுத்தப்படுவதில் இந்தியாவின் வளங்களை கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதியும் அடங்கியுள்ளது என்பதை மட்டும் இப்பொழுது குறிப்பிடுகிறேன்.


இது போல ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மக்கள் தேவைக்காக உற்பத்தி செய்வது தற்பொழுது கூட்டுறவு பண்ணைகளின் கையில் உள்ளதால் அதில் சேகரமாகும் மூலதனம் மீண்டும் மக்கள் நலனுக்கு செலவழிக்கப்படுகிறது.

இதில் குறிப்பிட்ட அளவு தனியார் மூலதனத்தை அனுமதிப்பதும் சரிதான். ஆனால் எந்த அமைப்பில் இந்த கிராம பொருளாதார சீரமைப்பு நடைபெறுகிறது?


இந்தியவின் அரசியல் பொருளாதார மூக்காணங் கயிறு முற்று முதலாக ஏகாதிபத்தியங்களின், MNC க்களின் கையில் இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு நடைமுறைக்கு வருகிறது. (தனித் தனியாக பல இடங்களில்(ஒரு 1000 கிராமங்களுக்கு ஒரு மண்டலம் என்று வைத்துக் கொள்வோம்)).


இதில் தனியார் முதலீடும் வருகிறது. இதன் வளர்ச்சி காலப்போக்கில்(ரொம்ப காலமெல்லாம ஆகாது) கிராம வளங்கள் அனைத்தும், ஒரு சில தனியார் வசம் - ஏற்கனவே சாதி மற்றும் இன்னபிற நிலபிரபுத்துவ பிற்போக்கு தளைகளால் சக்திவாய்ந்தவர்கள் - கையில் சென்று மையப்படுத்தப்படும், இதே நேரத்தில் மக்கள் அரசு என்பதையும் நம்பி இல்லாமல், தங்களது அத்தனை தேவையையும் பணம் கொடுத்து வாங்கப் பழக்கப்பட்டிருப்பார்கள். (இப்படி ஒரு உணர்வுக்கு மக்கள் வந்தடைவதில், MNCக்கு உள்ள அட்வான்டேஜ் என்ன என்பதை கடைசிப் பகுதியில் சொல்கிறேன்.)

இந்த சமயத்தில் பகுதி அளவில் வளர்ச்சியடைந்த அந்த முதலாளிகளை தரகு முதலாளிகள் அல்லது MNCக்கள் விலைக்கு வாங்கி(acquisition) தங்களது சந்தையை விரிவுபடுத்திக் கொள்வார்கள். இந்த இடத்தில் இந்தியாவின் கிராம வளங்களையும், சந்தையையும் கையகப்படுத்தும் ஏகாதிபத்திய தந்திரம் நிறைவடைகிறது.


இதற்க்கு ஏன், ஏகாதிபத்தியங்கள்(WTO, Worl Bank) தலையை சுற்றி மூக்கைத் தொடும் ஒரு process-யை தேர்ந்தெடுக்கிறார்கள்?


#1)இந்தியா மிகப் பெரிய சந்தை. இந்தியாவில் தற்பொழுது MNC க்களின் கையை கிட்டும் அளவில் உள்ள சந்தையே மிகப் பெரிது. ஆனால் அந்த சந்தை இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிக சிறிது(30 கோடி - rough estimation).

மீதியுள்ள 90 கோடி பெரும்பாலும் சிறு முதலாளிகள், அரசு நிறுவனங்கள், கிராம உதிரி உற்பத்தி நிலையங்கள்(துண்டு நிலங்கள் etc) கையில் உள்ளன. இந்த சந்தை ஏகாதிபத்தியங்க்ளின் target.

#2) இந்தியாவின் வளங்கள் - தண்ணீர், நிலம் பிரதானமாக - இன்னும் நிலபிரபுத்துவ பிற்போக்கு கிராம சார்ந்ததாக உள்ளது, இந்த வளங்களை கைப்பற்றை தனது சந்தை தேவைக்கு உபயோகப்படுத்துவது இரண்டாவது target.

