TerrorisminFocus

Monday, February 27, 2012

இலக்கிய அக்கப்போருக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் மாதவராசு அய்யா, கொஞ்சம் அரசியலுக்கும் எழுதலாமே?

சு. வெங்கடேசோட கா.கோ. நாவலுக்கு விருது கொடுத்துட்டாய்ங்க. எழவு ரஜினிக்கும், தனுஷுக்கும் சிறந்த நடிகர் விருது கொடுத்த பயபுள்ளகதான இந்த இ'ள'க்கிய விருதும் கொடுக்கிறாய்ங்க. இருந்தாலும் இலக்கியமில்லையா? விடுவாங்களா எழுத்தாள பெருமக்கள் என்ற படைப்பாளிகள். இதை வைத்து பல வாதங்கள், பிரதிவாதங்கள்.

இவையனைத்திலும்  என் கவனத்தை கவர்ந்தது நம்ம தோழர் மாதவராசு அண்ணாச்சி மாய்ந்த் மாய்ந்து எழுதுவதுதான். சு. வெங்கடேசை மாதவராஜும், தமுஎகசவும் தோழமையோட விமர்சிப்போம், தவறு செய்தால் அதை உரிமையுடன் கண்டிப்போம், அதை ஜெ.மோ போன்றவர்கள் தந்திரமாக பயன்படுத்துவது நேர்மையானது இல்லை என்றெல்லாம் மாதவராஜ் எழுதியுள்ளார்.

இவையெல்லாம் சரிதான், என்னுடைய பிரச்சினை என்னவென்றால், மேற்படி சு. வெங்கடேசின் இ'ள'க்கியப் புத்தகத்தை ஆய்ந்து அதன் மீதும், அப்புத்தகத்தின் மீதான வாதங்கள் மீதும் கொட்டேசன் போட்டு விமர்சனம் எழுதும் மாதவராஜ் அண்ணாச்சி அவர்கள், அவர் சார்ந்த சிபிஎம் என்ற பிக்காரி, பான்னாடை, முதலாளித்துவத்துக் கோமனக் கட்சியின் அயோக்கியத்தனம் பற்றி வாய் திறந்து பேசுவதில்லை.

ஒரு இலக்கிய அக்கப்போருக்கு இவ்வளவு கொதித்த மாதவராஜ் அய்யா அவர்கள், தமிழ்நாடே கொதித்து எழுந்த முல்லைப் பெரியாறு விசயத்தில் வாய் மூடி மவுனமாகத்தான் இன்று வரை இருக்கிறார் (ஒரேயொரு காப்பி பேஸ்ட் மொக்கை கட்டுரை தவிர்த்து). அண்ணாரின் மேலான கருத்துக்களை, அவரது நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து நாளும், போழுதும் காத்திருந்து கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம்....

ஒருவேள அவர் 'இலேகியமெல்லாம் மக்களுக்கே' என்பதைத்தான் இ'ள'க்கியமெல்லாம் மக்களுக்கே என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அடிச்சிட்டாரோ?

அன்புடன் அண்ணாரின் வாத பிரதிவாதங்களை எதிர்நோக்கி,

அசுரன்

1 பின்னூட்டங்கள்:

said...

வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
vanakkam plz add your post in http://www.valaiyakam.com/

Related Posts with Thumbnails