TerrorisminFocus

Monday, July 31, 2006

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

**********

இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.

*********

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.
(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.

அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.

"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.

முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".

அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."
(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."
(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

******************
இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

**********************
கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:

இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,

"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

*****************
இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:

தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
"அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."

காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".

****************
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

அப்படி என்ன வதந்தி அது?
தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.

கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.
****************
சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.

இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.

*************************
ஆதார நூல்கள்
1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
2) பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் - தொகுப்பு கே.ஜீவபாரதி
3) பசும்பொன் தேவரின் கட்டுரைகள் - தொகுப்பு கே.ஜீவபாரதி
4) சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
5) பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6) சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு - தொகுப்பு கே.ஜீவபாரதி
*************************

கற்பக விநாயகம்
vellaram@yahoo.com

184 பின்னூட்டங்கள்:

said...

நீரும், கற்பக விநாயகமும் நாடார் சாதியைச் சேர்ந்தவர்களா ? இந்த பதிவு ஒரு தலை பட்சமாக உள்ளது.

said...

இந்த பதிவை எத்தனைபேர் நேர்மையாய் எதிர்கொண்டு.. அலசுகிறார்கள்.. என்று கவனிக்கவேண்டியுள்ளது..

said...

இக்கட்டுரையை இங்கே கொடுத்தமைக்கு நன்றி.

இது போன்ற வரலாறுகளை எடுத்து கூறும் போது தான் சில தலைவர்களின் (உணமையான) மோசமான முகங்கள் தெரிகின்றன...

இதை இளைஞர்களுக்கு தெரியாமல் போனதால் தான் மேடையேறி சாதி பேசும் விவேக் போன்றோர்களை சினிமாவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்..

பெரிய கட்டுரை.. முழுமையாக படித்துவிட்டு மீன்டும் வருகிறேன்.

said...

அவ்வளவு மோசமான நபரா? அப்போ இந்த‌ குரு பூஜை, எல்லா அரசியல்வாதிகளின் அஞசலி இதெல்லாம்...? அடக்கொடுமையே!!!!!

அப்புறமா எதுக்குளெ எல்லாம் கொண்டாடுதாய்ங்க? 'அவிங்க' நீரு சொல்லுறத எல்லாம் ஏத்துப்பாய்ங்களா? உஷாரா இரும்வே..

said...

Who is this Jeevabharathi. He may be a big writer. So there is only on evidence is enough to say 'Jathi Veriyan'?. Before you eat somebody's vomit, please make sure that is correct or not. I know you wont publish this ..also won't answer this.

Jeevabharathi reliablity?
Karpagavinayakam reliablity?

If Karpagavinayakam is the right person who hates the hinduism why he keeps his name as Karpagavinayakam.

So something wrong?

Muthukumar. Kangeyam, working in Chennai. I will start my Blog soon and question all anti-hindu elements. Navithan/Nasuvan (This is my Jathi but I am proud to say. Also I am proud to say I am Hindu) Not like hiding my identity.

said...

யாத்ரீகன்..

நீங்கள் நேர்மை எதிர்கொள்வது என்று எழுதும் முன்பே ஒரு அனானி விட்டுச் சென்றுள்ள பின்னூட்டத்தை பார்த்தீர்களா?

யாத்ரீகனுக்கு நன்றி சொல்லி அவரிடம் எனது மற்ற கட்டுரைகளை படித்து விமர்சிக்கக் கோரும் அதே வேளையில் அனானிக்கு ஒரு சின்ன பதிலை கொடுத்து விடுகிறேன்.

திண்ணையில் கற்பக விநாயகம் பழைய இந்தியாவின் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பற்றிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதும் பொழுது நாடார் சமூகத்திற்க்கு, தேவர் சமூகத்திற்க்கும் இருந்த சாதி பிரச்சனை உண்மையில் விவசாயிகள், வியாபாரிகள் வர்க்க முரன்பாடாக புரிந்து கொண்டு அணுகியிருப்பார்.

அதை நெல்லை நெடுமாறன் என்பவர், நாடார் சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் கேட்ட புத்தியோடு கற்பக விநாயகம் கட்டுரை எழுதுவதாக விமர்சனம் செய்து இரண்டு வாரம் முன்பு கட்டுரை எழுதியிருந்தார்.

இப்போ கேள்வி கற்பக விநாயகம் நாடாரா அல்லது நாடார் எதிரியா?

அனானி நீங்கள் எதற்க்கும் நெல்லை நெடுமாறனுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவும் :-))))

சாதி எதிர்ப்பு முயற்சிகளுக்கு இப்படிப்பட்ட வரவேற்புகளும் வரும்.

நன்றி,
அசுரன்

said...

Dear Muthukumar,

you are most welcome and we are expecting your questions...

//If Karpagavinayakam is the right person who hates the hinduism why he keeps his name as Karpagavinayakam//

this question says your future depth questions you may pose on anti hindudva forces.....


could you please expatiate on Why are you proud say your caste?


asuran

said...

அசுரரே1

க.வி.எட்டயபுர சுப்பிர மணியின் ஜாதி முகமூடியைக் கிழித்ததுபோல் முத்துராமலிங்கத் தேவரின் ஜாதி முகமூடியையும் கிழித்துள்ளார். சற்று கவனமாக இருங்கள். ஆபத்து வரலாம்.

ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள் ஆண்டாண்டு காலமாகக் குருபூஜை என்று சொல்லித் தேவரின் சமாதியை முற்றுகை இடும் அசிங்கத்தையும் சொல்லியிருக்க வேண்டும். இந்த அசிங்கத்துக்கு எந்த அரசியல்வாதியும் விதிவிலக்கல்லர்.

எனது புதிய பதிவைப் படித்தீர்களா?

சாதிக் கட்சிகள் பற்றி எழுத நிறையப் படிக்க வேண்டும். எழுதுகிறேன்.

said...

சிவபாலன்,

தங்கள் வருகைக்கு நன்றி.
தங்களது விரிவான பின்னூட்டத்திற்க்கு காத்திருக்கிறேன்.
**************

டெஸ்பெராடோ ,

அவர் அவ்வளவு மோசமான நபர்தான். அவரது பெருமையை கட்டிக்காப்பதில் தேவர் வோட்டுக்கள் உள்ளதை மறந்துவிட்டீர்களா(இதை மக்கள் அங்கீகாரம் என்று சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்).

வருகைக்கு நன்றி

அசுரன்

said...

இறந்து போனவர்களின் கல்லறைக்கு சென்றால் மாலை போட மட்டுமே செல்லவேண்டும்,
கல்லறைகளை தோண்டுவதால் என்ன பயன், பினவாடை மட்டும்தானே வரும் !
சரியோ தவறோ ஒரு சிலர் தெய்வமாக போற்றும் போது, இது அவதூறு இல்லாவிட்டாலும் கோவம் வருதோ இல்லையோ, கண்டிப்பாக கட்டுரையின் மூலம் வெறுப்பு வளரும், இன்றைய இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் நல்லவற்றைக் கேட்டு மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள். உங்கள் கட்டுரை தங்கள் மீதான பல்வேறு சர்க்சைகளுக்கு ஆளானவர்கள் வேறு சில சமுகத்துக்கு இது திசைத் திருப்பும் வாய்ப்பாக மட்டும் அமையுமின்றி வேறொரு பயன் இல்லை.

said...

Hats off to muthukumar.
we are waiting to hear from you
Devar is beyond criticisms.

said...

முத்துக்குமார், உணர்ச்சிவசப்படாதீர். இதில் சொல்லப்பட்டவை உன்மையா என ஆராய்தல் நலம். உண்மை எனும் பட்சத்தில் காமராஜரை அவதூறு தூற்றியதும் (கருணாநிதியும் அத்தவற்றை செய்துள்ளார்‍, நன்றி:இட்லி வடை, துக்ளக்), புரளி பரப்புவது எல்லாம் கேவலமான செயல், அந்நபர் இந்து‍வே ஆனாலும்.

அனானி,இக்கட்டுரை எழுதியவர் யாராக இருந்தால் என்ன? கட்டுரையில் கூறப்பட்டவை உண்மை எனில் தேவரின் சாதி வெறி பிடித்த அழ(ழு)கிய மறுபக்கம் தெரிகிறது.

குரு

said...

அசுரன், இணையதளங்களில் தமிழ் வாசிக்க பின்பு தான் சாதிக்கொடுமை பற்றிய விரிவானதொரு அறிவு கிடைத்தது.( பிளாக் சண்டை சச்சரவு மூலம் தான்) இந்து‍ முஸ்லிம் ஆர்ய‍ திராவிட சண்டைகள் வேறு. வெளிநாடுகள் போல (இனச்சண்டை, எழை பணக்கார‍ பேதம் இருந்தாலும் அவர்களுக்குள் சாதிப் பாகுபாடு இல்லை)மனிதனை மனிதனாக பார்க்க நாம் எப்போது பழகுவோம்?

தங்களின் கட்டுரை அருமை. தேவர்களும் இச்செய்தியை அறிய வேண்டும். ஏற்றுக்கொள்வார்களா? எனத்தெரியவில்லை.

இவை அனைத்தும் தெரிந்தும் அரசியல்வாதிகள் வோட்டுக்காக குருபூஜையில் கலந்துகொல்கிறார்கள் என்றால் அவர்களும் கேவலமானவர்களே.(அது தெரிந்த விஷயந்தானே என்கிறீர்களா? அதுவும் சரிதான் )

குரு

said...

கொஞ்சம் பெரிய மனுஷத்தனமான விஷயம்.. ஆனால் யோசிக்க தகவல்கள் இருக்கின்றன. நன்றி. கருத்து சொல்ல விரும்ப வில்லை

said...

அதாவது ... "பசும்பொன்", "பசும்பொன்" என்று சொல்வார்களே ... அந்த ஆள் இவர்தானா?

said...

தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து காரியம் சாதிக்கவேண்டி இருக்கு. உங்களுடைய ஒத்துழைப்பை நல்குங்கள்.

நாம் இருவரும் இணைய உரையாடல் செய்ய முடியுமா?

said...

இவை புதிய செய்திகளாக இருக்கிறது. உண்மையில் தமிழகத்து அரசியல் பற்றிய ஒர் விழிப்புணர்ச்சியும், செறிந்த அறிவும் நம்மிடமே இல்லை. உண்மையில் தேவர் ஒர் நல்ல தலைவரா, அல்லது பெரும் பணக்காரராக இருந்ததினால், அவருடைய சமூகத்தில் பெரியாளாக மாறி, இன்று கொண்டாடபடுகிறாரா?

கலைஞரை பொறுத்தவரை அவர் எல்லா தலைவர்களையும் இழிவாக பேசினாலும், மறைவிற்கு பிறகு அவர்களை விமர்சனம் செய்யாமல், நற்குணங்களை வைத்து தான் பாராட்டி பேசி இருக்கிறார்.

தமிழக அரசியல் பற்றி நல்ல ஆவணங்களை ஊடகங்கள் நமக்கு தரவில்லையோ என்றே என தோன்றுகிறது. நீங்கள் பல புத்தகங்களை மேற்கோள் காட்டி உள்ளீர்கள். ஆனால் அந்த் புத்தகங்கள் நடுநிலைமையோடு எழுதப்பட்டவையா என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி. ஏனெனில் பல புத்தகங்கள் பல்வேறு நபர்களால் வித்தியாசமான கோணங்களில் இருந்து எழுதப்படுகிரது. நமக்கு தேவை படுவது உள்ளதை உள்ளபடி சொல்லும் நூல்கள்.

said...

Jeevabharathi reliablity?
Karpagavinayakam reliablity?

No answer yet. Asuran you asked me to check wheather he is nadar/thevar. I can see how you are escaping from the questions.

I can see 'YOU EATEN KARPAGAVINAYAKAM VOMIT AND AGAIN VOMITED'

When you say someone's quote you should better know use your 'pakutharivu' then eat that vomit. If someone says its wrong if you know 10-20% donot eat that.

Then you asked me about why I am proud to say Navithan/Nasuvan.Yes we did navitham till my generation also we are doing farming in our own land. Still I am working in chennai, still my village people still give us the same 'murai' in our village temple (near kangeyam). I went to Canada last year so brother did that temple murai. This year (may 2006) I was back so I did. Our village has Parayar(30 families), Gounders (100 families), Nayakkars (30 families), Chettiyar (2 families) Pandaram (7 families), Naadar (Maramerupavarkal around 15 and Annachi 2 families), Sakkiliar (around 25 families), Vannaarkal (5 families) and navitharkal (4 families). Litration 98%.

Do you need anything more...Exact village name '....valasu' near nalroad, kangeyam. Hided the exact name. I know there are set of outside people who can make problems. We know we are...So we want to live peacefully.

Writing anything in the internet is easy.

Hello Desperado, in india, you hate jathi...Can I ask you question if there is colour problem do you accept in India?

Hope I answered your questions

Anbudan Muthukumar.

said...

Jeevabharathi reliablity?
Karpagavinayakam reliablity?

No answer yet. Asuran you asked me to check wheather he is nadar/thevar. I can see how you are escaping from the questions.

I can see 'YOU EATEN KARPAGAVINAYAKAM VOMIT AND AGAIN VOMITED'

When you say someone's quote you should better know use your 'pakutharivu' then eat that vomit. If someone says its wrong if you know 10-20% donot eat that.

Then you asked me about why I am proud to say Navithan/Nasuvan.Yes we did navitham till my generation also we are doing farming in our own land. Still I am working in chennai, still my village people still give us the same 'murai' in our village temple (near kangeyam). I went to Canada last year so brother did that temple murai. This year (may 2006) I was back so I did. Our village has Parayar(30 families), Gounders (100 families), Nayakkars (30 families), Chettiyar (2 families) Pandaram (7 families), Naadar (Maramerupavarkal around 15 and Annachi 2 families), Sakkiliar (around 25 families), Vannaarkal (5 families) and navitharkal (4 families). Litration 98%.

Do you need anything more...Exact village name '....valasu' near nalroad, kangeyam. Hided the exact name. I know there are set of outside people who can make problems. We know we are...So we want to live peacefully.

Writing anything in the internet is easy.

Hello Desperado, in india, you hate jathi...Can I ask you question if there is colour problem do you accept in India?

Hope I answered your questions

Anbudan Muthukumar.

said...

அப்படியே, காமராஜ் நாடார் ராஜகோபாலாச்சாரியா மற்றும் அண்ணாத்துரை முதலியாரைப்பற்றி பேசியதையும் ஒரு பதிவா போட்டா இன்னும் தமாஷா இருக்கும்.
தேடிப்பாருங்க அப்படியும் நிறைய புத்தகங்கள் இருக்கு.
நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்,இப்ப அந்த புத்தகம் பேரெல்லாம் மறந்துவிட்டது.

said...

தேவரின் சாதி வெறி பற்றிய பல ஆதரங்களை நீங்கள் அளித்திருப்பது முக்கியமானது. இன்று எல்லா கட்சிகளும் (பாமக உட்பட, திருமா இன்னும் கலந்து கொள்ளவில்லை என்று இன்னமும் நம்புகிறேன்) தேவர் ஜெயந்தி போன்ற ஒரு ஆபாசத்திருவிழாவில் கலந்து கொள்ளும் போது இது போன்றவற்றை தொடர்ந்து பேச வேண்டியுள்ளது. முதுகுளத்தூர் கலவரத்தின் போதும் பெரியார் மட்டுமே முத்து ராமலிங்கத்தின் கைதை வரவேற்று பேசினார். பல காரணங்களால் தேவர் ஜாதி வெறி குறித்த சமரசம் பல இடங்களில் மேற்கொள்ளப்படுவதால் இந்த விஷயங்களை நாம் தொடர்ந்து பேச வேண்டியுள்ளது. மிக்க நன்றி!

said...

முத்துக்குமார்,

உங்களது நாடு "....valasu' வா?

ஏனெனில் ஒரு சில ஆயிரங்களைத் தாண்டாத கிராமத்தின் 98% சதவீத படிப்பறிவிற்க்கு குறிப்பான காரணம் என்று எதையும் சொல்லி அதை ஒட்டு மொத்த நாட்டிற்க்கும் பொதுவாக்க முடியாது.

ஆனால் அந்த விசயத்தை வைத்துதான் நீங்கள் பெருமைப்படுகிறேர்கள் என்று யூகிக்கிறேன்.

சரி இந்தியாவில் கல்வியறிவு சதவீதம் என்ன?
இந்தியா உலகிலேயே குழந்தைகளுக்கான அபாயமான நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது தெரியுமா?
இந்தியாவில் கடந்த 8 வருடங்களில் இறந்த விவசாயிகள் 1 லட்சம்
உல்கின் 50% சதவீத mallnutritioned குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

எனது கேள்வி: மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகாளில் உள்ள மக்கள் கூட்டத்தில் சாதி வாரி பிரதிநிதித்துவம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து விட்டு தங்களது இந்து மத மோகம், சாதி மோகம் இவற்றை பறைசாற்றுங்களேன்(பறை தங்களுக்கு பிடிக்குமா?).

அம்பேத்கார் சொன்னார்: "மேல்நிலையாக்கம் அடைந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் தமது சமூகத்தை மறந்து விடுகிறார்கள்" என்று.

நீங்கள் அதற்க்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டாக உள்ளீர்கள்.

நன்றி,
அசுரன்.

said...

அன்பு அசுரரே,

அரஸியலில் முதலில் செய்ய வேண்டிய விஷயம் இருக்கிற தெய்வங்களை அழித்து புதிய தெய்வங்களை உருவாக்குவதுதான். தேவர் பெருமகனாரை அழித்து பெருந்தலைவர் கமராஜரை தெய்வமாக்க முயற்சி செய்கிறீர்கள். வாழ்க.

மடியில் அணுகுண்டு கட்டியிருக்கிறேன் என்றெல்லாம் தேவர் சொல்லியுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். இவற்றையெல்லாம் எந்த புத்தகத்தில் படித்தீர்கள்?

இங்கெ சொல்லலாம் என நினைத்தால் சொல்லுங்கள்.

said...

My comment is only related to Mr.Karpaga Vinayagam and Mr.Nedumaran. Mr.Nedumaran wants to project that Nadars were the Kshatriyas of Tamil country and they were the moovenders. At the same time, he gets irritated whenever someone talks about their present or past occupations. (trading or toddy tapping ,respectively.) So Mr.Nedumaran is also a casteist, if you can see how poorly he talks of other castes, but couched in literary language, using mostly assumptions and writings by Nadars themselves.

said...

மிக முக்கியமான பதிவு. இராமனாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, அருப்புக்கோட்டை
பகுதிகளில் தேவர்(?) பிறந்த நாளை ஒட்டி நடக்கும் இன கலவரங்களை நான் மிக
அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். வண்டி வண்டியாய் பசும்பொன்னை நோக்கி இந்த தினத்தில் மக்கள்,
அரசியல் வாதிகள், படையெடுப்பதும் இடையில் தேவேந்திரர்கள் இருக்கும் பகுதிகளுக்குள் புகுந்து
கலகம் செய்வதும், பதிலாக அல்லது ஆரம்பித்து வைக்கும் விதமாக, வண்டிகளின் மீது
தேவேந்திர குலத்தவர்கள் கல்லெறிவது மற்றும் ஆயுதங்கள் எறிவது, அதை தொடர்ந்து அரசின்
ஊரடங்கு உத்தரவு, போலிஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவை ஒவ்வொரு வருடமும் நடக்கிற
நிகழ்வுகள் தான். இறந்த பின் பல ஆண்டுகள் ஆன பின்பும் கூட வன்முறைகளை நடத்த
மனிதர்களால் முடியும் என்பதற்கு முத்துராமலிங்கத்தின் வரலாறு ஒரு எடுத்துக்காட்டு.

said...