இந்த இரண்டு விசயத்திலும் நம்மிடம் போட்டி போடும் நம்மை விஞ்சும் ஒரு நாடு - சீனா.

ஆனால் சீனா அரசு ஒரு கம்யுனிஸ்டு அரசாக இன்று இல்லாவிட்டாலும் கூட, அது ஒரளவுக்கு தேசிய முதாலாளிகளின் நலன்களுக்கான அரசு என்பதை சொல்லிவிடலாம். அவர்களின் சந்தையும், வளங்களும் ஏற்கனவே முதலாளித்துவ உற்பத்தி முறை நன்கு வளரந்த அந்த ஊர் தேசிய முதலாளிகள் கையில் இருப்பதும், MNC - க்கள் இந்தியாவில் செய்வது போல் அங்கு விளையாட முடியாது என்பதும் சேர்ந்து இந்தியாவை போட்டியின்றி முதல் இடத்தில் வைக்கிறது.


ஆக, இப்படி ஒரு மிக மிக முக்க்யாமான ஒரு சந்தையில்- ஒரு வளங்களுக்கான பின் நிலத்தில் , நடைமுறைப்படுத்தப்படும் அவர்களின் சதி திட்டம் வெற்றியை உறுதிப் படுத்தும் விதமாக பல இடங்களில் பரிசோதித்த மாடல்களின் விளைவான ஒரு திட்டமாக இருக்க வேண்டும்.


MNC -க்களுக்கு ஏற்கனவே லத்தீன் அமேரிக்க நாடுகளில் படு மோசமான அனுபவங்க்ள் உண்டு. பல இடங்களில் MNC-க்களின் சேவையால் ஆத்திரமுற்று மக்கள் பல கம்பேனிகளை அடித்து விரட்டியிருக்கிறார்கள் (அப்படி வெளியேறிய கம்பேனிகள் GATS போன்ற ஒப்பந்தத்தின் சரத்துக்களில் உள்ளபடி அந்த அரசாங்கங்களிடமிருந்து நஸ்டயீடு பெற்றுவிட்டன என்பது இன்னோரு கொடுமையான விசயம் - இந்தியாவில் இதற்க்கு உதாரணம் மகாராட்டிர என்ரானுக்கு மின்சாரம் தாயரிக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும் சில நூறு கோடிகள் கொடுத்த விசயம்).
அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டது, மக்கள் விலை கொடுத்து வாங்க பழக்கப்படுத்த வேண்டும் என்பதும், தங்களது பிரச்சனைகளுக்கு அரசையையோ வேறு யாரையுமே நிர்பந்திக்கூடாது எனும் எண்ணத்தை தார்மீக ரீதியாக அவர்கள் மனதில் உருவாக்குவதும். அதாவது தமது பிரச்சனைக்கு தான் தான் காரணம் என்ற உணர்வை மக்களிடம் உருவாக்குவதுதான்.


அதாவது பின்வரும் எடுத்துக்காட்டை பார்க்கவும்,

////

ஒரு தலைவர்: இந்த கம்பேனியின் சுரண்டலை எதிர்த்து போராடி அரசை கேள்வி கேட்டு போராட வேண்டும்.

மக்கள்: அரசு என்னப்பா செய்யும், நாமதான 10 வருச ஒப்பந்தம் ஒரு கோடி ருபாய் வாங்கிக்கிட்டு தண்ணீய அவனுக்கு வித்தோமே. எல்லாம் சட்டப்படி நாம செஞ்ச தப்பு. அந்த கம்பேனிட்ட ஏதாவது பேசி வேலை ஆகுதானு பார்ப்பம். அதவிட்டு போராடுனா, Govt போலிசோட வந்து அடிச்சு நொறுக்கிடுவான் - அரசுக்கு சட்ட ஒழுங்கு ரொம்ப முக்க்யம், அரசு, அவன் கடமையை செய்ய வேண்டாமா?....(அந்த கம்பேனி விலை குறைவாக தண்ணீர் கொடுத்தால் தரம் குறைவாகத்தான் கொடுப்பேன் என்று மோசமான தண்ணீரை கிராமத்துக்கும், நல்ல சுத்திகரிக்கப்பட்ட நீரை ஐரோப்பவிற்க்கும் ஏற்றுமதி செய்யும் - அந்த சமயத்தில் ஐரொப்பாவில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தில் லாபம் பார்ப்பதற்க்காக. இதனை ஒத்த அனுபவம் பொலிவியா கொச்சபம்ப நகரத்தில் நடந்து, மக்களே அணீதிரண்டு அந்த கம்பேனி அடித்து விரட்டினர்.)

