TerrorisminFocus

Wednesday, August 30, 2006

பகத்சிங்கும், சில பன்னாடைகளும் - நொறுக்குத் தீனி

கீற்றுவில் சில உண்மைகள்:

பகத்சிங்கும் ஆனந்த விகடனும் - நொறுக்குத் தீனி #1


ஆனந்த விகடன் - அன்றே பிரிட்டிஷ் இந்தியாவில் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் “முழுமூட சிகாமணிகள்” என்று ஆனந்த விகடன் அன்று பரிகசித்து எழுதியது.

பகத்சிங்கும் காந்தியும் - நொறுக்குத் தீனி #2


அகிம்சையின் உருவம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் காங்கிரஸ் மகாசபையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பகத்சிங் மீதான லாகூர் சதி வழக்கும் அதன் தீர்ப்பும் தடையாகிவிடும் நிலைமை இருந்தது. அப்போது, “அந்த பையன்களை தூக்கிலிட வேண்டுமென்றால் கராச்சி காங்கிரஸ் கூடுவதற்கு முன்பே தூக்கிலிடுவது நல்லது” என்று பிரிட்டிஷாரிடம் காந்தி சொன்னதாக, காந்தியின் வலதுகரமாக விளங்கிய பட்டாபி சீத்தாராமையா எழுதிய காங்கிரஸ் மகாசபை சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


(ஆதாரம்: ‘வீர சுதந்திரம் வேண்டி..’ நூல்)

13 பின்னூட்டங்கள்:

said...

Noorani has written on this issue.
Read that first.Then ridicule Gandhi.

said...

Anony,

If you give the URL that would be better....

Thanks,
Asuran

said...

Why dont u post an article abt Bhagath Singh, the legend (also abt his fasting in the prison...)

said...

வெட்டிப்பயல்,

விரைவில் தமுஎச தமிழ்செல்வன் அவர்களின் ஒரு கட்டுரையை அடிப்படையாக வைத்து தொடர் கட்டுரை ஒன்று போடும் எண்ணம் உள்ளது. அதில் ஒரு பகுதி தோழர், புரட்சி வீரர், பகத்சிங் அவர்களைப் பற்றி இருக்கும்..

இந்த இரு கட்டுரைகளும் சும்மா டைம் பாஸ்... ஒரு பிரேக் வேணாமா?

தங்கள் வருகைக்கு நன்றி.

said...

கண்டிப்பாக செய்யுங்கள். ஒரு சின்ன வேண்டுகோள், பகத் சிங்கை பற்றி பேசும் போது மற்ற தலைவர்களை தவறாக பேச வேண்டாம். அது கட்டுரையை திசை திருப்பிவிடும் என்று அஞ்சுகிறேன்.

said...

உறுதியாக....

வெட்டிப்பயல் அவர்களே...

said...

நன்றி! புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் சுட்டிகளுக்காக...

said...

தலைவர் ப்ரேக்கில் இருக்கிறாராம்.

அனானி சங்கத்து சிங்கங்களே. வந்து நம்ம தலையின் பதிவை பின்னூட்ட மழையினால் நனையுங்க. நம்ம போடற வெட்டி பின்னூட்டங்களாவது கொஞ்சம் படிக்கும்படியாக இருக்கும்.

said...

முந்தைய பதிவை இட்டது நான் தான் என்று ம்யூஸ் சொன்னால் நம்பாதீர்கள்.

said...

தங்கள் வருகைக்கு நன்றி PRABHU RAJADURAI,

எனது பதிவுகளையும் படித்து விமர்சனம் செய்யதால் நன்றாக இருக்கும்..

அசுரன்

said...

//தலைவர் ப்ரேக்கில் இருக்கிறாராம்.

அனானி சங்கத்து சிங்கங்களே. வந்து நம்ம தலையின் பதிவை பின்னூட்ட மழையினால் நனையுங்க. நம்ம போடற வெட்டி பின்னூட்டங்களாவது கொஞ்சம் படிக்கும்படியாக இருக்கும்.

//

வாங்க அனானிகளே,...

அப்படியே மத்த பதிவையும் படிச்சு உருப்படிய ஒரு விவாதத்த போடுவோம்....

என்ன சொல்றீங்க....

நன்றி,
அசுரன்

**********

//முந்தைய பதிவை இட்டது நான் தான் என்று ம்யூஸ் சொன்னால் நம்பாதீர்கள். //

மயுஸ் உண்மையிலேயே நீங்கள் மேலே என்ன சொல்ல வறீங்கன்னு புரியல....
தப்பா நினைச்சுக்காதீங்க

நன்றி,
அசுரன்

*************

வணக்கத்துடன்,

தங்களுக்கு சொல்கிறேன் எழுதியவுடன்.

கற்பக வி நாயகம் தங்களது விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு பதில் சொல்லியிருந்தார் பார்த்தீர்களா?

நன்றி,
அசுரன்.

************

said...

//கண்டிப்பாக செய்யுங்கள். ஒரு சின்ன வேண்டுகோள், பகத் சிங்கை பற்றி பேசும் போது மற்ற தலைவர்களை தவறாக பேச வேண்டாம். அது கட்டுரையை திசை திருப்பிவிடும் என்று அஞ்சுகிறேன். //

//உறுதியாக....

வெட்டிப்பயல் அவர்களே... //

வெட்டிப்பயல், உங்களின் அறிவுரை சரியாக இருந்தாலும், ஒரு மாவீரனின் வஞ்சிக்கப்பட்ட சரித்திரத்தை எழுதும் போது, உண்மை சுடத்தான் செய்யும். மாபெரும் தியாகிகளாக புனையப்பட்டு சரித்திரத்தில் உலா வரும் தலைவர்களின் பிம்பங்கள் அந்த அனலில் உருகத்தான் செய்யும். தவிர்கக முடியாதது, கூடாதது.

அசுரன், உங்கள் பதிவுகளின் வழமை மாறாமல் உண்மை அனைத்தையும் பதிவு செய்யுங்கள். தலைவர்களைப் பற்றிய judgementஐ வாசகர்களிடம் விட்டுவிடுங்கள்.

said...

//சரித்திரத்தை எழுதும் போது, உண்மை சுடத்தான் செய்யும். மாபெரும் தியாகிகளாக புனையப்பட்டு சரித்திரத்தில் உலா வரும் தலைவர்களின் பிம்பங்கள் அந்த அனலில் உருகத்தான் செய்யும். தவிர்கக முடியாதது, கூடாதது.

அசுரன், உங்கள் பதிவுகளின் வழமை மாறாமல் உண்மை அனைத்தையும் பதிவு செய்யுங்கள். தலைவர்களைப் பற்றிய judgementஐ வாசகர்களிடம் விட்டுவிடுங்கள்.
//

அவ்வாறே.... :-)))

நன்றி,
அசுரன்.

Related Posts with Thumbnails