காமராஜர் காலத்தில் நான் வாழாவிட்டாலும் படித்துத் தெரிந்துகொண்டதை வைத்து அவர் மீது மிகுந்த மதிப்பு எப்போதும் உண்டு..காமராஜருக்குப் பிறகு நாம் பார்த்ததெல்லாம் வெறும் முடிச்சவிழ்க்கிகள்தான்..முக்கியமாக பரவலாக பள்ளிகள் திறந்ததிலும், விவசாயத்திற்காக கால்வாய்கள், பெரும் அணைகள் கட்டியதிலும் அவர் காட்டிய அக்கறை தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை அவருக்குத் தந்துள்ளது..என் தந்தை சொல்லுவார், காமராஜர் கால்தடம் படாத ஒரு குக்கிராமம் கூட தமிழ்நாட்டில் இல்லை என்று..

அப்படி தியாகமே உருவாக வாழ்ந்து மடிந்தவரை (கடைசிக் காலத்தில் தேர்தலில் தோற்கடித்து, நோகடித்துக் கொன்றனர் நம் தமிழ் மக்கள்) அவர் காலத்திலேயே ஒருவர் இப்படி கேவலமாக சிறுமைப் படுத்தி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது..முத்துராமலிங்கத் தேவர் இப்போது உயிரோடு இருந்து என் முன்னே நின்றால் அவர் வாயில் ஒரு செருப்பை கவ்வக் கொடுத்து அடிப்பேன்...ஆக்ரோஷமாக..தைரியமாக...

said...

நல்ல பதிவு.

இளைய தலைமுறைக்கு தெரியாத பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

ஆழமான கருத்துக்கள்.

நன்றி.

//அம்பேத்கார் சொன்னார்: "மேல்நிலையாக்கம் அடைந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் தமது சமூகத்தை மறந்து விடுகிறார்கள்" என்று. //

பெரும்பான்மையான இன்றய முதல் தலைமுறை படித்த இளைஞர்கள் இதுபோலத்தான் இருக்கிறhர்கள்.

said...

முயுஸ்,

வாங்க முயுஸ். ரொம்ப நாள் ஆளைக் காணும். இந்து மத வெறி பிரச்சாரம் பிரகாசம் குன்றி விட்டதா?

கம்யுனிஸ்டுகளுக்கு சாதி சாயம் பூசும் தங்களது வஞ்சகம் வெற்றி பெருமா?....வெற்றி பெராது..

ஏனேனில்....காமாராஜர் எலிக் கறி திங்கச் சொன்னவர்தான், ம.க.இ.க வின் அண்ணே வரார் பாடல் கேசட்டில் காமராஜர் ஆட்சியை "ஊழலின் முட்டை" என்று சொல்லியிருப்பார்கள். இதுதான் காமராஜர் பற்றிய எமது மதிப்பீடு. அது இன்று பொறிந்து பெரிய ஊழல் பெருச்சாளியாக வளர்ந்துள்ளது.

முத்துராமலிங்கரை பற்றி கட்டுரை எழுத வேண்டிய அவசியமென்ன? பசும்பொன்னின் படத்தை வைத்து தென்மாவட்டங்களில் - கல்வி நிலையங்களிலும் கூட நடக்கும் விசய்ங்க்ள் தங்களது இந்துத்துவ மத வெறி கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் நீங்கள் musing -ல் இருக்கிறீர்கள். இதுதான் தேவர் திருமகனின் முகத்தை அறிமுகப்படுத்தும் இந்த கட்டுரையின் நோக்கம்.

ஒரு வேளை தங்களது கோபத்திற்க்கு காரணம் தங்களது பெரும் தெய்வங்களின் மீது கைவைத்த அசுரன் இன்று தங்களது சிறு தெய்வமான திருமகனின் மீதும் கைவைத்து விட்டானே என்று கோபமா?

நன்றி,
அசுரன்

said...

காமராஜை எந்த இடத்திலும் தெய்வமாக்கிட நான் முயலவில்லை என்றே கருதுகிறேன். எனது கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்களின் பட்டியலும் தரப்பட்ட பின்னரும், எந்தப் புத்தகத்தில் இருக்கின்றது என்று கேட்பது விந்தையாக உள்ளது.

ஜீவபாரதி, தேவரின் பக்தராவார். அவர் அரிதினும் முயன்று தேவர் பேசிய உரைகளையும், கண்ணகி இதழில் தேவர் எழுதிய கட்டுரைகளையும், தமிழ்நாடு சட்டசபை ஆவணங்களையும் தொகுத்துத் தந்துள்ளார். எனவே அதன் நம்பகத்தன்மை பற்றி எல்லாம் இவ்விடத்தில் அய்யுறத் தேவையில்லை.

காமராஜர் மீது எனக்குப் பல விமர்சனம் இருப்பினும், அவர் திறந்து வைத்த கல்விப்பணியினால்தான் இன்று கீபோர்டு தட்டும் வரை நாம் வர முடிந்தது என்பதை நான் சொல்லும்போதே, 'நீ நாடாரா?' எனக் கேட்பது எத்தகையதொரு கடுகு உள்ளம்?

சாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த தேவர், தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தலித்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான இம்மானுவேல் தேவெந்திரர் (இப்போது தேவேந்திரர் என்று 'ர்' சேர்த்தவுடன் சில ஆசாமிகள் 'பார்ட்டி தலித் தான்' என முடிவு கட்டத் திடங்கி இருக்கும்) தலித்மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரய்யாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.

நெல்லை நெடுமாறன், தேவருக்கு சர்டிபிகேட் கொடுத்திருந்தார். ஆனால், அவர் போற்றி இருந்த தேவர், காமராஜர் பற்றிப் பேசியதை இப்போது முன் வைத்துள்ளேன். காமராஜருக்கு, நெடுமாறன் குரல் கொடுக்க வருவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், விருதுநகர் நாடார்கள், ஆண்ட பரம்பரை இல்லை. சிவந்தி ஆதித்தன் தான், தென்காசிப் பாண்டிய மன்னர்களின் வாரிசு எனும் கருத்து உடையவர் அவர் எனக்கேள்விப்படுகிறேன்.

ஓட்டு அரசியலின் விபரீதத்தால், கோமாளி நடிகன் விவேக் கூட, அவனிடம் சிறு உரசல் செய்த சன் டிவிக்கு "ஒரு கோடி தேவர்களின் சமூகத்து ஆளாக்கும் நான்" என சவடால் அடிக்க முடிகிறது.

கற்பகவிநாயகம்.

said...

இது வரை அறியாத பல தகவல்களை அளித்துள்ளீர்கள். சாதீய அடக்குமுறை என்பது எந்த வடிவில் வந்தாலும், எந்த சாதியின் பெயரால் வந்தாலும் அது ஒரு வகைப் பார்ப்பனியமே. சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

said...

காமராஜை எந்த இடத்திலும் தெய்வமாக்கிட நான் முயலவில்லை என்றே கருதுகிறேன். எனது கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்களின் பட்டியலும் தரப்பட்ட பின்னரும், எந்தப் புத்தகத்தில் இருக்கின்றது என்று கேட்பது விந்தையாக உள்ளது.

ஜீவபாரதி, தேவரின் பக்தராவார். அவர் அரிதினும் முயன்று தேவர் பேசிய உரைகளையும், கண்ணகி இதழில் தேவர் எழுதிய கட்டுரைகளையும், தமிழ்நாடு சட்டசபை ஆவணங்களையும் தொகுத்துத் தந்துள்ளார். எனவே அதன் நம்பகத்தன்மை பற்றி எல்லாம் இவ்விடத்தில் அய்யுறத் தேவையில்லை.

காமராஜர் மீது எனக்குப் பல விமர்சனம் இருப்பினும், அவர் திறந்து வைத்த கல்விப்பணியினால்தான் இன்று கீபோர்டு தட்டும் வரை நாம் வர முடிந்தது என்பதை நான் சொல்லும்போதே, 'நீ நாடாரா?' எனக் கேட்பது எத்தகையதொரு கடுகு உள்ளம்?

சாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த தேவர், தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தலித்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான இம்மானுவேல் தேவெந்திரர் (இப்போது தேவேந்திரர் என்று 'ர்' சேர்த்தவுடன் சில ஆசாமிகள் 'பார்ட்டி தலித் தான்' என முடிவு கட்டத் திடங்கி இருக்கும்) தலித்மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரய்யாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.

நெல்லை நெடுமாறன், தேவருக்கு சர்டிபிகேட் கொடுத்திருந்தார். ஆனால், அவர் போற்றி இருந்த தேவர், காமராஜர் பற்றிப் பேசியதை இப்போது முன் வைத்துள்ளேன். காமராஜருக்கு, நெடுமாறன் குரல் கொடுக்க வருவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், விருதுநகர் நாடார்கள், ஆண்ட பரம்பரை இல்லை. சிவந்தி ஆதித்தன் தான், தென்காசிப் பாண்டிய மன்னர்களின் வாரிசு எனும் கருத்து உடையவர் அவர் எனக்கேள்விப்படுகிறேன்.

ஓட்டு அரசியலின் விபரீதத்தால், கோமாளி நடிகன் விவேக் கூட, அவனிடம் சிறு உரசல் செய்த சன் டிவிக்கு "ஒரு கோடி தேவர்களின் சமூகத்து ஆளாக்கும் நான்" என சவடால் அடிக்க முடிகிறது.

கற்பகவிநாயகம்.

said...

அந்த வேளையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்தான் காங்கிரசைக் காப்பாற்றும் 'துணிச்சல்' கேடயமாக விளங்கினார்.
தேர்தல் களத்திலி் தடீர் திருப்பம் ஏற்பட்டது. காங்கிசை மிரட்டியபடியே தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டுவந்த ராமசாமி, போட்டியில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அவர் தவிர மற்ற வேட்பாளர்கள் அவ்வளவாக செல்வாக்கு இல்லாதவர்கள் என்பதர்ல, காமராஜர் வெற்றி உறுதி என்ற நிலை இருந்தது.
இந்த உற்சாகத்தால், காங்கிரஸ் பிசாரத்தில் புதுகளைகட்டியது. அமோக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் நாள்தோறும் இரண்டு மூன்று கூட்டங்கள் நடத்தி ஆதரவு திரட்டினர்.
இந்த நிலையில் ஒருநாள்....
பிசார கூட்டத்துக்கு வரவேண்டிய காமராஜர் வரவில்லை. அவரைஅழைத்துவர, அவர் தங்கியிருந்த இடத்துக்கு சில தொண்டர்கள் சென்றனர். அங்கு சென்று விசாரித்தபோது, காமராஜர் ஒரு மணிநேரம் முன்னதாகவே கிளம்பிவிட்டதாக தகவல்.
பதட்டத்தில் தொண்டர்கள் அங்குமிங்கும் தேடியபோது, 'காமராஜர் கதை முடிஞ்சு போச்சு' என்று நீதிக்கட்சியினர் சில் எகத்தாளமாகப் பேசினர்.
இதில்அதிர்ச்சியடைந்தவர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அவசர தகவல்அனுப்பினர், அவரும் தனது இளைஞர்படையுடன் விரைந்தார்.
அவர் வருகிறார் என்ற தகவல்கிடைத்ததுமே, நீதிகட்சினருக்கு கிலி தொடங்கி விட்டது, அந்த கட்சியைச் சேர்ந்த சிலரே காங்கிரஸ் தொண்டர்களிடம் 'உண்மையை' போட்டு உடைத்துவிட்டனர். அதே கபுதியைச் சேர்ந்த நீதிகட்சி பிரமுகர் ஒருவரதுதோப்பு பகுதியில் காமராஜரை கடத்தி வைத்துள்ள தகவல்கிடைத்தது.
தேவருக்கு அந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.
உடனே, விருதுநகரில்ஒருபொதுக்கூட்டத்தை நடத்தினார். மேடையில் ஏறியதுமே, "நான் இப்போதுபேசப் போகிறேன். காமராஜர் இந்த இடத்திற்கு வந்தாக வேண்டும், அவரை கடத்தியிருப்பது நீதிக்கட்சியைச் சேர்ந்தவரகள் என்று எனக்குத் தெளிவாகவே தெரியும், அவர்களாகவே காமராஜரை அனுப்பி வைத்தால்ம பிரச்னை வராது. இல்லையென்றால், நடக்கும்சம்பவங்களுக்குநான் பொறுப்பாக முடியாது!" என்று சிம்மகர்ஜனையிலி் எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகு வழக்கம்போல் பிசாரபேச்சைத் தொடங்கினார். அவர் பேச்சை முடி்பதற்குள் மேடையை நோக்கி ஓழவந்தார் காமராஜர். மேடையில் ஏறி, தேவருக்கு நன்றி தெரிவித்தார்.

இவர் தான் முத்துராமலிங்க தேவர்

said...

தேவர் ஒரு ஜாதிவெறியர் என்பது தான் எல்லோருக்கும் தெரியுமே? பார்ப்பான்கள் தேவரோடு எல்லாம் மோதவில்லை. பெரியாரோடு மட்டும் தான் மோதினார்கள் என்பதில் இருந்தே தேவரை தூண்டிவிட்டவன்கள் பார்ப்பான்கள் தான் என்று அறிந்து கொள்ளலாம்.

said...

அசுரன்!
தங்கள் கட்டுரைக்கு நன்றி! இன்றைய தமிழக அரசியலைப் பார்க்கும் போது; தேவர் பேச்சுக்கள் பற்றிய செய்திகள் நம்பும் படிதான் உள்ளது.இதே நேரம் காமராஜரை எல்லா எதிர்கட்சிகளுமே திட்டித் தீர்த்துள்ளன. அடுத்து இந்த நிலையிலும் காமராஜரின் புகழைத் தேவர் அடையமுடியவில்லை. எங்கள் ஈழத்தில் இளவயதினருக்கும் காமராஜரைத் தெரியும்; அவர் ஓர் படிக்காத மேதை என்பதை உணர்கிறார்கள். தேவரைத் தெரியாது?. இந்தப் பேச்சுக்களைப் படித்த போது தெரியாமல் இருப்பதே நன்று போல் உள்ளது. தொடர்ந்து மறுபக்கங்களைத் தரவும்.
யோகன் பாரிஸ்

said...

என்னார் குறிப்பிடும் 'தேவர்,காமராசரைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படும்' நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படுவதே 1937ல். இதனை தேவர் ஒருவர் மட்டுமே மேடைகளில் சொல்லி வந்து 'இப்படி எல்லாம் அவரைக் காப்பாற்றினேன். அங்கே காமராஜ் இடுப்பிலே வேட்டி கூட இல்லை' என்று அவமானப்படுத்திப் பேசவே தேவர் இதனை மிகைப்படுத்தி இருக்கக்கூடும். 1937ல் தேவரும், காமராசும் இருந்த இடம் ஒரே கட்சிதான். தேவர், 1949ல் காங்கிரசை விட்டு வெளியேறி, பார்வர்டு பிளாக் போய்விட்டார். அதன் பிறகு 1957 தேர்தல் பற்றிப் பேசும்போது, அதற்கு 20 ஆண்டுகளுக்கு முந்தைய விசயத்தை ஆண்டு குறிப்பிடாமல், தேவருக்கு வடை மாலை சாத்த முனையும் என்னாரை என்ன செய்யலாம்?

தேவர் குறிப்பிட்ட ஜஸ்டிஸ் கட்சிப்பிரமுகர்கள், கமுதிக்காரர்கள் அல்லர்; அவர், பட்டிவீரன்பட்டி ஊ.ப.அ.சவுந்தரபாண்டியன் நாடார் (ஜஸ்டிஸ் கட்சி தலைவர்)தான் அவர்.

கற்பக விநாயகம்

said...

அசுரரே,

>>>> இந்து மத வெறி பிரச்சாரம் பிரகாசம் குன்றி விட்டதா?

கம்யுனிஸ்டுகளுக்கு சாதி சாயம் பூசும் தங்களது வஞ்சகம் வெற்றி பெருமா?....வெற்றி பெராது..
<<<<

என் மனைவியை நான் அடிப்பதை நிறுத்திவிட்டேனா என்று கேட்கிறீர்கள். எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.

>>>> ஒரு வேளை தங்களது கோபத்திற்க்கு காரணம் தங்களது பெரும் தெய்வங்களின் மீது கைவைத்த அசுரன் இன்று தங்களது சிறு தெய்வமான திருமகனின் மீதும் கைவைத்து விட்டானே என்று கோபமா? <<<

தெய்வம் என்று உண்டா என்பதே எனக்குத் தெரியவில்லை. இதிலே புதிதாய் நீங்கள் சிறு தெய்வம், பெருந்தெய்வம், நடுவாந்திர தெய்வம் என்றெல்லாம் சொல்லுகிறீர்கள். நீங்களாக கற்பனை செய்துகொண்டு குற்றம் சொல்லுவது இயல்பாக உள்ளது. எனக்கு ஸைக்காலஜி பிடித்த விஷயம்தான் என்றாலும், ஸைக்யாற்றி தெரியாது.

நீங்கள் என்னுடைய கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. மீண்டும் கேட்கிறேன். நீங்கள் சொல்லியுள்ள விஷயங்களை எந்த நூலிலிருந்து பெற்றீர்கள்?

said...

முயுஸ்,

//நீங்கள் என்னுடைய கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. மீண்டும் கேட்கிறேன். நீங்கள் சொல்லியுள்ள விஷயங்களை எந்த நூலிலிருந்து பெற்றீர்கள்? //

'தங்களது கேள்வி' என்று நீங்கள் குறீப்பிடும் விசய்ம் கேள்விக்கான தகுதி இழந்துள்ளது.

கற்பக விநாயகம் தனது கட்டுரையின் கீழேயும், உள்ளேயும் தெளிவாக இதில் உள்ள தகவல்கள் சட்ட்மன்ற உரைகள், மற்றும் பல்வேறு தலைவர்களின் உரைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் புரட்டிய சில புத்தகங்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக தங்களது கேள்விக்கு பதில் கட்டுரையிலேயே இருந்தாதாலும். மற்ற உருப்படியான விவதங்களுக்கு பதில் சொல்வது உபயோகமாக இருக்கும் என்று கருதியதாலும் தங்களது அந்த கேள்வி என்றூ நீங்கள் கருதும் விசயத்திற்க்கு நான் பதில் சொல்லவில்லை. இப்பொழுது பதில் சொல்லியகிவிட்டது.

நன்றி,
அசுரன்.

said...

காமராஜரைப் பற்றி எமது நிலைப்பாட்டை சொல்லவில்லை என்றால், சரியாக இருக்காது என்று தெரிகிறது.

கீழே பார்க்கவும்:

**
காமராஜ், காங்கிரசில் இந்திராவால் ஓரங்கட்டப்பட்டவுடன் அவர் சேர்ந்த கூட்டம் வலதுசாரிக்கூட்டமே.
வங்கிகள் அரசுமயவாவதை எதிர்த்தும், இந்தியாவில் இருந்த ஊதாரிக்கூட்டமான சுதேச மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம்
(வருஷத்துக்கு ரூ 50 லட்சம் பாக்கெட் மனியாக, 1969க்கு முன்பு இத்தொகையின் இந்தைய மதிப்பென்ன இருக்கும் என்பதைக் கணக்கிட:- அன்று குத்து மதிப்பாக ஒரு பவுன் தங்கம் 90ரூபாய், இன்று 7ஆயிரம் ரூபாக்கும் அதிகம்) ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் வலது சாரிகளுடன் குரல் கொடுத்தவர்தான் இந்த காமராஜர்.