////



தண்ணீர் போன்ற அதி அவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க மக்களை பழக்கப்படுத்துதல் என்ற சரத்து GATS ஒப்பந்தத்தில் உள்ள விசய்ம்.

இன்னொரு முக்கிய சரத்து:

லாபத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்(அதாவது புரட்சி, போர் அல்லது வேறு காரணத்தால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டால் அரசு நஸ்டஈடு தர வேண்டும் - Ex: என்ரான்)



பத்ரியின் அமைப்பு ஏகாதிபத்திய சேவை நோக்கி போவதற்க்கும், இதனை ஒத்த புதிய ஜனநாயக பொருளாதார அமைப்பு மக்கள் சேவையை நோக்கி போவதற்க்கும் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று அதிகாரத்தில் உள்ள அரசு எனில்,

இன்னோரு முக்கிய காரணம்,

பத்ரியின் அமைப்பு தவிர்க்க இயலாமல் தனியார்மயத்தை நோக்கிப் போகும்(சந்தை தேவைதான் அதை ஒந்தித் தள்ளும், மக்களின் தேவையல்ல)ஆனால் புதிய ஜனநாயக அமைப்பு முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கான அளவில் தனியார் மயத்தை வைத்துக் கொண்டு அந்த வரம்பை எட்டும் போக்கில் தனியாரின் தேவை சிறிது சிறிதாக சுருங்கி இறுதியில் இல்லாமல் போய்விடும்.

ஆக, மேற் சொன்ன இந்த காரணங்களினால்தான் பத்ரி சிலாகித்து எழுதியிருந்த பொருளாதார அமைப்பு அதன் உண்மையான வர்க்கச் சார்பில் ஒரு கானல் நீராக/ஏகாதிபத்திய சேவை செய்வதாக உள்ளது.


பத்ரி மற்றும் இந்த பொருளாதார அமைப்புக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆனால் இந்த அமைப்பு வெற்றிகரமாக மக்களின் வாழ்வை வளம் செய்ய போதுமான நிலைமைகள் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது பகுத்தறிவாக இருக்காது.

மேலும், பத்ரியே சொல்வது போல் அந்த சிறு பகுதியே 6 கோடி அளவிலான சந்தையைக் கொண்டுள்ளது. அதை MNCக்கள் விட்டு வைக்கும் என்ற நம்பிக்கைக்கு உத்திரவாதம் கொடுக்கும் அள்விற்க்கு நம்மை ஆள்பவர்கள் நேர்மையாக இல்லை என்பதையும், அதாவது சாதரண(commener) மக்கள் நலனை முன்னிறுத்தும் ஒரு அரசு ஆட்சி செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

12 பின்னூட்டங்கள்:

said...

பத்ரி அவர் பதிவில் இட்டிருந்த ஒரு பின்னூட்டம்:

********

1. குத்தம்பாக்கம் பொருளாதார மாதிரி நிலைத்து நிற்குமா அல்லது பண்ணாட்டு / உள்நாட்டு பெரு நிறுவனங்களால் அழிக்கப்படுமா என்ற கேள்விக்கு நம்மால் இப்பொழுது விடை சொல்ல முடியாது.

முதலில் முதலாளித்துவம் பற்றி பலர் சொல்வதை நான் ஏற்கவில்லை. 17-18ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் இயங்கியதிலிருந்து இன்றைய முதலாளித்துவம் நிறைய மாறியுள்ளது. இன்னமும் மாறவேண்டும். ஆனால் வெகுமக்களை நசுக்கி அவர்களை ஓட்டாண்டியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் நோக்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

வெகுமக்கள் சவுகரியமாக இருந்தால்தான், நிறைய வருமானம் பெற்றால்தான், அவர்களது கைகளில் நிறைய உபரி வருமானம் (Surplus Income) இருந்தால்தான், பல நிறுவனங்களின் பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கும்.

2. கிராம மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தாங்களே தயாரிப்பது எவ்வளவு நாள்களுக்குச் செல்லுபடியாகும்? HLL போன்றவர்கள் எவ்வளவு சீக்கிரம் தங்களது பொருள்களை இந்தச் சந்தையில் வந்து குவிப்பர்? 'அந்நியப் பொருள்' தரம் அதிகமாகவும் விலை குறைவாகவும் இருந்தால், அத்துடன் விளம்பரங்கள்மூலம் அறியப்பட்டிருந்தால் கிராம மக்கள் எதை வாங்குவர்?

இன்றைய காலகட்டத்தில் பல பெருநிறுவனங்கள் கிராமங்களைத் தங்களது சந்தையாகவே கருதுவதில்லை. வெகுசில நிறுவனங்களே கிராமங்களை நோக்கிச் சென்றுள்ளன. எனவே அடுத்த பல வருடங்களில் கிராம மக்கள் தங்களுக்குள்ளாகப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பதில் பிரச்னைகள் இருக்காது.

ஆனால் நாளடைவில் கிராமச் சந்தை வளர்ந்ததும் பல நிறுவனங்களும் தாங்களும் அங்கு நுழையலாமே என்று நினைக்கத் தொடங்குவார்கள். அதற்குள்ளாக கிராம மக்கள் வேண்டிய கல்வியறிவும் சிந்திக்கும் திறனும் பெற்றிருப்பார்கள் என்று எண்ணுவோம். அப்பொழுது தங்களுக்கு எது நல்லது, எந்தப் பொருளைத் தாங்கள் வாங்குவது தம்முடைய பொருளாதார வளத்துக்கு உகந்தது என்பதை அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

3. அரசு அமைப்புகள் இந்த முயற்சியை எவ்வாறு எதிர்கொள்ளும்?

என்னிடம் சரியான பதில்கள் இல்லை. ஆனால் இப்பொழுதைய தேவை பஞ்சாயத்துகள் வெகுவாகப் போராடி தங்களுக்கென அதிகபட்ச சுயாட்சியைப் பெற முனைவதுதான். எப்படி மாநிலங்கள் மத்திய அரசுடன் போரிட்டு வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கைத் தங்களுக்கெனப் பெற்றுள்ளனவோ அதைப்போலவே உள்ளாட்சி அமைப்புகள் போராடவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு முறைகள் தொடர்பாக மேலும் பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். இப்பொழுது உள்ளாட்சி அமைப்புகளின் சுதந்தரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த நிலை மாறவேண்டும்.

இது தவிர்த்து தனியார் முயற்சியில் கிராம மக்களை ஒருங்கிணைத்து பொருளாதார முறையில் வலுவானவர்களாக ஆக்குவதை எந்த மாநில அரசும் எதிர்க்க முடியாது. நிறைய முட்டுக்கட்டைகளைப் போட முயற்சி செய்யலாம். ஆனால் இது தேர்தல் பிரச்னையாக உருமாறினால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு நீர்த்துப்போகும்.

said...

நான் மேலேயுள்ள அவரது பின்னூட்டத்திற்க்கு இட்ட பதில் பின்னூட்டம்:

************

பத்ரி,

எனது பின்னூட்டத்தில் உள்ள விசயங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?

சரி இருக்கட்டும் ஒரு வேளை நிதானமாக பதில் சொல்லாலாம் என்று கருதியிருக்க வாய்ப்புள்ளது.