**
வங்கி தேசியமயமானதை எதிர்த்துள்ளார்.

**
திமுக அரசு , கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி கொண்டு வரமுயன்றதும் அதை எதிர்த்து மாணவர் போராட்டத்தைத் தூண்டிவிட்டுக் குளிர்காய்ந்த சந்தர்ப்பவாதி. திமுக+இந்திராவை அரசுக்கட்டிலில் இருந்து விரட்ட வேண்டும் எனும் ஒரே பதவி வெறியில், குலக்கல்வி கண்ட கோடாரிக்காம்பு ராஜாஜியுடன் கூட்டு சேர்ந்தார். காமராஜின் நண்பர் பெரியாரே இதை 'மானக்கெட்ட பொழப்பு' என்றார்


**
கேராளாவில் இருந்த தேவிகுளமும், பீர்மேடும் தமிழ் நாட்டுடன் இணைவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தவர் காமராஜ்:
"குளமாவது, மேடாவது எல்லாம் இந்தியாவில்தானே இருக்கு".

இதன் மூலம் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு தான் எதிரி என்பதையும் காட்டினார்.

**
மேலும்,
இவர் ஒரு கண்முடித்தனமான கம்யுனிஸ்டு எதிரி என்பதற்க்கு கலைவானர் பற்றிய அவரது கருத்தையும்,
நில மீட்பு (ஐம்பதுகளில்) பற்றிய அவரது கருத்தையும் கீழே கொடுக்கிறேன்:

ரஸ்யா சென்று வந்த கலைவானரை கோமாளி என்று நாகரிகமின்றி கூறியவர் காமராஜர்.

நில மிட்பு போரட்டத்தின் அடிப்படை நியாயத்தைக்கூட உணர இயலாமல்,
"உழுபவனுக்கு நிலம் சொந்தமெனில், சிரைப்பவனுக்கு மயிர் சொந்தமா, துவைப்பவனுக்கு வேட்டி சொந்தமா" என்று வக்கிரமாக பேசியவர்தான் இவர்.

இவையெல்லாம் கமராஜரை தெய்வமாக்கும் என்றா சொல்கிறேர்கள்....


நான் சொல்கிறேன் இவையெல்லாம் அவரையும், தேவர் செய்ததற்க்கு தேவரையும் தெய்வமாக்கும். ஆக்குவது என்ன அல்ரெடி ஆக்கி விட்டனர்.

ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் எந்த மக்கள் தலைவரும் ஆளும் வர்க்கத்தால் தெய்வமாக்கப்படுவார்கள்.

இதை அறிவுஜீவிகள் அங்கீகராம் என்றும் கூறுவார்கள்.

நன்றி,
அசுரன்.

said...

அசுரன்,

மறுபக்கங்களை கொண்டு வரும் பணியை சிறப்பாக செய்வதற்கு பாராட்டுக்கள்.

மனிதர்களை மகான்கள் ஆக்கி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக ஆக்கும் போக்குக்கு சாவு மணி அடிக்க இது உதவும்.

தொடரட்டும் உங்கள் பணி.
ஒரு பாரதி சுட்டி (பழசு)
http://srimangai.blogspot.com/2006/03/blog-post_29.html

said...

காமராஜரைப் பற்றி டி என் ஸேஷன் தன்னுடைய பயக்ராஃபியில் மிக உயர்வாக எழுதியுள்ளார். அவரது கூற்றுப்படி காமராஜர் பள்ளிக்குப் போகவில்லையே தவிர விஷயங்களை நன்கு அறிந்தவர். ஆங்கிலம் அவருக்கு ப்ரச்சினையாக இருந்ததே இல்லை.

said...

அசுரரே,

>>> கற்பக விநாயகம் தனது கட்டுரையின் கீழேயும், உள்ளேயும் தெளிவாக <<<

மேலேயுள்ள கட்டுரை தங்களுடையது என்று நினைத்தேன். சரி விடுங்கள்.

மீண்டும் இந்த கட்டுரையை பார்த்தேன். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றுதான் இருக்கிறது. ஆதார நூல்கள் இல்லை.

ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் ஒரு கட்டுரையை குறிப்பிடுகிறீர்களா?

said...

///காமராஜரைப் பற்றி டி என் ஸேஷன் தன்னுடைய பயக்ராஃபியில் மிக உயர்வாக எழுதியுள்ளார். ////

டி.என்.சேஷனும் ஒரு மாமா தானே? மாமாக்கள் எழுதினதை மட்டும் தான் அம்பிக்கள் நம்புவீங்களோ?

said...

அசுரரே,

கட்டுரையின் இறுதியில் நூல் பட்டியலை இப்போதுதான் கண்டேன். ப்ரௌஸர் செய்த சதியால் முதலில் அரைகுறையாகத்தான் தெரிந்தது. இப்போது ஓக்கேயாகிவிட்டது. ஜீவ பாரதி என்பவரின் புத்தகத்தை சான்றாகக்கொண்டு எழுதியுள்ளீர்கள்.

எனினும் தேவையில்லாமல் ஆதார நூல்களை கேட்டதற்கு வருந்துகிறேன்.

வந்தனங்கள்.

said...

அசுரரே,

கட்டுரையின் இறுதியில் நூல் பட்டியலை இப்போதுதான் கண்டேன். ப்ரௌஸர் செய்த சதியால் முதலில் அரைகுறையாகத்தான் தெரிந்தது. இப்போது ஓக்கேயாகிவிட்டது. ஜீவ பாரதி என்பவரின் புத்தகத்தை சான்றாகக்கொண்டு எழுதியுள்ளீர்கள்.

எனினும் தேவையில்லாமல் ஆதார நூல்களை கேட்டதற்கு வருந்துகிறேன்.

வந்தனங்கள்.

said...

அனானி,

>>> மாமாக்கள் எழுதினதை மட்டும் தான் அம்பிக்கள் நம்புவீங்களோ? <<<

இதை நீங்கள் அம்பிகளிடம் போய் கேளுங்கள்.

said...

தமிழினி அய்யா,

தங்களது ஆதரவு உற்சாகமளிக்கிறது. நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி,

அதில் இருப்பவர்கள் எல்லாம் மிகப் பெரிய அறிவுஜீவிகள் என்று தெரிகிறது. நமக்கு இந்த அரைகுறைகள்தான் லாயக்கு....

அறிவு ஜீவிகளோட மல்லுக் கட்ட மல்யுத்த பயிற்சி தலையனையாக மட்டுமின்றி, மல்யுத்த வீரரானகவும் சாதனை படைத்த முத்து தமிழினியே சிறப்பான சாய்ஸ் (:-)))) சும்மா நக்கல்.....லு..லு..லு..வாய்க்கி).

அது ஏனோ இந்த பின் நவீனத்துவம் பேசுபவர்கள் நேர்மையானவர்களாக இருப்பதில்லை(எனது அனுபவம்). அதனாலதான் அது போன்ற ஆட்களிடம் அதிகம் வைத்துக் கொள்வதில்லை.

மற்றப்டி நீங்கள் அங்கு கடைசியாக கேட்ட கேள்விக்கு அம்மனி பதிலே சொல்லவில்லை......உண்மைகளை ஏற்றுக் கொள்ள சீரணிக்காத மனசுதான் பிரச்சனை.

***

உங்களது கட்டுரைகளில் சில தமிழ்மணத்தில் வருவதை பார்த்தேன் எனது கட்டுரைகளுக்கு எதிர்வினை செய்வது, சில தளங்களில் மற்றவர்கள் பரப்பும் எதிர் கருத்துக்களுக்கு பதில் சொல்வதற்க்கே நேரம் சரியாக உள்ளதால். நமது ஆதரவு கட்டுரைகளுக்கு ஒரு '+' குத்த முடியவில்லை.

தருமிகூட ஒரு வாரம் முன்பு இடஒதுக்கீடு கட்டுரை பற்றி கருத்துக் கூற சொல்லி கேட்டிருந்தார். அவர் நல்ல மனிதர்(:-)') என் மேல் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். இன்றைக்கு அவர் கட்டுரை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும்.

நன்றி முத்து தமிழினி,
அசுரன்.

said...

முயுஸ்,

//கட்டுரையின் இறுதியில் நூல் பட்டியலை இப்போதுதான் கண்டேன். ப்ரௌஸர் செய்த சதியால் முதலில் அரைகுறையாகத்தான் தெரிந்தது. இப்போது ஓக்கேயாகிவிட்டது. //

பரவாயில்லை விடுங்கள் ஒன்றும் பிரச்சனையில்லை :-)))

நன்றி,
அசுரன்.

said...

1952-57க்கு இடைப்பட்ட காலத்தில் முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது பர்மா நாட்டிற்கு சென்றிருந்தார். அஞ்சாறு மாசமாய் ஆள் பர்மாவிலேயே இருந்து முருகன் புகழைப் பேசியபடியே இருந்து விட்டார். இங்கோ பெருமழையும் புயலும் வந்து ராமநாதபுரம் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. நிவாரணப்பணிகள் எதனையும் செய்திடவோ, மேற்பார்வையிடவோ தேவர் அங்கில்லை. அமைச்சர் குழுவினர் முதல்வர் காமராஜ் தலைமையில் ஓடியாடி வேலைகளைக் கவனித்தனர். அச்சமயத்தில்தான் ஓர் ஊருக்கு சென்று மக்களை சந்திக்க காமராஜர் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சம்பவமும் நடந்தது. எல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியபிறகு ஒரு நாள் சாகவாசமாய் பர்மப்பயணம் முடித்த பின்னர், தேவர் ஊர் திரும்பினார். அவருக்கு வரவேற்பும் கொடுத்தார்கள் அவரது அடிப்பொடிகள். ஊர் மக்களிடம் கேட்டார் " எல்லாப்பயலுகளும் வந்தானுங்களா? உதவி செய்யச்சொல்லி, நான் பர்மாவுல நேதாஜிகிட்டே (!! 1950களில்!!) சொன்னேன். அவரு டில்லிக்கு டிரங்கால் போட்டு நேருகிட்டே சொல்லிட்டாரு. அங்கிருந்து காமராஜ்கிட்டே உத்தரவு வந்து, நான் சொன்ன் வேலைகளைச் செஞ்சிருப்பாங்களே!"ன்னு ஒரே போடா போட்டாரு பாருங்க! அதுதான் முத்துராமலிங்க தேவரு.

கற்பகவிநாயகம்

said...

தலைவர்களின் மறுபக்கம் சரியா மணக்குகுது. ஒருநாளும் கேள்விப் படாத தகவல்கள். இதுபோலத் தான் எல்லாத் தலைவர்களும் தாழ்த்தப் பட்டவர்கள் பற்றி அபிப்பிராயம் கொண்டிருந்திருப்பார்களோ?
வெளிக் கொணர்ந்ததற்கு நன்றி. நாலு பேருக்குத் தெரிகிறதே வலிப்பூவின் உதவியால்.
பெரிய கட்டுரை.

said...

அமைதியாக உட்கார்ந்து சற்று நேரம் அறிவை பயன் படுத்தி யார் ஜாதி வெறியன் என சிந்தியுங்கோ சார்ஸ்

said...

முத்துராமலிங்கம் பெருந்தலைவர் காமராஜர் பற்றி இப்படியெல்லாம் கூறியிருப்பது உண்மையானால் கண்டிப்பாக அவர் மூடராகத் தான் இருக்கும் .ஏனென்றால் காமராஜர் உன்னதமான தலைவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை .அவர் ஒரு ஜாதிக்கு மட்டும் தலைவரில்லை .என் போன்ற நாடார் அல்லாதவரும் அவரையே தலைவனாக ஏற்றுக்கொள்ளுகிறோம்..அறிஞர் அண்ணா பெருந்தலைவரை "குணக்கொழுந்தே! குணாளா!" என்றழைத்ததே பொருத்தம் .காமராஜர் நம் தமிழ் குலம் தழைக்க வந்த குணக்கொழுந்து.

said...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாதி வெறியன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தன் சாதியை ஒரு முரட்டு சாதியாக, அதிகார வர்க்க சாதியாகவும், தன்னை அதன் ஒப்பற்ற தலைவராகவும் காட்டத்தான் இந்த 9 முயன்றுள்ளாரே தவிர, நம் நாட்டிற்காக எந்த நன்மையும் அவர் செய்யவில்லை. அவ்வாரு செய்ததாக சொல்லப்படுவதெல்லாம் தன் சொந்த செல்வாக்கை நிலைப்படுத்தான்.
இன்று அவர் ஒரு சாதித்தலைவராகவும், தலித்துகளால் வெறுக்கப்படும் தலைவராகவும் இருப்பதை வைத்தே அவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், தேவர் பூஜைக்கு போய் பங்கு கொள்ளவும் முயலும் அரசியல் தலைவர்கள். தேவர் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து தான் செய்கிறார்களே தவிர, அந்த 9-ன் மேல் உள்ள பாசத்தால் அல்ல.

தலித்துகளின் மேல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர் தேவர் என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. ஒரு தலித் ஆண் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தான் என்பதற்காக அவனை மாறுகால் மாறுகை வாங்கச்சொல்லி அதையும் செய்து முடித்தவர்.

இவரைப்போலத்தான் தேவர் சமுதாயத்தை சேர்ந்த முன்னால் திமுக அமைச்சரும் அழகிரியால் கொல்லப்பட்டவர் என்று சொல்லப்படுபவருமான தா. கிருட்டினன் எந்த நிகழ்ச்சிக்கு (திருமண நிகழ்ச்சிக்கு கூட) சென்றாலும் சாதியைப்பற்றி பேசாமல் இருக்க மாட்டார். தங்களை அதிகார வர்க்கமாகவும், தலித்துகளை அடிமை வர்க்கமாகவும் நினைக்கும் எண்ணம் என்றுதான் இவர்களை விட்டு போகுமோ?.

said...

//
இந்த 9 முயன்றுள்ளாரே தவிர, நம் நாட்டிற்காக எந்த நன்மையும் அவர் செய்யவில்லை.
//
internetல என்ன வேணா சொல்லலாம் போலிருக்கு. வேற யாரவது கேட்டிருந்தா மாறு கால் மாறு கை தானுங்கோ.

said...

I said //*Do you need anything more...Exact village name '....valasu' near nalroad, kangeyam. Hided the exact name. I know there are set of outside people who can make problems. We know we are...So we want to live peacefully.*//

Asuran said //* முத்துக்குமார்,

உங்களது நாடு "....valasu' வா? *//


Now I can understand how much you understand my questions and How much knowledge you have about indian villages.

I gave the almost address, you are asking what country :)))


ஓட்டு அரசியலின் விபரீதத்தால், கோமாளி நடிகன் விவேக் கூட, அவனிடம் சிறு உரசல் செய்த சன் டிவிக்கு "ஒரு கோடி தேவர்களின் சமூகத்து ஆளாக்கும் நான்" என சவடால் அடிக்க முடிகிறது

Mr Karpaga Vinayagam, from your words, I understand how much you respect others. Vivek is a comedian, he is not komali by his life. Komali is a comedy charactor but you are calling him as komali. I can only say you hate everything those things are coming out as words. May be your brought in wrong place.

I do care about my people, without knowing anything, you guys simply talking about people who came up from scheduled castes are not taking care of their castes. I do care my caste and other caste (even I helped a pandaram guy to get his job in chennai). I donot want to publish my things to everyone. this is just you guys to understand our feelings.

Anbudan Muthukumar
Anbudan Muthukumar
Anbudan Muthukumar

'Anbe Sivam'

said...

//
இந்த 9 முயன்றுள்ளாரே தவிர, நம் நாட்டிற்காக எந்த நன்மையும் அவர் செய்யவில்லை.
//

தேவருக்கு பெண் குரல் தான் அதற்காக இப்படி கூறலாமா?

//தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், தேவர் பூஜைக்கு போய் பங்கு கொள்ளவும் முயலும் அரசியல் தலைவர்கள். தேவர் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து தான் செய்கிறார்களே தவிர, அந்த 9-ன் மேல் உள்ள பாசத்தால் அல்ல.//

உண்மைதான். பூசைக்கு செல்லும் அவ்வின மக்கள், செல்லும் வழியில் உள்ள அம்பேத்கார் சிலைகளை சேதப்படுத்துவது செறுப்பு மாலை அணிவிப்பது. சாலையோரம் வேலை செய்துகொண்டிருக்கும் தலித் மக்களிடம் வம்பிலுப்பது போன்ற செயல்களில் இன்னும் ஈடுபட்டுகொண்டுதான் இருக்கின்றனர். இதனால் தான் பூசை நாட்களில் இந்த பகுதியில் பதட்டம் அதிகரிக்கிறது. இவர்களின் செயல்பாடுகளை ஹெலிகாப்டரில் இருந்து கண்காணிக்கவேண்டிய அளவில் தான் உள்ளது இந்த குரு பூசை.

said...

This post by KV is highly biased, though it quotes some correct facts. I agree that Thevar was accepted as a leader by Mukkulathor, he never considered himself as only a leader for them; He had good relations, followers, friends and leaders among all castes, excepting perhaps Nadars. Except during Muthukulatur riots, he was patronising Dalits all along; it might sound like a feudal approach today, but one should see the circumstances of his time. Not only him, all rich landlords and zamindars of his time, whether Mudalir, Pillai, Gounder, Thevar, Nayakkar or Reddiar were feudal and were high handed in their handling of poor people, whether dalits or their own kinsmen or upstarts, whether Nadars or thier own relative.

In fact, thevar and few others like Arumugam Pillai of Sivakasi area were more inimical to Nadars, than to Dalits; Dalits became the victims in the cross-fire. That was purely because of their ill understanding of the changing base of economy, from agriculture to services like trading. Even today, middlemen make more money out of agriculture than farmers or landlords. The only difference is that anybody from any caste gets into trading today; whereas it was the preserve of Nadars in those times, especially in agriculture produce.

KV himself says that Kamarajar went to obtain blessings of Thevar when he became the CM. It definitely shows the magnamity of Kamarajar, but also shows a pragmatic approach. It is not that Kamarajar did not help his caste men. How much time would it take some one to put out cases where Kamarajar helped his castemen, surreptiously of course? Even then, will it reduce Kamarajar's contribution to Tamilnadu?

I feel that Dalit and Nadar intellectuals should take a pragmatic approach based on understanding of tamil caste history instead of this approach; I see this every where on the tamil internet, especially among Nadars, Dalits and Vanniars. The best course forward for all of us would be to promote Tamil identity, accepting the past sins and omissions, rather than divide and get divided more.

Though i do not justify caste based discrimination and violence, it is ridiculous to judge people of an past era by today's standards. It is all the more ridiculous to dig old wounds when it would serve no purpose.

said...

காமெடியன் எனும் ஆங்கிலப்பெயரை தமிழில் எழுதும்போது 'கோமாளி' என்று சொன்னால் அதற்கும் ஒரு உள்நோக்கம் கற்பித்தால் என்ன செய்வது?

நண்பர் ஒருவர், தேவரைக் குறிப்பிடும்போது '9' எனக் குறிப்பிட்டிருந்தார். இது தவறான செயலாகும். பால்பிறழ்ந்தவர்களை, ஏளனம் செய்யும் சீரழிவுப்போக்கை நாம் இங்கு அனுமதிக்கக் கூடாது.

காமராஜ் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போதே, சசிவர்ணத்தேவர்(பார்வர்டு பிளாக்), 'காங்கிரஸ் பேச்சாளர்கள், தேவரை தேர்தல் கூட்டங்களிலே '49 வயசாகிறது.. இன்னும் கல்யாணம் செய்யவில்லை. அவர் ஒரு பேடி' என்று தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தனர்' என்கிறார். அத்தகைய தரம் தாழ்ந்த செயலை நாம் உணர்ச்சி வசப்பட்டு செய்வது நாகரீகமல்ல என்பது என் அபிப்பிராயம்.

தேவரைப் பற்றிய இப்பதிவின் நோக்கமே, அவரின் பிம்பத்தைக் கலைத்து, சாதி மயக்கத்தில் இருந்து ஜனநாயக சக்திகளை விடுவித்து, சாதி ஒழிப்பு இயக்கத்தில் அவர்களை இணைப்பதே.

கற்பகவிநாயகம்

said...

ஏனய்யா, பழசுகள தூசி தட்டுங்கோ, நல்ல விடயம் மக்களுக்குச் சொல்ல மட்டுமே...

எரிகின்ற சாதீய நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதாய் இக்கட்டுரை ஆகக் கூடாது. இரத்த அணுக்களில் ஒட்டிப் போன சாதி அது சார்ந்த வெறி தணிய அல்லது இற்றுப் போக இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம். இக்காலம் குறைய வேண்டுமெனில் இது சார்ந்த பேசுவது தவிர்ப்பது நலம்.

அன்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்...

said...

சாதி பற்றி பேசுவர்களை ஓட ஓட அடிக்கவேண்டும்...

said...

//இது //பால்பிறழ்ந்தவர்களை//(கும்பிடுரேனுங்கையா, இந்த தமிழ் வார்த்தைக்கு) + 'குற்றப்பரம்பரை'யின் 'ஜாமீனாக' வந்த தேவரை* எவ்வகையிலும் கேவலப்படுத்துவதாகாது. மாறாக, உங்களைத்தான் தோலுரிக்கிறது/கேவலப்படுத்துகிறது//

வணக்கத்துடன்,

வாருங்கள்...

கற்பக விநாயகத்தின் வரிகளை தவறாக புரிந்து கொண்டு விட்டேர்கள்.

அவர் அங்கு தேவர் அவர்களை பால்பிறழ்ந்தவர் என்று சொல்லியிருக்க வாய்ப்பில்லை(அந்தளவுக்கு பண்பில்லாதவரில்லை கற்பக விநாயகம்) மாறாக, பொதுவாகவெ 9 என்ற வார்த்தையை பயன்படுத்தி யாரையும் கேலி செய்வது தவறு என்பதைத்தான் வலியுறுத்துகிறார் என்று கருதுகிறேன்.

பால்பிறழ்ந்து பிறப்பது அவர்களுடைய தவறு அல்ல. ஆகையால் அந்த வார்த்தையை கேலி செய்ய உபயோகப்படுத்துவது ஒரு பாவமும் அறியாத பால்பிறழ்ந்த்வர்களை துன்புறுத்துவதாக அமையும் என்பதைத்தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.


மேலும் கற்பக விநாயகம் தெளிவாகவே குறிப்பிடுகிறார்:

//அத்தகைய தரம் தாழ்ந்த செயலை நாம் உணர்ச்சி வசப்பட்டு செய்வது நாகரீகமல்ல என்பது என் அபிப்பிராயம்//

//தேவரைப் பற்றிய இப்பதிவின் நோக்கமே, அவரின் பிம்பத்தைக் கலைத்து, சாதி மயக்கத்தில் இருந்து ஜனநாயக சக்திகளை விடுவித்து, சாதி ஒழிப்பு இயக்கத்தில் அவர்களை இணைப்பதே.//


நன்றி,
அசுரன்

said...

9 என்று ஒருவரை வைவதை நாம் அனுமதித்திடக் கூடாது. பால் பிறழ்ந்தவர்களைச் சுட்ட மதம் சார்ந்த அரவானி எனும் சொல் இருந்தாலும், அவர்களையே ஒன்பது என்று சொல்தல் அவர்களை அவர்களுடைய குறைபாட்டைச் சொல்லிக் கேவலம் செய்வதாகும். உடல் ஊனமுற்றவர்களை, உதாரணமாக பார்வைத்திறனில்லாதோரை 'குருடா' எனச் சொல்வதற்கு சமம்.

எனவேதான் தேவரின் சாதிவெறியை அம்பலப்படுத்தும்போது '9' எனச் சொல்வதைக் கண்டித்திருந்தேன். இதனை நோண்டி ஆராய்ச்சி செய்வது, விவாதத்தைத் திசை திருப்பும் வேலையில் போய் முடியும்.

அன்றைக்கு தேவர் கட்டி வைத்திருந்த சாதி ஒடுக்குமுறை வெகுமக்கள் தளத்தில் எவ்வாறு இருந்தது என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் அறிய முடியும்.

தேவரின் கோபமூட்டும் பேச்சால், இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'தேவர், காலித்தனம் செய்கிறார். அந்த ஆசாமியைப் பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.

அரசும் தேவரைக் கைது செய்தது. பின்னர் எங்கெல்லாம் கலவரத்தில் ஈடுபட்டார்களோ அந்த ஊர்களில் தேவர், தேவேந்திரர் ஆகிய இருதரப்பினரிலும் நூற்றுவரைக் கைது செய்தது. சில மறவர் ஊர்களில் ஊர்ப்பெருசுகள், இளைஞர்களை (கலவரத்தில் ஈடுபட்ட) மறைத்து வைத்தனர். அவர்களுடன் பிராமணர் இனத்தவரான டி.எஸ்.பி. (பெயர் மறந்து விட்டது) பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை ஒப்படைக்க வேண்டினார். அப்போது அம்மறவர் இனத்துப் பெருசுகள் சொன்ன பதில்:- "அய்யா, நீங்க சொல்றதுனால நாங்க எங்க பயலுகள ஏன் ஒப்படைக்கிறோம் தெரியுமா? நீங்க பிராமணர். ஒங்களுக்கு நாங்க கீழ்ப்படிஞ்சாத்தான், அந்தப் பசங்க (பள்ளர்) எங்களுக்குக் கீழ்ப்படிவாங்க. அதனாலதான் நாங்க ஒங்க பேச்சுக்குக் கட்டுப்படுறோம்".

கற்பகவிநாயகம்

said...

கீழே இருப்பது மலம்:

>>> .....காட்டத்தான் இந்த 9 முயன்றுள்ளாரே தவிர,...>>>

கீழே இருப்பது மலர் சுற்றிய மலம்:

>>>>> இது தவறான செயலாகும். பால்பிறழ்ந்தவர்களை, ஏளனம் செய்யும் சீரழிவுப்போக்கை நாம் இங்கு அனுமதிக்கக் கூடாது. <<<<

பூக்களை நாரினால் தொடுக்கலாம். நாறும் மலத்தால் தொடுப்பவர்களும் உண்டு.

கற்பக விநாயகத்தின் மாலை எப்போதும்போல நாறுகிறது.

said...

இங்கே 9 என்று குறிப்பிட்டிருப்பது. ஆண்மையற்ற தேவர், தன்னை பெரிய வீரனாகவும் அரிவாள், வேல்கம்பு எல்லாம் இவருக்கும், இவருடைய சமூகத்திற்கு மட்டுமே சொந்தம் போல பேசியதை நக்கல் செய்வதற்காகத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளதாக கருதுகிறேன். நம் பேச்சு வழக்கில் கூட சில மொழு, மொழு என மீசையில்லாமல் இருக்கும் நண்பர்களை 9 என்று கிண்டலடிப்பது வழக்கம் தானே?. "காதலர் தினம்" படத்தை கூட இரண்டு ஹீரோயின் படம் என்று அந்த படத்தின் கதாநாயகனை கிண்டல் செய்தது இல்லையா. அது மாதிரி இதுவும் இருக்கலாம். மற்றபடி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

said...

விஜயகாந்த் எனும் கழிசடை ஆரம்பித்துள்ள கட்சியில் சேருவதற்கான தகுதி செல்வன் அவர்களுக்கு இருப்பதாகவே கருதுகிறேன்.

ராஜாஜியை 'குல்லுகப் பட்டர்' எனச் சொல்வதையும், காமராஜை 'சாணாப்பயலே' எனத் திட்டுவதையும் ஒன்றுதானே என செல்வன் கேட்டிருக்கிறார்.

சாதி இல்லைன்னு சொல்லிட்டு, ஸ்கூல்ல சேக்கும்போது 'என்ன சாதி'ன்னு ஏன் கேக்கறீங்க? என விஜயகாந்த் கேட்டிருந்த 'அறிவாளித்தனமான' கேள்வியுடன் செல்வனின் இந்த தர்க்க ஞானம் ஒத்துப் போவதே, அவர் அக்கட்சியில் சேரும் தகுதி என்கிறேன்.

சம்பவம் 1: (நடப்பது 1950கள்) ஒரு பார்ப்பனச்சிறுவனும், பறையர் சிறுவனும் சண்டை போடுகின்றனர். பார்ப்பனச் சிறுவன் பறையர் சிறுவனை 'போடா! பறப்பயலே!' என அனைவர் முன்னிலையிலும் திட்டுகிறான். பறையர் இனச்சிறுவன் கூனிக்குறுகிப்போகிறான்.
இந்த இடத்தில் செல்வன் போன்ற மெத்தப்படித்த மேதாவிகள் 'ஏன் அச்சிறுவன் குறுக வேண்டும்? இவனும் பதிலுக்கு பார்ப்பாரப்பயலே!'ன்னு திட்ட வேண்டியதுதானே!' என்று இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அச்சிறுவன், அவனை 'பார்ப்பான்' என்றாலும், 'பிராமணன்' என்றாலும் அது அப்பார்ப்பனனை எவ்விதத்திலும் இழிவு செய்யாது..என்பதை இங்கு நிலவும் ஏணிப்படி நிலையை நன்கு உணர்ந்தவர்கள் அறிய முடியும்.

ஒரு தலித்தை அவரின் சாதிப்பெயரை சொல்லி 'பள்ளப்பயலே!' என்றோ 'சக்கிலிச்சி' என்றோ பொது இடத்தில் கூறுவதும், தலித்திடம் அவ்வாறு பேசுவதும் சட்டப்படி ஏன் தண்டனைக்குரியது என்பதையும், இதே சட்டப்படி ஒருவரை 'மூப்பனார் பயலே!' என்றோ 'வெள்ளாளச்சியே' என்றோ திட்டுவதைக் குற்றமாகக் கருத முடியாது ஏன் என்பதையும் செல்வன் உணர முடியுமா என்று தெரியவில்லை. சட்டப்படி ஏன்? நடைமுறையில் கூட 'குல்லுகப் பட்டர்' என்பது வசைச்சொல்லாக முடியாதே?

ஒரு கம்பெனி முதலாளி, அவரிடம் வேலை செய்யும் தொழிலாளியை ஏளனம் செய்ய 'கூலி' என்று சொல்லமுடியும். பதிலுக்கு அவரை 'முதலாளி' என்று சொல்வது திட்டுவதாகக் கருதப்பட முடியுமா?

சென்னை, நூறடி சாலையில் உள்ள விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் செல்வனின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

said...

தேவரை சுதந்திரப் போராட்ட வீரர் என்று புளுகும் செயல் பற்றி..

தேவர், 1934க்கு பிறகுதான் காங்கிரஸ் கூட்டங்கள், மாநாடுகளுக்கு வர ஆரம்பிக்கிறார். அது அவரின் தவறும் இல்லை.. அப்போது அவரின் இளம்வயதைக் கணக்கில் கொண்டால், அது பெரிய தவறில்லைதான். காங்கிரசின் பெரிய போராட்டங்களில் ஒன்றான உப்புக்காய்ச்சும் சடங்கில் தேவர் கலந்து கொண்டதில்லை. நேரடியாக 1937 தேர்தலில் காங்கிரசு சார்பில் ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றார். அவர் வெற்றிபெற்றாலும், சில இடங்களில் ஓட்டுபோடாத தலித் மக்களைத் தாக்கிடத் தூண்டுதலாய் இருந்தார். இது சம்பந்தமான வழக்கில் தேவருக்கு பாதகமாய் தீர்ப்பு சொன்ன நீதிபதியின் கால் வெட்டப்பட்டது. ஒரு டெபுடி தாசில்தார் கொல்லப்பட்டார். வெள்ளைக்கார அரசு, தேவர் வாயைத்திறந்து பேசினாலே கலவரம் வருவதால் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டது. அதன் பின் காங்கிரசும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டபோதும் அதில் தேவர் கலந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அவர் வாய்ப்பூட்டு சட்டத்தில் சிக்கி இருந்தார். அக்காலகட்டத்தில் தேவர் ஒரு மில் ஸ்டிரைக்கில் கலந்திருந்தார். அப்புறம், சி டி ஆக்டை (குற்றப்பரம்பரை சட்டம்) நீக்க வேண்டும் என்று ஒரு போராட்டம்.

1947ம் வந்து விட்டது.. 1948, 1949 களில் ராமநாதபுரத்தில் சாதிக்கலவரங்கள்... தேவரும் பார்வர்டு பிளாக்கில் 1949ல் ஐக்கியமாகி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் 1946 தேர்தலில் எம் எல் ஏ ஆகி, அட்டெண்டன்ஸ் இல்லாததால் தகுதி நீக்கம் ஆகி விட்டார்.

இதுதாம் 1947க்கு முன் தேவரின் நிலை. இதில் தேவர் சுதந்திரப்போராட்டத்தில் எங்கே நிற்கிறார்?

காந்தி சொன்ன காங்கிரசின் நிர்மாணத்திட்டப்படி கதர் சோப், கதர் துணி வியாபாரம் போன்ற புரட்சிகர நடவடிக்கைகளிலும் அவர் அரும்பணி ஆற்றின மாதிரி தெரியவில்லை. முருகனைப்பற்றியும், இந்து மதம் பற்றியும் ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்தார்.. அம்மட்டே...

பொருளாதார சுதந்திரத்தினை நாடி தூய தேச பக்தர்களான பகத்சிங் போன்றோரும், புன்னபுரா,வயலார், தெலங்கானா உழவர்களும் தீவிரமாய்ப் போராடியது சுதந்திரப்போர். அதே நேரத்தில் கலாச்சார அடக்கு முறைகளில் சிக்குண்ட மக்களினை மீட்டெடுக்க சுயமரியாதையை ஊட்டிய அம்பேத்கர்,பெரியார் போன்றோர் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தியதும் சுதந்திரப்போருக்கு இணையான இயக்கச்செயல்களாகும். இவ்விரண்டும் இல்லாமல், புரோக்கர் வேலை பார்க்கும் காங்கிரசின் காட்டிக்கொடுக்கும் இயக்கத்திற்கும் அன்று இடம் இருந்தது. இந்தக் காட்டிக்கொடுக்கும் கூட்டத்தின் தொங்கு சதையாகத்தான் தேவர் இருந்தாரே ஒழிய உண்மை சுதந்திரப்போராளிகள் பக்கம் நின்றாரில்லை. காங்கிரசிலும், அவர் இருந்த காலகட்டத்தில் வெகுஜன மக்கள் இயக்கம் ஏதும் இல்லை. எம் எல் ஏ மந்திரி பதவி வகித்து சுகம் காணும் தலைமுறையின் காங்கிரசுதான் அப்போது இருந்தது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

said...

சுதந்திரப்போராட்டத்தில் தேவரின் விசுவாசம் எப்பேர்ப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
காந்தி மீது பலருக்கு பலவகையில் விமர்சனம் இருப்பினும், அக்காலகட்டத்தில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சுதந்திரப்போரின்போக்கை மாற்றும் வலிமை, செயல்தந்திரம் காந்தியிடம் இருந்தது என்பதனை அனைவரும் ஒத்துக்கொள்வர். அவரின் இறுதிக்காலம், மதவெறி சக்திகளிடம் போராடுவதில் கழிந்தது என்பதும், இந்து மதவெறிக்கூட்டத்தின் துப்பாக்கிக்கு அவர் கொல்லப்பட்டதும் எண்ணற்பாலது. காந்தியிடம் கடும் கருத்துவேறுபாடு கொண்டிருக்கும் இடதுசாரிகளோ, அல்லது ஏனைய தேசியவாதிகளோ அவரின் கொலையை ஆதரித்திட்டதில்லை. ஆனால் தேவரய்யா காந்தியின் சாவைக்கூட கொச்சைப்படுத்திப் பேசியவர்தான். "இந்துக்கள் பட்ட கஷ்டங்களுக்கு அவர் செவிமெடுக்க மறுத்தார். அதனால்தான் அவரின் சாவு கூட தரமற்ற சாவாக இருந்தது".. இது தேவரய்யா வசனம்.

அடுத்து இன்னொரு காரியம் செய்துள்ளார். நாடே, காந்தியைக் கொன்ற கூட்டத்தை வெறுத்து ஒதுக்கும் வேளையில் அக்கொலைக்கூட்டத்தின் சகாவான கோல்வல்க்கரை மதுரைக்கு அழைத்து வந்து பொன்முடிப்பு கொடுத்து வாழ்த்திப் பேசினார் தேவர். அச்செயலை நியாயப்படுத்தி "காந்தி இந்து மதத்தின் விரோதி. எனவே கோல்வல்க்கருக்கு பணமுடிப்புக் கொடுக்க இசைந்தேன்" என்றும் கூறி இருக்கிறார்.

சுதந்திரப்போரை எல்லா இடங்களிலும் காட்டிக்கொடுத்தும், பிரிட்டிஷ் காரனுக்கு மன்னிப்புக்கடுதாசி எழுதி எழுதியே கிலோக்கணக்கில் பேப்பர்களை வீணடித்த வீர சாவர்க்கர் பரம்பரையினருக்கு (வாஜ்பேயி கூட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்ட நபர்களை வெள்ளைக்காரனுக்குக் காட்டிக்கொடுத்த கயவாளிதான் என்பதை நாடே அறியும்) இந்துவெறிக்கும்பலுடன் கூடிக்குலாவிய தேவரய்யாவை சுதந்திரப்போர் தியாகி என்பது தகுந்த செயல்தானா?

***********************************************************************************

தேவரின் சாதிவெறிப்போக்குக்கு மற்றோர் சான்றைத்தருகிறேன். அறிஞர் அண்ணா, மதுரையில் ஓர் மேடையில் ஏறிப்பேசியிருக்கிறார். அதே மேடையில் தேவருக்கும் பேச அழைப்பு விடுக்கப்பட்டது. தேவர் கோபத்தின் உச்சிக்குப் போய் சொன்ன அந்த வாக்கியம் "தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்".
(பின் குறிப்பு: அறிஞர் அண்ணா, தேவதாசி மரபின்பாற்பட்ட இசைவேளாளர் வகுப்பினர். அண்ணாவின் சாதியைப் பற்றி இருவேறு கருத்து நிலவினாலும், கண்ணதாசனின் 'வனவாசம்' நூல் தரும் சாட்சியம் அண்ணாவை, இசைவேளாளர் என்றே சொல்கிறது).

இக்குறிப்பும் தேவரின் சாதிவெறி மனதைப் பகிரங்கப்படுத்துகின்றது

said...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20601135&format=html
hi Read here

said...

நாய்க்குத் தெரியுமா செக்கும் சிவலிங்கமும்

said...