//17-18ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் இயங்கியதிலிருந்து இன்றைய முதலாளித்துவம் நிறைய மாறியுள்ளது. இன்னமும் மாறவேண்டும். ஆனால் வெகுமக்களை நசுக்கி அவர்களை ஓட்டாண்டியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் நோக்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.//

என்ன விதமான மாற்றம் என்பதை சிறிதாக கோடிட்டு காட்டுங்களேன்?

அடிப்படை உற்பத்தி உறவில் ஒரு மாற்றமும் கிடையாது.

இன்னமும் மார்க்ஸ் கணித்த பதையில் முதாலாளித்துவம் வெகு பெர்பெக்ட்டாக நடைபோடுகிறது.

இது குறித்து சமீப காலத்தில் முதலாளித்துவ பத்திரிக்கைகளீலேயே பல கட்டுரைகள் வரத்தொடங்கிவிட்டன...

மெலும் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் இந்த தளத்தில் விவாதம் செய்வீர்கள் எனில் இத்துடன் எனது விவாதத்தை நிறுத்திக்கொள்கிறென். ஏனெனில் முதலாளித்துவம் ஒட்டாண்டியாக்கும் என்பதற்க்கு ஆதராமாகத்தான் அவ்வள்வு பெரிய பின்னூட்டமிட்டேன் அதிலிருந்து ஒன்றையுமே எடுத்துப் பேசாமல் அல்லது தங்களது சொந்த தர்க்க ஆதரங்களை முன்வைக்காமல் //நான் ஏற்றுக் கொள்ளவில்லை// என்று இரண்டே வார்த்தைகளில் கூறுவதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

முதலாளித்துவம் தனது வரலாற்றுக் கட்டத்தை கடந்துm, ஏகாதிபத்திய தந்திரங்கள் மூலம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது குறித்துத்தான் எனது ஆங்கில/தமிழ் பதிவுகளில் கட்டுரைகள் உள்ளன(kaipulla.blogspot.com, poar-parai.blogspot.com)

//வெகுமக்கள் சவுகரியமாக இருந்தால்தான், நிறைய வருமானம் பெற்றால்தான், அவர்களது கைகளில் நிறைய உபரி வருமானம் (Surplus Income) இருந்தால்தான், பல நிறுவனங்களின் பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கும்.//

பிரிட்டிஸ்க்காரன் காலத்தில் நீங்கள் மேற்சொன்ன விசயம் இல்லையா..... ஏன் சுதந்திரம் வாங்கினோம்?

கொஞ்சம் யொசியுங்கள்? சந்தைப் பொருளாதாரம் தனக்கு தேவையென்றால் கல்வியறிவு பெற்ற தொழிலாளர்களையும் கூட உருவாக்க அரசை நிர்பந்திக்கும்(1947-1975 - wellfare அரசுகள் எல்லாம் இந்த கதையும் சொசலிச அபாயமும் செர்ந்து உருவாக்கியதுதான். எனது kaipulla.blogspot.com-ல் indian freedom and Imperialism Immediately after freedom படியுங்கள்). இவற்றையெல்லாம் மீறி இந்த பொருளாதரத்துக்கே இருக்கிறா சாபக்கேடுகள்தான் சமீபத்திய ஸ்டாக் மார்க்கெட் எருமை effect, bubble economy etc.

//இன்றைய காலகட்டத்தில் பல பெருநிறுவனங்கள் கிராமங்களைத் தங்களது சந்தையாகவே கருதுவதில்லை. வெகுசில நிறுவனங்களே கிராமங்களை நோக்கிச் சென்றுள்ளன. எனவே அடுத்த பல வருடங்களில் கிராம மக்கள் தங்களுக்குள்ளாகப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பதில் பிரச்னைகள் இருக்காது.//

இது தங்களது அறியாமையை காட்டுகிறது. இந்தியாவை பொறுத்தவரை கிராம சந்தை, வளங்களை கைப்பற்றுவதுதான் GATS ஒப்பந்தத்தின் முக்கிய agenda.