அனானி,

மலர்மன்னனை இதே கற்பக விநாயகம், மலர்மன்னனுடைய பெரும்பாலான அவதூறு, பொய்களை அம்பலப்படுத்தி திண்னையில் விவாதம் செய்திருக்கிறார். விடுபட்ட விசயங்களில் நீங்கள் சுட்டியில் குறிப்பிட்டுள்ள இந்து வெறியன் பயங்க்ரவாதி மனித பன்றி கோட்சே காந்தியை கொன்றதை ஏதோ புனிதச் செயல்போல மாயமாலம செய்யும் மலர்மன்னனது வழக்கமான ஒரு பொய்யும் உள்ளது.


கோட்சே என்ற ஒருவன் பிரிட்டிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக, இந்தியா தாயை விபச்சாரியாக மாற்றி வைத்திருந்ததற்கெதிராக எதுவும் செய்யாத ஒரு தற்குறிதான்.

அன்றைய இந்துத்துவ சக்திகளை அனைத்துமே அப்படிப்பட்ட தற்குறிகளாக(வாஜ்பேயி etc) சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுப்பவர்களாக இருந்தார்கள் என்ப஀யும் கற்பக விநாயகம் பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறார்.

அதே மலர்மன்னன் கட்டுரையில் மாப்ளா கலகம் பற்றி அவர் திரித்த கயிறை அவருக்கே சுருக்குப் போட்டு அம்பலமாக்கி நான் எழுதிய கட்டுரையும் திண்ணையில் வெளிவந்தது.


கோட்செ சுய சிந்தனையற்ற நிலபிரபுத்துவ தற்குறியேயன்றி வேறல்ல. இன்றைக்கு அமேரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு பல்லக்கு தூக்கிய அதே இந்துத்துவம் தான் அன்றைக்கும் உள்ளது கோட்சே இந்துத்துவம்.

ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் இந்து என்று நாட்டின் எந்த பெரும்பான்மை மக்களை அடையாளப்படுத்துகிறீர்களோ அதே மக்களுக்கு எதிராகத்தான் கோட்செ முதல், இன்றைய கங்கையை சூயஸுக்கு கூட்டிக் கொடுத்த வாஜ்பேயி வரை மாமாக்களாக உள்ளனர்.

அதனால் கொஞ்சோண்டாவது சுயமரியாதை இருந்தால் உமது வர்க்கம் என்ன அதன் எதிர்காலம் என்ன என்று படித்து தெளிந்து கொள்ளவும்.

நன்றி,
அசுரன்

said...

$சல்வன் என்பவர்,

இந்த தேவர் கட்டுரையை அரைகுறையாக விமர்சித்து நைச்சியாக அவதூறு கிளப்பும் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

அவர் எமது கட்டுரை எந்த அம்சத்தில் தேவரை அணுகுகிறது என்பதைப் பற்றி இரண்டே பாயிண்டுகளில் சுருக்கிப் போட்டுவிட்டார்.

ஏதோ அந்த பாயிண்டுகள் கட்டுரையின் ஆணி வேர் என்பது போல். உண்மையில் அந்த சம்பவங்களையொட்டி தேவரினுடைய நடவடிக்கைகள், அவர் பேசிய விசயங்கள், மற்ற தலைவர்களின் கருத்துக்கள் இவற்றின் ஊடாக அவரைப் பற்றிய ஒரு உண்மைச் சித்திரத்தை உருவாக்கும் விதமாகத்தான் கட்டுரை உள்ளது.


இதில் தனது பின்னூட்டங்களில் தேவரை விமர்சிப்பதில் தப்பில்லை என்று ஒரு வரி இடுகிறார்.
//அவரை தாராளமாக விமர்சியுங்கள்.அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல.கடவுளையே விமர்சித்து டாவின்சி கோட் எடுக்கும்போது தேவரை விமர்சிப்பதில் தப்பில்லை.//
//கட்டுரை என்னவோ நன்றாகத்தான் இருந்தது.ஆனால் தலைப்பு தான் முதலிலேயே எரிச்சலை ஊட்டியது.//

உண்மையில் மேற்சொன்னவைதான் அவரது வருத்தம் மெனில்(அவர் அப்படித்தான் சொல்கிறார்) அத்துடன் கட்டுரையை நிறுத்தியிருக்கலாம். அதை விடுத்து next என்று போட்டு எமது கட்டுரையின் மையாமான் விசய்ம என்று திரித்து இரண்டு விசயங்களை இட்டு அதை மறுதலிப்பதன் மூலம் தேவருக்கும் ஒளிவட்டம் கட்டி அவர் மீதான விமர்சனம் தவறு என்ற அவரது முந்தைய, பிந்தைய கருத்துக்களுக்கு முரன்பட்ட நிலையெடுக்கிறார். இதை உண்மையிலேயே தர்க்க ரீதியாக எமது கட்டுரையை விமர்சித்து செய்திருந்தால் சரி என்று சொல்லலாம். ஆனால் அப்படி செய்யாமல் அவர்து கட்டுரையின் முதல் பேராக்களில் ஒரு அங்கலாய்ப்பு, போலி வருத்தம் இவற்றின் உதவியுடன் எம்மேல் முத்திரை குத்தி வாசகரையும் அந்த உணர்வு தளத்துக்கு வர வைத்த பின்பு, எம்மைப் பற்றி ஒரு தவறான அபிப்ராயம் உருவாக்கிய பின்பு, வாசகர்களின் அந்த உணர்வுதளத்தின் மீது மிக சுலபமாக தனது கட்டுரையின் இரண்டாவது பகுதியில் சவாரி செய்கிறார், அதாவது எந்த ஒரு ஆதாரமும் வைக்காமல் அவ்வளுவு பெரிய கட்டுரையை just இரண்டு பேராக்களில் தவறு என்று கூறி விடுகிறார்.

அதாவது அவரது உண்மையான, பிரதான நோக்கம் அவதூறு கிளப்பி எம்மை பற்றி ஒரு கெட்ட அபிப்ராயத்தை கிள்ப்புவதுதான் என்பது அவரது கட்டுரையின் கடைசி வரிகளிலும் தெரிகிறது.
('எரிச்சல் அடைந்து விட்டேன்', etc.
இந்த வரிகளை கூறுவதன் மூலமாக ஏதோ எமது கட்டுரை படுமோசமாக பித்தலாட்டமாக இருப்பது போல்வும் இவர் அதை விமர்சனம் செய்ய சலிப்புற்று விலகுவது போல்வும். வாசகர்களிடம் தனது கருத்தை நூதனாமாக செலுத்துவதில் $சல்வன் உண்மையில் மிக திறமைசாலிதான்.)


மற்றபடி, '9' விசயத்தை பற்றி ஏற்கனவே நான் ஒரு விளக்கப் பின்னூட்டம் வேறு இட்டிருந்தேன்.

அந்த பின்னூட்டத்தைப் பற்றி தனது கட்டுரையில் ஒன்றுமே சொல்லவில்லை. உண்மையில் '9' விசயத்தை உள்ளே கொண்டு வந்ததே கட்டுரையின் விவாதத்தை திசை திருப்புவதுதான்(இதை கற்பக விநாயகமும் என்னிடம் தனி ம்டலில் குறிப்பிட்டிருந்தார்). அதானால் இந்த விசயத்தை இனி விவாதிக்க நாங்கள் தாயாராயில்லை. வாசகர்களின் சொந்த புரிதலின் மீது நம்பிக்கை வைக்கிறோம்.

மேலும்,
இவரது($சல்வன்) இந்த முரன்பட்ட அணுகுமுறை எனக்கு புதிது அல்ல. இதுபற்றி நேரடியாக அவரது தளத்திலேயே விமர்சித்து அதற்க்கு மூலகாரணமாக இருக்கும் விசய்ங்களையும் சொல்லி, அதற்க்காக அவரிடம் "தனிமனித தாக்குதல் செய்யாதீர்கள்" என்று கண்டனத்துக் குள்ளானேன். அந்த Flashback:


முதலில் முரன்பாடு:

இவர் வெளியிட்ட 'கம்யுனிஸ்டுகளே திருந்துங்கள்' என்ற கட்டுரை உண்மையில் புதிய ஜனநாயகம் என்ற நக்சல்பாரி பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை. அது நாடாளுமன்ற போலி ஜன நாயக செக்கு மாட்டுப் பதையில் மக்களுக்கு எந்த பதிலும் சொல்லவேண்டிய அவசியமின்றி வோட்டு தேவைப்படும் நேரத்தில் மட்டும் ஏதாவது மாய்மாலம் செய்து பொறுக்கிக் கொள்ளும் பண்பாட்டு தாக்குதலுக்கு ஆளாகி CPM கட்சி தனது கொஞ்ச நஞ்ச கம்யுனிஸ்டு அடையாளத்தையும் இழந்து நிற்பதை அம்பலப்படுத்தியிருக்கும் அந்த கட்டுரைக்கு இவர் வைத்த தலைப்பு 'கம்யுனிஸ்டுகளே திருந்துங்கள்'. இந்த தலைப்பு எல்லா கம்யுனிஸ்டுகள் மீதும் அவதூறு கிளப்பும் விதமாக் உள்ளது என்று குறிப்பிட்டு அதை மாற்றக் கோரி நானும் தோழர் இ.ரா.சுகுமாரனும் விளக்கிய பிற்ப்பாடும் அவர் அந்த தலைப்பை குறீப்பிட்ட கட்சியை விமர்சனம் செய்யுமாறு மாற்றமால் ஒட்டுமொத்த கம்யுனிஸ்டுகள் மீதும் அவதூறு கிளப்பவும் வசதியாக உள்ளது, தனக்கு அறிவு ஜீவி ஒளிவட்டம் கிடைக்கவும் ஏதுவாக உள்ளதாக எண்ணினாரோ என்னவோ விதண்டவாதம் செய்ய ஆரம்பித்தார். அந்த சிறிய விவாதத்தின் முடிவில் பிரசுரித்த கட்ருரையில் எதை விமர்சன்ம் செய்திருந்த்ததோ அதையே மக்கள் அங்கீகாரம் என்று கூறி முரன்பட்ட நிலையெடுத்தார். அந்த மட்டோ டு நான் நிறுத்திக் கொண்டு எதிர்காலத்தில் தெவைப்படும் பொழுது இந்த முரன்பாட்டை வைத்து அம்பலப்படுத்துவோம் என்று வந்துவிட்டேன்.

அதாவது போலி ஜன்நாயக நாடாளூமன்ற செக்குமாட்டு பாதையில் மக்களை அரசியல் படுத்தாமல் வோட்டுக்கு ஏமாற்றீத்தான் ஆட்சிக்கு வருகிறார்கள் எல்லாக் கட்சிகளும், அதே பாரம்பரியத்தை பின்பற்றி சாதி வோட்டு போன்ற நிலபிரபுத்துவ, பிற்போக்கு சக்திகளின் துணையோடுதான் CPM, CPI யையும் அரசியல் செய்கிறார்கள் இதைத்தான் அந்தக் கட்டுரை விம்ர்சிக்கிறது. இதை ஏற்றுக் கொண்டுதான் $சல்வனும் அந்தக் கட்டுரையை பிரசுரிக்கிறார். ஆனால் விவாதத்தின் முடிவில், தான் விமர்சனம் செய்த விசயத்தைத்தான் மக்கள் அங்கீகாரம் என்று சொல்லி தான் பிரசுரித்த கட்டுரையின் கருத்துக்கே முரன்படுகிறார்.



இந்த முரன்பாட்ட நிலைக்கு அவர வந்தடைய காரணாமாக நான ஊகித்தது:

இதற்க்கு காரணம் என்ன என்று நான் அவரது பின்னூட்டதிலேயே சொன்னதன், தொகுப்பான வடிவம்:
////
தலைப்பில் மொள்ளமாறித்தனம் செய்து ஒட்டு மொத்தமாக கம்யுனிஸ்டுகள் மீது அவதூறு கிளப்பவும், தனக்கு ஒளிவட்டம் கிடைக்கவும் செய்த தந்திரத்தை திருத்திக் கொள்ள ஈகோ இடம் கொடுக்காமல் கடைசியில் தனது

இந்த மொள்ளமாறித்தனம் என்ற பின்புலமும் அதன் மூலம் கிடைக்க விரும்பிய ஒளிவட்டம் என்ற முன்புலமும் முரன்பட்டு, அதில் compromise செய்து கொண்டு தப்பிக்காமல் $சல்வன் செய்த தவறினால் வந்த நிலையை இரண்டு விதமாக பார்க்கலாம்.
1) மறை கழண்ட கேசு. (or)
2) காரியக் கிறுக்கர்கள்..(காரியம் ஆக வேண்டும் என்பதற்க்காக கிறுக்கு போல் நடிப்பவர்கள்). என்ற நிலை.

இதில் $சல்வன் இரண்டாவது கேட்டகிரியாக இருக்கலாம் என்றூ நான் யுகித்தேன்.
////

மேற்சொன்னவையெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை அவரைப் பற்றி நான் அறிந்த வழிகளில், நான் வந்து செர்ந்த முடிவு அவ்வள்வுதான்.

ஆனால் இந்த புரிதலை எனக்கு ஊர்ஜிதப்படுத்தும் விதமாக அவரது சமீபத்திய கட்டுரைகள் வருகின்றன.

தேவர் பற்றிய கட்டுரையில் மீண்டும் அந்த மேற்சொன்ன முரன்பாடு வெளிவருகிறது.

கோக் பற்றிய கட்டுரை(எந்த அடிப்படையில் அதை எதிர்க்கிறோம் என்றே படிக்காமல், தலைப்பை மட்டும் ப்டித்து எழுதிய கட்டுரை).


இது அவரைப் பற்றிய எனது கருத்து, இதை பப்ளிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது எனில், ஏற்கனவே கம்யுனிஸ்டுகள் பற்றிய கட்டுரையில் திரித்து அவதூறு கிளப்ப முயற்சி செய்திருந்தார். இப்பொழுது நேரடியாக எனது தளத்தில் இடப்படும் கட்டுரைகள் பற்றீ ஒரு கெட்ட நோக்கம் கற்பிக்கும் முயற்சியில் அதே அவரது இயல்பான அரைகுறைப் புரிதல், முரன்பாடுகளுடன் செய்லபடும் போது, அவரைப் பற்றி முழுமையாக் எமது மதிப்பீட்டை வைத்து அதனூடாக இவர் எழுதிய கட்டுரையின் தரத்தை அம்பலப்படுத்துவது அவசியமாகிறது(எதிர்காலத்தில் ஒவ்வொரு முறையும் இவர் இப்படி எழுதி குட்டைப் புழுதி கிளப்பிக் கொண்டிருக்கும் பொழுது எனது விளக்கம் தேவைப்பாடாது - சிம்பிளாக இந்த கட்டுரையின் சுட்டி கொடுத்தால் போதும் - one off - முடித்து விட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்).

உண்மையான விமர்சன கண்ணோட்டத்துடனும் நேர்மையான நோக்கத்துடனும் இவர் எமது கட்டுரைகளை அணுகியிருந்தாலோ அல்லது தனது கட்டுரைகளில் நேர்மையாக ஆய்வு செய்து எமது கட்டுரையில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தி விமர்சனம் செய்யும் வழக்கம் கொண்டவராயிருந்தாலோ விசயம் வேறாக இருந்திருக்கும்(எடுத்துக்காட்டு: குழலியைப் பற்றி தவறாக நான் கருத்து வைத்து , அவர் விளக்கிய பிற்ப்பாடு தவறுக்கு வருத்தம் என்று குறீப்பிட்டு எனது கட்டுரையை மாற்றியமைத்தது).

அதற்க்கு $சல்வணீன் இயங்கியல் இடங்கொடுக்காது என்பது எனது கணீப்பு. இது எனது கணீப்புதான். இதுதான் உண்மை என்று நான் வாதடப்போவதில்லை(அவர் இப்படித்தான் வாதம் செய்வார். அதனால்தான் அவரது பாணியிலேயே நானும் முடிக்கிறேன்)


நன்றி,
அசுரன்.

said...

'இந்துத்துவத்துக்கு விளக்கு பிடித்த திருமகன்' என்பதுதான் பிரச்சனையா?

அந்த வார்த்தைகளை மிகச் சரியாகவே உபயோகப்படுத்தியுள்ளேன்(அதை சேர்த்தது நான் தான், கற்பக வி நாயகம் இல்லை). தேவரை மிகப் பெரிய கடவுளாக்கி சாதி வெறியுடன் அழைபவர்களுக்கு அவர் இந்துத்துவத்துக்கு விளக்கு பிடித்த கேவலமானவர்தான் என்பதை உணர்த்தத்தான் அந்த வார்த்தை.(சமீப்த்திய கண்டதேவி தேர் திருவிழாவிலும் அவர் பெயரை சொல்லி சாதி வெறி கோசங்கள் எழுப்பப்பட்டன. அங்கு தலித்துகள் வீட்டுச் சிறை வைக்க்ப்பட்டனர். அநாகரிகமான விசயங்கள் நடக்கும் பொழுதெல்லாம $சல்வன் கிளர்ந்தெழுவதில்லையே? ஏன்)

தாழ்த்தப்பட்ட மக்களை தேவரின் படத்துக்கு முன் விழுந்து மரியாதை செய் என்று இன்றும் சாதி வெறியுடன் திரியும் சில பன்றிகளின் மன்சாட்சியை குத்திக் கிழிக்கத்தான் அந்த வார்த்தை.

அன்பரே($சல்வன்) அந்த வார்த்தையை கேட்டால் சாதி வெறியர்களுக்குத்தான் கோபம் வரவேண்டும், தங்க்ளுக்கு ஏன் வருகிறது.

ஏற்கனவே விடாது கறுப்பு விசயத்தில் எடுத்த நிலைப்படுதான் இப்பொழுதும் சாதி சார்பான விசயங்களை ஆகக் கேவலமாக விமர்சிப்பதுதான் எனது பழக்கம்.

உங்களது டீசன்சிக்கு அது ஒத்து வரவில்லையெனில் நான் ஒன்றும் செய்ய முடியாது.

இதற்க்கே என்றால் இன்னும் எதிர்காலத்தில் இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடிக்கும் தத்துவங்களை பற்றீயெல்லாம் எழுத உள்ளேன், தாயாராகிக் கொள்ளுங்கள்.

நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன. ஒட்டு மொத்த நாடே கொள்ளை பொவதைப் பற்றியேல்லாம் எழுதியுள்ளேன். அதைப் பற்றியெல்லாம் கள்ள மௌனம் சாதித்த $சல்வன் இந்த விசயத்தை பெரிதாக கிளப்புவதில் உறுதியாக உள் நோக்கம் உள்ளது.

அப்புறம் தங்களது ஒட்டு மொத்த கட்டுரையும் அதை ஒன்றை(இந்துத்துவத்துக்கு விளக்கு பிடித்தல்) மட்டுமா பேசுகிறது?


அசுரன்

said...

வரலாற்றை தெரிந்து கொள்வதில் தவறில்லை.இன்று தமிழர்கள்
சாதி சண்டை போடுவதன் மூலம் முன்னேறவே முடியாது. இது
சண்டைகளை தூண்டிவிடுபவர்களுக்கு வசதியாகவே இருக்கும்.
ஓட்டுக்காக தேவர் ஜெயந்திக்கு ஆஜராகும் ஜெயலலிதாவால் திருமாவுடன்
ஒரே மேடையில் தோன்ற முடியவில்லை.பழைய குப்பைகளை
மூடிவிட்டு தேவர்களும் தலித்துகளும் இணைவதற்கு வழிதேட வேண்டும்.
இந்த விதத்தில் பாமகவை முன்னோடியாக கருதலாம்.

said...

இந்த ப்ளாக் சமாச்சாரம் எழுதுற பயலுக எல்லாம் மெத்த படிச்சவங்கன்னு நெனச்சுட்டு இருந்தேன். பாதி பயபுள்ளைக சாதிய வச்சித்தேன் பொளைக்கி போல.இத்தன நாளும் பாப்பான் பாப்பானு சொல்லிட்டு இருந்தாங்க.இப்போ தேவர் மாட்டிக் கிட்டாராக்கும்.பாக்கப்போனா எல்லா தலைவர் பத்தியும் அடுத்த சாதிப் பயலுக இப்படித்தேன் பேசுவாங்ய போல.

said...

பூனைக் குட்டி வெளியே வந்தது,


இந்த கீழ்கண்ட வசனங்களை பேசுபவரை என்னவென்று சொல்லுவீர்கள்.....


தேவர் சாதி அபிமானி என்றுதானே சொல்வீர்கள்?

சந்தேகத்தை அதிகரிக்கச் செய்யும் அவரது வசனங்கள்:

//
தேவர் புகழை யாரும் மறைக்க முடியாது.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்கவா முடியும்?நாம் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டது என்றால் தப்பு உலகின் மீது இல்லை.நம் மீது தான்.//


//என்னார் ஐயா,

நீங்கள் சொன்ன மாதிரி அவர் போன்ற தியாகிகள் வாங்கித்தந்த சுதந்திரம் இது.சுதந்திரத்தை நல்லபடியாகவும் பயன்படுத்தலாம்,வேறெப்படியும் பயன்படுத்தலாம்.அது நம்ம கையில் தான் இருக்கு.

அவரை தெய்வமா மதிக்கலை என்றாலும் ஒரு மனுஷனா மதிச்சா பரவாயில்லை.செத்து 40 வருஷம் ஆயும் இன்னும் அவர் பேரை சொல்றோம்.நாம செத்து 1 வருஷம் கழிச்சு நம்ம பேரை யாராவது சொல்லுபடியான செயலை நம்மால் செய்ய முடியுமா என யோசிக்கணும்.

வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார்?

அதை யோசிக்கணும்.//


ஆக, ஏற்கனவே சொன்னது போல் விளக்கு பிடித்த விசயமோ அல்லது அனானிகள் செய்த தனிப்பட்ட தாக்குதலோ $சல்வனின் பிரச்சனை அல்ல.

தேவரின் புகழுக்கு களங்கம்தான் அவரது பிரச்சனை. இதைத்தான் அவரது கட்டுரையின் இரண்டாவது பகுதி உறுதி செய்கிறது.

தேவரை விமர்சனம் செய்ததுதான் அவரது பிரச்சனை. அப்படி விமர்சனத்தில் மாற்றுக் கருத்து இருந்தால் எமது கட்டுரையின் ஓட்டைகளுரடன் அம்பலபடுத்தலாமே?

மாறாக கட்டுரையின் மையமாக இல்லாத ஓரு சம்பவம் என்ற அளவில் உள்ள இரு விசயங்களை வைத்து மட்டுமே மொத்த கட்டுரையும் அவதூறு என்பது போல எழுதியது நேர்மையற்ற செயல்


வாசகர்களே இப்பொழுது சொல்லுங்கள். தனது கருத்துக்கு தானே எதிராக முரன்பட்டு நடந்து கொண்டு, நேர்மையின்றி விமர்சனம் செய்வது யார்?

ஒரு சாதி அபிமானியின் வருத்தம் போல உள்ளதே $சல்வனின் வருத்தம்.....


நன்றி,
அசுரன்

said...

இந்தப் பதிவின் ஆரமப்த்திலேயே சொன்னார் யாத்ரீகன் என்பவர்:

//இந்த பதிவை எத்தனைபேர் நேர்மையாய் எதிர்கொண்டு.. அலசுகிறார்கள்.. என்று கவனிக்கவேண்டியுள்ளது.. //

said...

இந்த வலைப்பூவில் உள்ள மற்ற கட்டுரைகளை படித்தீர்களா அவசரக் குடுக்கை அனானி அவர்களே?

//இந்த ப்ளாக் சமாச்சாரம் எழுதுற பயலுக எல்லாம் மெத்த படிச்சவங்கன்னு நெனச்சுட்டு இருந்தேன். //

இந்த ஒரு கருத்தே நீங்கள் அவசரக் குடுக்கை என்பதை உறுதி செய்யும். இந்த பிளாக்கில் எழுதுவதில் ஒரு சிலரை தவிர்த்து எல்லாரும் அரைகுறைதான்.



//சாதிய வச்சித்தேன் பொளைக்கி போல//

இல்லை அன்பரே.... இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளை படித்து விட்டு தங்களது கருத்து சரியா என்று சொல்லவும்.

அல்லது

சாதி வேறியை அபிமானத்தை/மோகத்தை விமர்சனம் செய்யாமல் இந்திய பிற்போக்கு சக்திகளிடமிருந்து சமூக நீதியை நிலை நாட்டிட ஏதேனும் குறுக்கு வழி வைத்திருக்கிறீர்களா அவசரக் குடுக்கை அனானி அவர்களே?


எப்படி $சல்வன் மேல்சாதி பண்பாட்டு, பொருளாதார தாக்குதலுக்கு எதிரான தாழ்த்தப்பட சாதியினரின் குமுறலையும் மேல் சாதி வேறி/மோகத்தையும் ஒன்றாக பார்க்கிறாரோ அதே போல்தான் இந்த அவசரக் குடுக்கை அனானியும் பார்க்கிறார்.


$சல்வன் சொன்னவை:
//ஜாதி அடக்குமுறையை எதிர்க்கிறேன் என சொல்லிக்கொண்டு "மேல் சாதி பயலே" என அவனை திட்டினால் அவன் திருப்பி ஜாதி பேரை சொல்லத்தானே செய்வான்?இதில் தப்பு இருபுறமும் தானே இருக்கிறது?"நான் திட்டுவேன்,ஆனால் அவன் திட்டக்கூடாது" என்றால் நாம் கேட்போம்.அவன் கேட்பானா?//

//காமராஜர் சொன்ன மாதிரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் சொல்ல வேண்டும்.//

அடக்குமுறையை விமர்சனம் செய்யாமல் எப்படி ஐயா அதை எதிர்ப்பது?

சாதி இல்லையெனில் சாதியை/அதன் தலைவரை திட்டும் பொழுது ஏனையா கோபம் வருகிறது?


நன்றி,
அசுரன்

said...

செல்வன்,
இம்மானுவேல் கொல்லப்பட்டதில் தேவரின் பங்கு என்பது உங்களது நம்பிக்கையைப் பொறுத்து 'உண்டு' (அ) 'இல்லை' என அமைவதில்லை என்பதையும், 1957ல் இச்சதி வழக்கில் தேவருக்கு எதிராக அரசுத்தரப்பில் வாதிட எந்த வக்கீலும் முன்வரமுடியாத அளவிற்கு கொலைமிரட்டல்கள் வக்கீல்களுக்கு வந்தன என்பதினையும் நினைவில் கொள்ளுங்கள்..

துணிந்து வழக்காட வந்த எத்திராஜ் (எத்திராஜ் கல்லூரியை நிறுவியவர்) பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாகினார். வழக்கு நடந்த புதுக்கோட்டை நீதிமன்றத்துக்கு எத்திராஜ், சென்னையில் இருந்து சென்று வரும்போதெல்லாம், ஆயுதப்போலீசார் அவருக்கு துணையாகச் செல்லவேண்டி இருந்தது.

தேவருக்கு தூக்குக் கயிறை செய்யும் பெருமாள் பீட்டரின் சாட்சியத்தைக் குறுக்கு விசாரணை செய்யும் சூழலில், பல்வேறு இடைஞ்சல்களால், எத்திராஜ் மவுனமாகி நின்றதும், ஜட்ஜ் கேட்டபோது, 'பீட்டரின் சாட்சியம் மட்டுமே தேவரின் இன்வால்வ்மெண்டை உறுதிசெய்யாது' என சேம்சைடு கோல் போட்டுத்தான் தேவரய்யா கொலைச்சதியில் இருந்து தப்பினார். இவ்வழக்கில் ஏ.1 குற்றவாளியான தேவர் தப்பினாலும், ஏ3லிருந்து மற்ற குற்றவாளிகள் பலருக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு எண்ணற்ற ஆதாரங்களைச் சொல்லிவந்தாலும், ஒன்றைக்கூட மறுக்கத்திராணியின்றி, எவரோ சொன்ன '9' எனும் வார்த்தையை வைத்துக்கொண்டு வம்பளக்கும் செல்வனுக்கு இரண்டு வழிகள் உள்ளன.

1) விஜயகாந்தின் கட்சி
2) பொன்.பரமகுருவின் தேவர் பேரவை..
3) சசிகலா ரசிகர் மன்றம்

நேயர்கள் சாய்ஸ் ஐ எஸ் எம் எஸ் அனுப்பவேண்டிய முகவரி பின்னர் அறிவிக்கப்படும்.

கற்பகவிநாயகம்

said...

அசுரன்,

இந்த பதிவை பார்க்கவும்...

http://muthuvintamil.blogspot.com/2006/06/blog-post_24.html

நண்பர் செல்வனைப்பற்றி நீங்கள் மயிர்பிளக்கும் வாதங்களை வைத்து அலசியுள்ளதை இன்றுதான் பார்த்தேன்.

செல்வன் சில விஷயங்களை உள்சென்று கவனிக்க தவறுபவர். அதை நான் ஏற்கனவே சில நேரங்களில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

பலரை திருப்திப்படுத்த எத்தனித்து எழுதும்போது போது இதுபோன்று நேர்ந்துவிடுகிறது என்பது என் புரிதல்.என் அவதானிப்பு தவறாகவும் இருக்கலாம்.

குறிப்பிட்ட சாதியினர் மட்டும் திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக வலைப் பதிவுகளில் எழுப்பப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.ஆனால் அது உண்மையல்ல என்பது இப்போது பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் சமாச்சாரத்தில் உறுதியாகிறது.

மீடியாவினால் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களை கொண்டு பல பேர் வாழ்ந்து வருவதும் அந்த பிம்பங்கள் நொறுக்கப்படும்போது வருத்தப் படுவதும் தான் நிகழ்கிறது.

விளக்கங்களுக்கு நன்றி.

said...

Dear Muthu,

Thanks for the link.

And Thanks for the good insight you show.


Thanks and Regards,
Asuran

said...

காமராசர் பெருமை அறியாத நாடார்கள் அவரை விருதுநகரிலே தோற்கடித்துவிட்டு இன்று எங்க சாதிக்காரர் என்று கூறிக்கொள்வதில் வேதனையாக இருக்கிறது. நானறிந்தவரையில் என்னுடைய கல்விக்கு காரணம் காமராசர் அவர்கள்தான். தேவரை பொறுத்த வரையில் அவர் ஒரு DON. இதற்கான தமிழ் வார்த்தை எனக்குத் தெரியவில்லை. இன்றும் பலத்தை மட்டும் இச்சனநாயகத்தில் அவர் பேசியது அம்மனிதர்க்கு இயல்பு. பலத்தை மட்டும் நம்பியிருந்த ஒரு கூட்டம் இன்றும் அதே வண்டியிலேய ஓடுகிறது. இதை சாதீய கோணத்தில் சிந்தித்தால் நாம் அனைவரும் சாதிக்கு அப்பாற்பட்ட சமுதாயத்தை உருவாக்க இயலாது. விரைவில் என் பதிவுகள் தொடங்கும். சாதி பற்றி பேசாத சாதியை சரலுகையாக கருதாத நண்பர்களுக்காக தொடங்குவேன்.

ஒரு புதிய அறிமுகம்.
தமிழினியன்

said...

என்னார் திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரு கள்ளர். மேலும் அதிமுக அனுதாபி. அதான் முத்துராமலிங்க தேவரை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார். ஜாதிவெறி பாப்பான்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல!!!

said...

//சாதி பற்றி பேசாத சாதியை சரலுகையாக கருதாத நண்பர்களுக்காக தொடங்குவேன். //

குயப்பமாக்கீதே...

said...

~ஆப்பு~,

என்னாரின் சாதிப் பின்ணணியும் அவரது அவேசத்துக்கு அடிப்படையன விசயமும் ஏற்கனவே தெரியும் என்பதால் எமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால், என்னாரை ஐயா என்று கூப்பிட்டு முத்துராமலிங்கரின் பெருமை பேசிய டாலர் செல்வனின்($சல்வனின்) செயல் சந்தேகத்தை வரவழைக்கிறது.

இதைத்தான் இந்த கட்டுரையின் எனது மற்றும் கற்பக விநாயகத்தின் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தியிருப்போம்.

நன்றி,
அசுரன்.

said...

Mannikkanum! Naan use panradhu oru public computer, idhula eKalappai illai adhanala ippadi adikkaren. Mannikkanum.

Indha blog post pala idangalla kalavarm undu pannittu irukku. Naan oru nadar than. Aanalum ivvalavu oru kadumaiyana saadal irandhu pona oru manidhar mela kaanbithirukka thevai illai enbadhu enadhu thaazhmaiyana karuthu.

Irundhalum, ennudaiya oru karuthu. Thevar endra thani manidhan SC/ST matrum Dalit makkalukkuthan niraiya seidhirukkirar endru oru vayadhana oru periyavar kooriyirukkirar. Idhil gavanikkapada vendiya vishayam ennavendral, sonna and periyavar oru thevar.

Jawaharlal Nehru, MS Subbulakshmiyai "vaith"irundhadhaga kooda oru kadhai undu. Nammil ethanai per adhai nambugirom? Yen, Mahatma Gandhikkum Mrs.Mount Battenukkum kooda thodarbu irundhadhu endru koorugirargal. Idhil ulla unmaigal aarayappada vendiyavai. Unmaiyai iruppin, adhai kazhithu katta vendumae thavira adhai vaithu oru pirachinai uruvavadhu enakku aarokkiyamana oru vishayamaga thondravillai.

Sila varigalai thavirthirukkalam enbadhu enadhu thazhmaiyana karuthu. Indha vishayathil kathinalo, aarpattam seidhalo, vilaivugal vibareedham aagalam. Neeru Pootha Neruppaga irukkum oru Vishayathai oodhi vitta paavathai Sumakka Vendam.

Nanbargalai Iruppom!

Jadhi Nam Manadhil Irukkatum! Vendam Endru Kooravillai! Adhai Ezhuthilum Inaiyathilum Kaanbikka Vendam Endru Mattumae Vendukiraen.

Naan Kooriyadhu Yevaraenaiyum kayappaduthi irundhal.....Mannikkavum.

said...

நாராயணன் அய்யா சொல்றாக 'தேவர் மகன் தான் அள்ளி அள்ளிக் கொடுத்தாகளாமே தலித்களுக்கு'ன்னு..
கொடுத்தது வாஸ்தவம்தான். ஜமீன் என்கிற சிஸ்டத்திலே இதல்லாம் சகஜம்தான்யா.. எதுக்கு கொடுத்தாக.?
அடியாளா விசுவாசமா இருக்கிற ஒரு கூட்டத்தக் கூட்டத்தானே அதெல்லாம்.. 'நீ ஏண்டா அந்த ஆளுக்கு அடிமை வேலை செய்யணும்? தன் மானத்தோட வாழப்பழகு'ன்னு மிலிட்டிரிக்காரரு இம்மானுவேல் சொன்னபிறகு தேவரின் கூட்டம் குறைஞ்சு போனதும்... அதினாலே தேவருக்கு கோபம் வந்ததும்தான் எல்லாருக்கும் தெரியுமே!!!

ஜமீன்/மிட்டா/மிராசு இதெல்லாம் எவனும் சொந்தமா ஒழச்சுச் சம்பாதிச்ச சொத்து கிடையாது. பரம்பரையா வந்த வரி வசூலிக்கும் உரிமைதான் அது. வெள்ளைக்காரனாப் பார்த்து 'ஏ வெள்ளச்சாமி ஒனக்கு 40 ஊரு.. வரிய ஒழுங்கா வசூல் பண்ணிக்கொண்டா.. அதில ஒனக்கு இத்தன பங்கு' ன்னு வலுத்தவன் கையில கிடைச்ச பங்குதானே.. இதில இருப்பது எல்லாமே 100க்கு 100 ஒட்ட சுரண்டற அநியாயந்தான். அப்படிச் சுரண்டினதுல பிச்சபோடுற மாதிரி எலும்புத்துண்டு போட்டு அடியாள் படை சேர்த்த தேவருக்கு காலம்காலமாய் விசுவாசம் காட்டணும் என்கிறதே நாகரீக மனுசங்களால ஏத்துக்க முடியுமா? தன் மானம் உள்ள எவனும் ஏத்துக்க மாட்டான்? இல்லய்யா?

தலித் மகன்.

said...

//நாராயணா

சில உண்மைகள் சொல்லப்படாவிட்டால் பொய்கள் உண்மைகளாகிவிடும். எதிர்கால இளைய தலைமுறை இவர்களை எல்லாம் தேசத்தலைவர்களாகவும் தியாகிகளாகவும் கற்பிதம் செய்ய நேர்ந்து விடும். //

கீரனை வழிமொழிகிறேன்.

நன்றி,
அசுரன்.

said...

நேதாஜியை எப்போது தேவர், அவர் வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்திருந்தார் என்பதனை செல்வன் விளக்க முடியுமா? நான் அறிந்தவரையில் நேதாஜி பசும்பொன் கிராமத்திற்கு வந்ததாய் எந்தப் பதிவும் இல்லை. உடனே தேவரின் திருநகர் வீட்டிற்கு வந்தார் என்றெல்லாம் சொல்லிட முனையாதீர். தேவர், மதுரைக்குக் குடிபெயர்ந்ததே, உலகப்போர் ஆரம்பித்த பின்னரே. அப்போதைய காலகட்டத்தில் நேதாஜி, இந்தியாவை விட்டே தலைமறைவாகி விட்டிருந்தார்.
நேதாஜிக்கும் பட்டாபி சீத்தாராமயாவுக்கும் இடையில் நடந்த தேர்தலில் நேதஜிக்கு ஆதரவாக காங்கிரஸ் ஓட்டை வாங்கிட தேவர் பல உருட்டல்,மிரட்டல் வேலைகளில் இறங்கி நிறைய ஓட்டுகளை தமிழ்நாட்டில் இருந்து வாங்கிக்கொடுத்தது உண்மையாயினும், பசும்பொன்னில் வந்து தங்கி இருந்து நேதாஜி கம்பங்கஞ்சி குடிக்கும் அளவிற்கு கற்பனையை வளர்க்க செல்வன் முயலவேண்டாம்.

அடுத்ததாக செல்வன் சொல்கிறார்;- ஒத்துழையாமை இயக்கத்தில் தேவர் கலந்துகொண்டார் என்று.. இது பொய்யான தகவல்.

ஒத்துழையாமை இயக்கம் நடந்தது 20களின் ஆரம்பத்திலே. அதுவும் 1922 சௌரி சௌரா காவல்நிலையம் மக்களால் கொளுத்தப்பட்டதும், காந்தி அந்த இயக்கத்தை நிறுத்தி விட்டார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் சிலர் (பெரியார் மாதிரி ஆட்கள்) ஒத்துழையாமையை வலியுறுத்தி வந்தபோதிலும், ஒத்துழையாமை எல்லாம் காலாவதியாகி, காங்கிரசின் சுயராஜ்ஜியக்கட்சி சட்டசபைக்கு போய் விட்டது. ஒத்துழையாமை உச்சத்தில் இருந்த 1922ல் தேவரின் வயது என்ன தெரியுமா? 14 அல்லது 15.