தங்களது இந்த பின்னூட்டத்தில் எனது முந்தைய பின்னூட்டத்திற்க்கான பதிலகள் இல்லை. மாறாக புதிய விசயங்களை பேசியுள்ளீர்கள்.

அரசு அமைப்புகள் பற்றியும் எனது பின்னூட்டத்தில் கொடுத்துள்ள அம்சத்தை பற்றி எந்த விமர்சன்மும் இல்லை.

தங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறென்.

//இது தேர்தல் பிரச்னையாக உருமாறினால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு நீர்த்துப்போகும். //

இந்தியாவில் பொருளாதார கொள்கையில் மாறுபட்ட வோட்டுக் கட்சிகள் என்று எதுவும் இல்லை. (எ-கா) BJP இன் தாராளமயம் ஏற்படுத்திய பாதிப்பு anti incubancy factor எல்லா இடங்களிலும் தலைகீழாக புரட்டியது. ஆனால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அதே திட்டங்களை BJPயைவிட ஆக்ரோசமாக நயவஞ்சகமாக நடைமுறைப்படுத்தவில்லை? அதானால் தேர்தல் பயம் பொருளாதரத்தில் நிர்பந்தத்தை உருவாக்கி மாற்றும் என்பது நம்பமுடியாத அதிசயம்.

தேர்தல் ஜன நாயகம் கட்சிகளை மிரட்டி கொள்கை மாற்றங்களை கொண்டு வரும் என்பது முதலாளித்துவ ஜன நாயகம் முற்றி அழுகிப் போன ஐரோப்பா, அமேரிக்காவிலேயே சாத்தியமில்லாத ஒரு உட்டோ ப்பியாதான். அதுவும் ஜன நாயகம் என்பது சென்னை, பெங்களூர் போன்ற மா நாகரங்களுக்குள்ளேயே அதுவும் அடுக்குமாடி அபார்ட்மென்டுகளுக்குள் மட்டும் இருக்கும் ஒரு நாட்டில் ,நம் இந்திய திரு நாட்டில். நீங்கள் சொல்லுவது போல் நடக்கும் என்று நம்புவது அடிப்படையற்றது.

நன்றி,
அசுரன்

said...

asuran,

it seems some serious font problem in your blog...pls correct it

said...

Anony,

Thanks.

If you select your encoding as 'unicode' in your browser. The font will be visible.

Still have problem, please let me know

Thanks and Regards,
Asuran

said...

அசுரன் உங்கள் பதிவு அருமை.

வறுமை, இதை மக்கள் மீது செலுத்திய பொருளாதார முறை இவற்றை புரிந்து கொள்ள உதவுகின்றன.

வலை உலகில் இது போன்ற பதிவுகளின் அவசியம் அதிகரித்துக்கொண்டு வரும் வேலையில் விழிப்புணர்வூடும் பதிவு.

நன்றி.

said...

வசந்த்,


தங்கள் வருகைக்கு நன்றி,

எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்துச் சொல்லுங்களேன்

நன்றி,
அசுரன்

said...

நல்ல பதிவு..

said...

இது நல்ல விசயத்திற்காக..-1

said...

இது நல்ல விசயத்திற்காக..-2

said...

சளைக்காமல் பின்னூட்டக் கயைமைத்தனத்தில் எனக்கு உதவி செய்த நண்பர் சிவபாலனுக்கு எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

தொடர்ந்து இது போல உதவி செய்ய விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன்(வேற வழி) ;-)))....

நன்றி சொல்வதிலும் பின்னூட்டக் கயைமைத்தனம் செய்யும் எண்ணம் உள்ளது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

நன்றி,
அசுரன்

said...

நானும் ஒரு +1

நல்ல பதிவு அசுரன்!

said...

//நானும் ஒரு +1

நல்ல பதிவு அசுரன்! //


திரு, வின் வருகைக்கு நன்றி...

கருத்துக்களுக்கு நன்றி,

மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்துச் சொல்லுங்கள்....

நன்றி,
அசுரன்

Related Posts with Thumbnails