சீனிவாச அய்யங்கார் காங்கிரசுக்கட்சியின் தலைவராக இருந்து சென்னையில் ஒரு காங்கிரசு மாநாடு நடத்தியபோது வட இந்திய தலைவர்களுக்கு உபசரணை செய்ய தேவர் தனது 19ஆம் வயதில் முனைந்தார். பின்னர் 1934வாக்கில்தான் அவர் தீவிர காங்கிரசு உறுப்பினர் ஆகிறார். (வயது 26 என எண்ணுகிறேன்) 1937ல் சட்டசபைக்குள் நுழைகிறார்.

தேவரைப் புகழப்புகுந்து வரலாற்றைத் திரிக்கும் வேலையில் செல்வன் இறங்கி இருப்பது பரிதாபகரமாய் உள்ளது.

தேவரின் வாழ்நாளிலேயே அவர் செய்த பயனுள்ள செயல் சி.டி.ஆக்டை எடுக்கச்சொல்லி கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் போராடியதே. ஒரு சாதியினரையே ஒட்டுமொத்த குற்றப்பரம்பரையாக வெள்ளையன் வரையறுத்த அநீதியை அவர் அகற்றிட உறுதியாய் நின்ற ஒரு செயலை அனைவரும் பாராட்டவே செய்வர்.

கற்பகவிநாயகம்

said...

selvan!!

ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு தேவர் சிறைக்கு சென்றார் என்று நீர் சுட்டிய குறிப்பில் இல்லையே. 1930களில் ஒத்துழையாமை என்பது கேலிக்கூத்தாக காங்கிரசால் நடத்தப்பட்டு, அது காந்தி-இர்வின் எனும் துரோக ஒப்பந்தம் மூலம் நின்றுபோனதும், இந்த ஆசாமிகள் வட்டமேசை மாநாடு போனதும், பின்னர் கொஞ்சக்காலம் ஒத்துழையாமை சடங்கு செய்து அதுவும் போய் ஜில்லாபோர்டு எலெக்சனில் பதவிக்கு சண்டைபோட்டதும் நாறிப்போன விசயம். 1936ல் ஜில்லாபோர்டு எலெக்சனுக்கு தேவர் பிரச்சாரம் செய்தார்- அதுதான் அவரின் ஆரம்பம்-தீவிர அரசியல் வேலையில்-- ஒத்துழையாமையில் அவர் கைது செய்யப்பட்டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 1937ல் காங்கிரசு ஆட்சிக்கு வந்தபோது மகாலட்சுமி மில் ஸ்டிரைக்கில் தேவர், காங்கிரசு பிரதமர் ராஜாஜியாலேயே கைது செய்யப்பட்டார். அதுதான் முதல் கைதாக இருக்கும் என எண்ணுகிறேன். அல்லது, அதற்கு முன்பு, ஜட்ஜ் காலை வெட்டிய கேசிலோ, துணை தாசில்தாரைக் கொன்ற வழக்கிலோ அவர் ஜெயிலுக்குப் போயிருக்கலாம்.

கொலைக்கேசிலும், அடிபுடி கேசிலும் செயிலுக்குப்போன ஆசாமிக்கு ஒத்துழையாமை வேசம் போட மேலும் சான்றுகளோடு வாரும். பார்க்கலாம்.

கற்பகவிநாயகம்

said...

Thanks for the well reasearched articles de-mystifying the bygone era and leaders.

kannan

said...

Dear Annony Kannan,

Thanks for your comments.
Please Read my other articles and post your comments.

Thanks and Regards,
Asuran

said...

//Muthukumar. Kangeyam, working in Chennai. I will start my Blog soon and question all anti-hindu elements. Navithan/Nasuvan (This is my Jathi but I am proud to say. Also I am proud to say I am Hindu) Not like hiding my identity.//
நீங்கள் பெருமிதம் கொள்வது நல்லதுதான். நீங்கள் உங்கள் ஊரில் உங்கள் சாமியை வேண்ட அர்ச்சணை செய்யும் போது அர்ச்சகர் உங்கள் பெயரை அல்லது எந்த பெயருக்கு அர்ச்சளை என்பதைக் கேட்டுக் கொண்டு,
''ப்ராமண ப்ரியாய நமஹ!, போஜன ப்ரியாய நமஹ!
ஏஹ மாதா பஹூபிதா பரசூத்ராய ------- நமஹ!! கோடிட்ட இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட பெயரைச் சொல்லி
அர்ச்சனை செய்வார். இதன் அர்த்தம் தெரியுமா? தெரிந்தால் நீங்கள் மேலும் பெருமிதப்பட்டாலும் படலாம்.

said...

அசுரன், எப்போதும் போல உங்களுடைய நேர்த்தியான பதிவு..

கீரன்,
// சில உண்மைகள் சொல்லப்படாவிட்டால் பொய்கள் உண்மைகளாகிவிடும். எதிர்கால இளைய தலைமுறை இவர்களை எல்லாம் தேசத்தலைவர்களாகவும் தியாகிகளாகவும் கற்பிதம் செய்ய நேர்ந்து விடும் //

இந்த சிறப்பான பதிவில் உங்களுடைய அருமையான பின்னூட்டம் இது. அசுரனை தொடர்ந்து நானும் வழிமொழிகிறேன்.

தலித் மகன்,
// ஜமீன்/மிட்டா/மிராசு இதெல்லாம் எவனும் சொந்தமா ஒழச்சுச் சம்பாதிச்ச சொத்து கிடையாது. பரம்பரையா வந்த வரி வசூலிக்கும் உரிமைதான் அது //

உண்மை..

முரளி நடித்த இரணீயன் படத்தில் ஒரு வசனம் வரும்.

" வெள்ளைகாரனுக்கு காட்டி கொடுத்தற்கும் கூட்டி கொடுத்ததற்கும் அவன் போட்ட பிச்சை தான்டா இந்த ஜமீன் பட்டம்."

said...

கர்ப்பக வினாயகம் சார்,
அந்த அமைதிகூட்டம் எதற்காக நடத்தப்பட்டது தேவர் இனத்திற்கு தலித்துக்கும் சண்டையா? அல்லது என்ன காரணம் சொல்லுங்கள்

said...

1957 பொதுத்தேர்தலில் முத்துராமலிங்கத்தேவர், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டசபைத்தொகுதியிலும் போட்டி இட்டார். இரண்டிலும் அவர் வென்று, சட்டசபை பதவியை ராஜினாமா செய்துவிட்டார். முந்தைய தேர்தல்களை விட அம்முறை அவரின் வாக்கு வித்தியாசம் பெருமளவில் குறைந்திருந்தது. அதற்குக் காரணம், தலித் மக்கள் அம்முறை தேவருக்கு வாக்களிக்காமல், காங்கிரசுக்கு வாக்களித்திருந்தனர். இதனால் கோபம் கொண்ட தேவரின் ஆதரவாளர்கள், தலித் கிராமங்களில் கொலை,கற்பழிப்பு, தீயிடல், குடிதண்ணீர்க்கிணறுகளில் மலத்தைக் கொட்டுதல் ஆகிய ஆக்கப்பணிகளைச் செய்தனர். சில இடங்களில் திருப்பித்தாக்குதலும் நடந்தது. இக்கலவரத்தை நிறுத்திடவே கலெக்டரால் சமாதானக் கூட்டம் கூட்டப்பட்டது.

கற்பகவிநாயகம்

said...

என்னங்க முத்துராமலிங்கத்தேவரை பத்தி மட்டும் எழுதறீங்க.... மற்ற வெறியர்களையும் எழுதுங்க.. பாமக மருத்துவர், தொல்மா, கிருஷ்ணசாமி, சங்கராச்சாரியார்,... எல்லாரையும் எழுதுங்க...

ஒரு கிராமத்தில் இருந்தால் குறிப்பிட்ட வழித்தோன்றல்களாய் தம்மை பெருமை பேசுவது... ஒரு மாவட்டத்திற்குள் ஊர்ப் பெருமை பேசுவது.. ஒரு மாநிலத்திற்குள் நாங்கள் இந்த சாதியாக்கும் என்று பெருமை பேசுவது.. மாநிலம் தாண்டி வடநாடு போனால், நாமெல்லாம் தமிழன் என்று பேசுவது..
வேறு நாட்டுக்குப் போய் நாமெல்லாம் இந்தியர்கள் என்று பேசுவது... ஏன்..? அடிப்படையில் தம்மை ஒரு கூட்டத்தின் அங்கமாகப் பேசுகிறார்கள் என்றால், ஒரு பாதுகாப்புக்காகத் தான்.

என்ன, எல்லாரும் அவரவர் சாதிவட்டத்திற்குள் அடுத்த இனத்தைப் பற்றி ஏளனமாகப் பேசுவோர்தான்... யாரிங்கே விதிவிலக்கு... தேவர் போன்றோர் மேடை போட்டுப் பேசினால் அது அவரது __________ காட்டுகிறது. (தேவரை ஆதரிப்போர் அவர்களுக்குச் சாதகமான வார்த்தையை போடுங்கள், தேவரை வெறுப்போர் அவர்களுக்குச் சாதகமான வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள்.)

said...

திருவடியான்,

ராமதாஸும் ஒரு சாதி வெறியன்தான் ஆனால் தேவரைப் போல கடவுள் என்று கூறி ரவுடித்தனம் பொறுக்கித்தனம் செய்யும் ஜாதி வெறி கோஸ்டிகள் கிடையாது. அவர் ஒரு நக்கிப் பிழைக்கும் நாதாரி என்ற அளவில் அவர் மீதான விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்(அவரைப் பற்றியும் ஒரு கட்டுரை தயாராக உள்ளது சரியான சமயம் பார்த்து வெளிவிடப்படும்).

சங்கரன் என்ற பன்றியைப் பற்றி எனது நண்பர் விடாது கறுப்பிடம் கேட்டுப் பாருங்கள். சும்மா சுழட்டி சுழட்டி அடிப்பார்.

மற்றபடி திருமாவளவனையும், கிருஷ்ணசாமியையும் ஜாதி வெறியர்கள் லிஸ்டில் சேர்த்திருப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

தவறாக நினைக்கவில்லையெனில்.... ஒரு சாதி வெறியனால் மட்டும்தான் அவர்களையும்(திருமா, கிருஷ்ணசாமி) சாதி வெறியர்கள் லிஸ்டில் சேர்க்க முடியும்.

தங்களது நோக்கம் இந்த பதிவின் நோக்கத்தை சிதைப்பதாக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது. அப்படி ஒரு எண்ணம் இருந்தால மன்னிக்கவும் தங்களது பருப்பு இங்கே வேகாது....

நான் கம்யுனிஸ்டு.... சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் யாரை எந்த வர்க்கத்தை எப்படி தாக்கும் என்பதை கணித்துத்தான வெளியிடுவேன்.

திருமா, கிருஷ்ணசாமி பற்றி விமர்சனங்கள் உண்டு. அவர்கள் மக்களின் விடுதலைக்காக தேர்ந்தெடுத்த பாதையைப் பற்றி மிகக் கடுமையான மாற்றுக் கருத்துக்கள் உண்டு..

ஆனால் சாதி வெறியர்கள் என்று சொல்வது மிகவும் கேவலமானவர்களின் பார்வை.

வேண்டுமானால் இங்கே வலைப்பூவில் நக்கிப் பிழைக்கும் நாதாரி ராமதாசுக்கு பல்லக்கு, விளக்கு தூக்கும் சில இழி பிறவிகளை சாதி வெறியர்கள் என்று கூறுங்கள்.....


//ஒரு பாதுகாப்புக்காத் தான்//

சொத்துடமை சமூகம் இருக்கும்வரை இப்படி குடும்பம், சாதி, இனம், நாடு என்று அடையாளம் தேடும் தேவை இருக்கத்தான் செய்யும்.


********

கள்ளர் சாதி ஏழையான பாப்பாபட்டி, கீரிப்பட்டி வெறியர்களும் அவர்களை எதிர்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஒரே சாதி வெறியோடுதான் இருக்கிறார்களா?

ஒன்று அதிகார திமிர்.. அது அவர்களின் சொத்துக்களை பறித்து வாழ்க்கையின் உத்திரவாதமின்மையை ருசிக்க செய்தால் இறங்கிவிடும் சாதிக் கொழுப்பு.

மற்றொன்று அடக்குமுறைக்கு எதிரான ஆற்றமையின் வெளிப்பாடு. அது சரியான அமைப்பு வடிவில் வரவில்லை என்று வேண்டுமானல் தங்களது வாதத்தை வையுங்க்ள் ஆனால் இரண்டும் ஒன்று(தேவர் சாதி வெறியும், தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி ரீதியாக அணீ திரள்வதும்) என்று புழுதி வாரி போடாதீர்கள்.

நன்றி,
அசுரன்.

said...

//இப்போது இருக்கும் ரவுடி கும்பல்கள் போல அப்போது இருந்த ரவுடி கும்பல்களின் தலைவர் தான் இவர். இவரின் காலத்திற்கு பிறகுதான் அவரின் சமுதாய மக்கள் கூட வேல்கம்பு அரிவாள் போன்றவரற்றை மறந்து தங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து இன்று நாகரீகமான சூழலில் வாழ பழகினர். இவருடைய காலத்தில் அவர்கள் வெறும் முரட்டு முட்டாள்களாகவே இருந்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு காலத்தில் ராமநாதபுரம், கமுதி என்றால் அது அரசு பணியாளர்களுக்கு கூட தண்டனைப்பகுதியாகத்தான் இருந்தது. அப்பகுதிகளில் பேருந்து ஓட்டிச்செல்லக்கூட ஓட்டுனர்கள் பயந்து நடுங்கினர். அத்தகைய பயத்தை உருவாக்கக்கூடிய முரட்டு மூர்க்கத்த்னத்தை வளர்த்தவர் முத்துராமலிங்கம் தான் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.//

சிநேகிதன் செல்வனுக் கொடுத்த சரியான பதிலை நானும் வழிமொழிகிறேன்.

வாழ்த்துக்கள் சிநேகிதன்,

******
//தேவரைப் புகழப்புகுந்து வரலாற்றைத் திரிக்கும் வேலையில் செல்வன் இறங்கி இருப்பது பரிதாபகரமாய் உள்ளது.//

கற்பக விநாயகத்துக்கும் வாழ்த்துக்கள்

*********
வசந்த்

//" வெள்ளைகாரனுக்கு காட்டி கொடுத்தற்கும் கூட்டி கொடுத்ததற்கும் அவன் போட்ட பிச்சை தான்டா இந்த ஜமீன் பட்டம்." //

வசந்தத்தின் வருகைக்கு நன்றி. கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்(இடிமுழக்கமாய் இல்லாவிட்டாலும் தென்றலாய் இருந்தது).

இரணீயன் கம்யுனிஸ்டு என்று குறிப்பிடுவதில் பெருமை கொள்கிறேன்.

நன்றி,
அசுரன்.

said...

இதில் வேலுச்சாமி நாடார் என்பவர்யார்? அவர் ஏன் அங்கு வந்தார் தெரியுமா கொஞ்சம் சொல்லுங்களேன்.

said...

அசுரன் அவர்களே,

நான் எந்த சாதியையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பேச வரவில்லை.... வன்னியர்களுக்காக ராமதாஸ் போராடும்போது, தேவர்களுக்காக முத்துராமலிங்கத்தேவர் போராடியபோது, தங்களுக்கென்று ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்று தானே தொல்மாவும் கிருஷ்ணசாமியும் அமைப்பைத் தொடங்கினர். சாதியின் பெயரால் ஒரு அமைப்பின் கீழ் வருவோர் என்ற அளவில்தான் நான் தொல்மா வையும் கி.சாமியையும் குறிப்பிட்டேன்.

யானைகள் ஏன் கூட்டமாகவே திரிகின்றன... அவைகள் என்ன சாதிசங்கங்கள் வைத்திருக்கின்றனவா என்ற ரீதியில்தான் நான் கேட்கிறேன். கூட்டத்தில் இருந்தால் ஒரு மமதையுடன் நடந்து கொள்வதும் தனியாக இருந்தால் பவ்யமாக இருப்பதும் மனித இயல்பு.


என்னைப் பொறுத்தவரை மூன்று சாதிகள்தான்... பிறருக்கு உதவக்கூடிய கடவுள்சாதி....பிறருக்கு உதவா விட்டாலும் உபத்திரவம் தராமலிருக்கின்ற மனித சாதி... தேடித்தேடி உபத்திரவம் தரக்கூடிய மிருகசாதி..

அது சரி... அது என்ன அசுரன் என்று ஒரு பெயர்... தேவர்களின் எதிர்ப்பதம் தானே அசுரன்... ஆக உங்களின் முழு முதற் நோக்கமே தேவர்களை எதிர்ப்பது தானோ..?? சும்மா தோணிச்சுங்க...

said...

அனாமத்தாக ஒருவர், வேலுசாமி நாடார் பற்றி கிளறுவதன் உள்நோக்கம் என்ன என்பதை யாம் அறிவோம்.

இருப்பினும் அவரின் பங்கு என்ன என்பதை நான் குறிப்பிட்டிருந்த ஆதார நூல்கள் மற்றும் ஹார்டுகிரேவின் ஆய்வு (நாடார் வரலாறு) ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு தருகிறேன்.

"முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 1957 தேர்தலுக்கு சற்று முன்னர், கமுதி, முதுகுளத்தூர் வட்டாரங்களில் 'தேவர்கள், நாடாரின் கடைகளில் சரக்கு வாங்கிடக் கூடாது. தேவர்கள், தேவர்களின் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்கிடல் வேண்டும்" எனும் நல்லிணக்கப் பிரச்சாரம் செய்து வந்தனர். இது குறித்து நாடார் சாதிப் பிரமுகர் வேலுசாமி நாடார் ஒரு புகார் தந்திருக்கிறார். 1957 கலவரத்தின்போது நடந்த சமாதானக் கூட்டத்தில் அனைத்து சாதிப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அதில் நாடார் தரப்பில் கலந்து கொண்டவர் வேலுசாமி நாடார் ஆவார். இவர் காங்கிரசுக்கட்சியில் இருந்தவர். கலவரத்தினை விசாரிக்க மத்தியமந்திரி வந்தபோது, 'கடைகளில் சாமான் வாங்கக் கூடாதென்று' இடைஞ்சல் செய்கிறார்கள் என்று வேலுசாமிநாடார் செய்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறப்பட்டது அப்போது.

அன்று தேவர் சொன்ன 'பகிஸ்காரத்தை'த்தான் சமூக அமைதியைக் குலைக்கும் இந்து மத பயங்கரவாதி ராமகோபாலன் செய்து வருகிறான்.

கற்பகவிநாயகம்

said...

தலித்கள் ஒன்றாய் திரண்டு அமைப்பாவது, தன் மீது நிகழ்த்தப்படும் சாதிக்கொடுமைகளைக் களைவதற்காகவும், சாதி இழிவை நீக்கவும் என்பதனையும், ஆனால் அதேபோது சாதி வெறியர்களான இடைநிலை / ஆதிக்க சாதி வெறியர்களான நாயுடு,கவுண்டர்,தேவர்,வன்னியர்கள் சங்கமாய் திரண்டு தனது கேடுகெட்ட சாதிவெறியை ஒடுக்கப்பட்டோர் மீது மேலும் மேலும் செலுத்தவும்தான் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் திருமாவையும், ராமதாசையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கத் தோன்றாது. தேவர்கள் சாதிச்சங்கக் கூட்டத்தில் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யச்சொல்லி தீர்மானம் போடுவதையும், சாதி மீறிக் கல்யாணம் செய்பவர்களைத் தேடிப்பிடித்துக் கொல்வதையும் இவ்விடம் னினைவுபடுத்திக் கொள்ளவும்.

அசுரன் எனும் பெயர்;- ஆரியக்கூட்டத்தார் சோம,சுரா பானம் குடித்து சீரழிந்து கொண்டிருந்தபோது அச்சீர்கேட்டிற்கு எதிரான ஒரு நாகரீகம் இங்கிருந்தது. சுரருக்கு (சுரா எனும் மதுவகை அருந்திடுபவர்) எதிரானவர்களே (மதுப்பழக்கத்தை எதிர்த்தவர்கள்) 'அசுரர்கள்'.

கற்பகவிநாயகம்

said...

திருவடியான்,

நான் தங்களை தவறாக எண்ணவில்லை அதனால்தான் எனது கருத்தை சொல்லும் முன்பாக தங்களிடம் வேண்டுகோள் விடுத்து ஆரம்பித்தேன்....

நான் சுட்டிக்காட்ட விரும்பியது, தெரிந்தோ தெரியாமலேயோ தங்களூடைய கருத்து சாதி வெறியரின் கருத்தை பிரதி நிதித்துவப் படுத்துகிறது. அதை களைந்து கொள்ளுங்கள் என்பதுதான்.

என்னை தவறாக எடுத்துக் கொள்ளாமல் பதிலளித்ததிற்க்கு நன்றி

மற்றபடி,
கற்பக விநாயகத்தின் விளக்கம்தான் எனது விளக்கமும்

***

//கூட்டத்தில் இருந்தால் ஒரு மமதையுடன் நடந்து கொள்வதும் தனியாக இருந்தால் பவ்யமாக இருப்பதும் மனித இயல்பு.
//

உண்மை...

எனது மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்துச் சொல்லுங்களேன்

நன்றி,
அசுரன்

said...

//Who is this Jeevabharathi. He may be a big writer. So there is only on evidence is enough to say 'Jathi Veriyan'?. Before you eat somebody's vomit, please make sure that is correct or not. I know you wont publish this ..also won't answer this.//

நான் நன்றாக படித்து விட்டேன் அவர் சொன்ன இரண்டு புத்தகங்களை 1பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்.
2.பசும்பொன் தேவரின் கட்டுரைகள்
இரண்டிலுமே அவர் அவ்வாறு சொல்ல வில்லை ஆகவே அந்த எழுத்தாளரை ஒன்றும் சொல்ல வேண்டாம்.

இதோ மாதிரிக்கு

மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்கா வீதியில் நடைபெற்றது. திரு.பி.டி. ராஜன் தமிழ்ச்சங்க தலைவர் மற்றும் பொன்விழாக் குழு தலைவராக இருந்தார். 10 நாட்கள் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப் பட்டது
பொன்விழாவைத் துவக்கிற வைத்து மூதறிஞர் ராஜாஜி பேசினார். அவர் போசும் போது. 5000 வருடங்களக்கு முன் கலப்பில்லாத ஆரியன் இருந்தான். கலப்பில்லாத திராவிடன் இருந்தான். இப்போத ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று பிரித்துச் சொல்ல முடியாதபடி கலந்துவிட்டது. இப்போது சிலர் ஆரியன், திராவிடன் என்று பிரிவினை பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

4ஆம் நாள் நிகழ்ச்சியில் பேச வேண்டிய திரு. பி்டி ராஜன் தமதுவாய்ப்பை நிகழ்ச்சியில் இடம்பெறாத திரு. சி.என்.அண்ணாதுரைக்கு தந்து பேச வைத்தார். அவருக்கு முன்பாக சேலத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் மகள் மண்மேகலை என்னம் சிறுமி பேசினார். அண்ணாதுரை பேசும்போது.
" இங்கே அருமையாகப் பேசிய மாணவிக்கு பரிசு என்ற பெயரில் ஒரு புத்தகத்தை கொடுத்து ஏமாற்றி அனுப்பிவிட்டார்கள். அந்தக் காலமாக இருந்திருந்தால். உமையம்மையின் ஞானப் பாலுண்டார் - ஞானம் வந்தது. பேசினார் என்று கதை கட்டியிருப்பார்கள்" என்றார். மேலும் அவர் பேசும்போது, " இந்த விழாவை துவக்கி வைத்துப் பேசிய ஆச்சாரியார் (ராஜாஜி) கூற்றை அப் படியே ஏற்றுக் கொண்டால் ஆச்சாரியாரின் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது" என்று ராஜாஜியின் பிறப்பை இழிவுபடுத்திக் குறிப்பிட்டார்.

இதைக் கேள்விப்பட்டார் தேவர். 6 ஆம் நாள் தேபதிகளின் தமிழ்த்தொண்டு என்ற தலைப்பில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பேச வேண்டியிருந்தது. 5ஆம் நாளே பேச அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கபட்பட்டது, ஆனாலும் பேசினார்.

"மேடை மரபுகளை மீறி மேடையை ஆக்கிரமிப்பதும். ஒரு மாது தலைமையேற்றுள்ள போது பேசுவதும் அடியேனுக்கு இது தான் முதலும் கடைசியுமாகும். ராஜாஜிக்கும் எனக்கும்
ஆயிரம் கருத்த வேறுபாடுகள் இருக்கலாம். அவரது பிறப்பை, அவரது தாயை இழிவுபடுத்துகின்ற வகையில் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது என்று பேசுவது பொறுத்தக் கொள்ள முடியாது. இருக்கின்ற இடம் அங்கயற்கண்ணியின் ஆலயம் என்பதையும் மறந்து தான் பெற்ற பட்டத்தை, படிப்பை மறந்து, தான் கொண்ட நாத்திகக் கொள்கையை மட்டும் மறவாமல் பேச வந்தவரைப் பேச விட்டது யார்? ஞானசம்பந்தர் வரலாற்றைக் கதை கட்டியதால் வந்தது என்று பேசலாமா? ஆலயத்தில் இந்த விழா நடப்பதை அனுமதிக்க முடியாது. என்று பேசினார் தேவர்

பசும்பொன்தேவர் அண்ணாவை சுடு சொல்லால் தாக்கினார் என்பது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு. தேவர் பயன்படுத்திய அதே சொல்லை அண்ணா , ராஜாஜியின் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது என்று நளினமாகச் சொல்லிவிட்டார். பசும்பொன் தேவர் யதார்த்த வாதி. பட்டென்று வெளிப்படையாச் சொல்லிவிட்டார்.

தமிழ்ச்சங்க நிர்வாகத்தில் இருந்தவர்கள் தன்னிச்சையாக கோவிலுக்குள் நடக்கும் விழா என்பதை மறந்து நிகழ்ச்சி நிரலில் இல்லாதவரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மேடையேற்றியதுதான் முதல் தவறு.

தேவரின் எச்சரிக்கையின்படி தமிழ்ச்சங்கம் பொன் விழாவின் மற்ற நிகழ்ச்சிகள் மீனாட்சியம்மன் கோவில் வடக்காடி வீதியில் இருந்து தமுக்கத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.

மதுரை மணி
24-11-2001

பசும்பொன் தேவரும்
திராவிட இயக்கங்களும்

said...

என்னார் என்பவர் பெயர் ஆர்.நடேசன். இவர்ர் கள்ளர் ஜாதியைச் சேர்ந்தவர். இதுவும் தேவர் ஜாதியின்கீழ் வருகிறது. இவர் ஜாதியான சசிகலாதான் இன்றைக்கு தமிழகத்தை ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பவர். முத்துராமலிங்கனும் இதே ஜாதிதான்.

என்னார் அதிமுக உறுப்பினரும்கூட. அதனால்தான் முத்துராமலிங்கனை விடாமல் பேசுகிறார். அதிமுக என்பதால் பல இடங்களில் பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர் கும்மியடிப்பதும் அடிக்கடி நடக்கிறது பாருங்கள்.

said...

//////
//மற்றொன்று அடக்குமுறைக்கு எதிரான ஆற்றமையின் வெளிப்பாடு. அது சரியான அமைப்பு வடிவில் வரவில்லை என்று வேண்டுமானல் தங்களது வாதத்தை வையுங்க்ள் //

இந்துமத தத்துவங்களுக்கு எதிராக தற்போது நடந்து வரும் அடக்குமுறையின் வெளிப்பாடாய் காலப்போக்கில் கிளர்ந்து எள இருக்கும் இந்தியர்களின் இயக்கத்தையும் இதே கண்கொண்டு தங்களால் பார்க்க இயலுமா?

//////


ப்ரம்மவுக்கு பிதா அவர்களே,

இந்துமத தத்துவம் எவை என்று சொல்லவும்?

எந்த வகையில் இந்த தத்துவங்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறது என்று சொல்லவும்?

In your dictionary - யார் இந்தியர்கள்?

யார் இந்த தத்துவங்களை காக்க கிளர்ந்து எழுவார்கள் என்று சொல்லவும்?

எந்த வகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான அடக்குமுறையும் உங்க கோஸ்டிகள் மீதான அடக்குமுறையும் சமம் என்றும் கூற வேண்டும்?

அப்புறம்தான் எனது ஆதரவு உண்டா இல்லையா என்று சொல்ல முடியும்.

நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள் என்றால் நான் தங்களது புற முதுகை பார்த்ததாக எண்ணிக் கொள்ளவேண்டியதுதான்.

*****

ஆடு, மழை, ஓநாய்.....

பிரியாணி, கறிவேப்பிலை, ஆட்டுக் கறி...

சும்மா உளறுறேன்... ஹி..ஹி..

நன்றி,
அசுரன்.

said...

hello அசுரன் ,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாதி வெறியர் மற்றும்் இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

அதற்காக திருமாஓ, கிருஷ்ணசாமியோ அல்லது கம்யுனிஸ்டுகளோ நல்லவர்கள் என்பது இந்த வருட காமடி. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன் என்றால் கம்யுனிஸ்டுகள் சீனாவையும், ராஷ்யாவையும் நக்கி கொண்டிருக்கும் நாய்கள் தோச துரோகிகள்.

திருமாயும், கிருஷ்ணசாமியும் தாழ்தபட்டவர்களை வைத்து கீழ் தரமான அரசியல் நடத்துபவர்கள்.

திருமாயும், கிருஷ்ணசாமியும் மற்றும் கம்யுனிஸ்டுகளை நியபடுத்தாதீர்கள்..

said...

மணியன்,

திருமா... கிருஷ்ணசாமி போன்றவர்களின் நிலை தேர்தல் அரசியலில், சம்ரச அரசியலில் நுழைந்தவர்களின் நிலைதான்....

இதை திருமாவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால்:
"தேர்தல் பாதை சாக்கடை".

மற்றப்டி இங்கு 'சாதி வெறி' பற்றி விவாதம் நடந்து வருகிறது....

நீங்கள் உள்ளிழுத்திருக்கும் விசயம் 'பிழைப்புவாதம்' பற்றி....

இதில் ஜார்ஜ் புஷ் லிருந்து மன்மோகன் சிங் மொள்ளமாறி வரை பேசலாம் அதனால் இதை விவாதம் செய்ய முடியாது.....

விருப்பட்டால் 'தொட்டனைத்தூறும்...' என்று தலைப்பில் எழுதிவைத்துள்ள தங்கள் தளத்தில் நீங்கள் 'பிழைப்புவவாதம்' பற்றி ஒரு விவாதத்தை ஆரம்பியுங்கள்.

நான் வந்து உங்கள் குட்டையை குழப்பியே மீன் பிடிக்கிறேன்....

இங்கே 'பிழைப்புவாத' பற்றிய விவாதத்திற்க்கு முற்றுப்புள்ளி விழுகிறது......

சாதி வெறி பற்றி இனி பேசலாம்...(இனி கிருஷ், திரு இவர்களை இழுக்க விரும்புபவர்கள் by default அவர்களையும் சாதி வெறியர்கள் என்ற லிஸ்டில் சேர்ப்பதாக கருதப்படும். அதற்க்கான தகுந்த கண்டனத்தையும் பெறுவார்கள்).

********
கம்யுனிஸ்டுகள் என்று யாரைச் சொல்கிறேர்கள்?

ரஸ்யா, சீனா இன்றைய நாடுகளா அல்லது முறையே 1950, 1970 களுக்கு முந்தைய நாடுகளா? எதை சொல்கிறேர்கள் என்று தெளிவுபடுத்தினால்
தங்களுக்கு 'தகுந்த' பதில் அளிக்கப்படும்...


ஏனெனில் தங்களது வெறுப்பு கம்யுனிசத்த்ன் மீதா அல்லது இன்றைய ஓட்டு பொறுக்கி கம்யுனிஸ்டுகள் மீதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

வருகைக்கு நன்றி....

அசுரன்

said...

//அய்யோ, இம்மாம் பெரிய ரௌடி கேஸா இந்த தேவரு? பொரிக்கி கம்மனாட்டி. நாங் இன்னுமோ அவரு ஒரு பெரிய தலைவருந்தாம்பா இன்னிக்கி வரைக்குங் நெனைச்சிக்கிட்டிந்தேங். இந்த மாதிரியான வெறியனுங்க உண்மயான சேதி தெரிஞ்சுகினதுள்ள ஒரு பக்கங் சந்தோசங், இன்னொரு பக்கங் எரிச்சலு. தொடர்ந்து எழுதுங்க அசுரங். //

மாசிலா,

மாசு மறுவற்று நீங்கள் ஆளும் வர்க்கத்தின் அரசியலால் ஒரு ரௌடியை தலைவராக நினைத்திருந்தீர்கள்.....

தப்பில்லை நானும் இது போல வெகு சமீப காலம் வரை பல தப்பான அபிப்ராயங்களை கொண்டிருந்தேன்....

தங்களது சந்தோசத்தை மேலும் நமது புரிதலை வளர்த்துக் கொள்ளவும்...
எரிச்சலை இது போல மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பன்றிகளை அம்பலப்படுத்தவும் பயன்படுத்துங்கள்.....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

எனது மற்ற கட்டுரைகளையும் படித்துக் கருத்துச் சொல்லுங்கள்...

நன்றி,
அசுரன்

said...

Devar, a Subash Chandra Bose supporter floated his Leftist Forward Bloc after he quit congress. He selflessly fought for the rights of madurai Meenakshi Mill workers. I too may have some positive, 1 or 2 negative opinions on Devar. on the whole he is a sacrificer, pro poor, corruption free, straight forward politician.
Branding a leftist forward bloc leader as an Hinduthuva element is diplorable. we could not build a society on hatredship.

S.Ravindran Thuraisamy,
71H1B, Park Road, Ramanpudur,Nagercoil-4.
Cell: 98410 22367

said...

நண்பர் ,

இந்த கட்டுரையில் தேவரின் சாதி வெறி, இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு பற்றித்தான் பேசியுள்ளோம். இது போல சாதி வெறி கருத்துக்களை விதைத்துச் சென்றவரை தூக்கிப் பிடிப்பது ஆபத்தில் கொண்டு விடும். ஏனேனில், தேவரை எந்த முற்போக்காளரும் பயன்படுத்துவதாக தெரியவில்லை பிற்போக்குவாதிகள்தான் ஆள் சேர்க்க அவரை பயன்படுத்துகிறார்கள். இந்த சமயத்தில் அவரை அம்பலப்படுத்துவதும், அவரது இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடுகளை அம்பலப்படுத்துவதும் தேவையாகிறது. இதில் வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது. அப்படி பார்க்கத் தொடங்கினால் யாரையுமே அம்பலப்படுத்தி பேச முடியாது.


தேவரின் சாதி வெறி பற்றியும் அவரது இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு பற்றியும் தங்களிடமிருந்து பதில் எதிர்ப்பார்க்கிறேன். அவரை கூட தியாகி, நல்லவர் என்று தூக்கிப் வைப்பதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இவரின் ரசிகர்களை அணி திரட்டி வைத்துள்ள பிற்போக்குவாதிகளுக்கு, இந்துவவாதிகளுக்கு என்ன எதிர்வினை கொடுக்கப் போகிறோம்? தேவரின் முற்போக்கு அரசியல் என்று புத்தகம் போடுவதா?
அது எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

அசுரன்

said...

அசுரன்,

அருமையான பதிவு இது பற்றி எனக்கு முன்பே தெரியும் ஆனால் முழுமையாகத் தெரியாது. பூனைக்கு மணி கட்டியதில் மிகவும் மகிழ்ச்சி

said...

இங்கே சொன்னதை தெற்குச்சீமையில் வந்து சொல்ல தைரியம் இருக்கிறதா?.

தலைவர்களை விமர்சிக்கும் பொது கொஞ்சமாவது நாகரீகம் வேண்டும்.

இஷ்டம் பொல எல்லோரையும் சாடுவதால் முற்போக்குவாதியாகிவிடமுடியாது?

said...

Another shocking story:
http://chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID={205348B9-E9DD-4FFD-93AD-5C4B221721FC}&CATEGORYNAME=NATL

said...

I think that the author of the Essay is keep on writing comments through various names.

said...

I want to know


WHO R U ALL

SCS
STS
OBCS
BCS
FCS
TAMILIANS
ASIANS
HUMAN BEINGS


Every human being born here inheridently having selfishness by birth.

Based on their growup, surrounding, culture shaped its own cabability and capacity.

Here all of you shows some stupid things which r not at all used.
Dalids only live in this country.
If any one blame great Ambedkar what would be your situation.
First be a human being give and take respect from others.

We know very strongly about past 2k years how people behaved worsely to a group of people.

Do you thing you have those things now and blamed same like those peoples. then what would be difference between u people?

All of your words not look like very literate. Except you everyone behaved worse. Is it right?

If all of yours words are true then Clarify yourserlf the following things, Then only all of us accept and get clarified.
Otherwise we take you yourself expressed as 'JathiVeriyan'.


How many thevers(Rich) behaved like Pasumpon thever (Not having more wife, luxury life, become sanyasi eventhough having guts to get power, position and protection)?

In his consitituency all of Thevers only voted him? What about others?

How he won 6 times?

Why congress govt not took action against him while he addressed kamaraj?

British did all favour for our country?

Anyone internationa quality company u found in india(After independence)?

What about of lifestyle compare with other countries?

Congress(made by british), Dravidian movement(support to british activities) is did well for our country?

r u not expressed here everything on behalf of suppressed one?

In this world only for suppressed?

I know you are feelings and your thoughts against all dominatable casts.

We are great in the world (Tamils), in culture, literature and lot....

Hope to get usables and be ready to practice and become superior.

Vazhlga Vazhamudan

said...

'தமிழும் தமிழரும்' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

''இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன், 3.கம்பன்.

இம்மூவரில்,
1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட மாபெரும் துரோகி.
2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்."

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:
"அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்."

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை. தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!

தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும் துரோகிதானே?

இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர் பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின் பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.

இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957'ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார். பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

"தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும்" என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால், அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, "வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு" என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா
பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள். அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.
(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)
In what way Jinnah is not a North Indian? How is the names Jinnah and Robinson so sweet to you Sir? How is the name of poor Tilak so bitter to you Sir? I am not
able to understand.
ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன்? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன்? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம்
அல்லவா?
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது? அதற்கு மேல் "வடநாட்டான் திராவிட நாட்டை
சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம்" என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.
டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்
'டால்மியாபுரம்' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா?
ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த சௌந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.
ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.
அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய்? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது
சொல்லலாம்.
வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த 'புரபகண்டா''செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம்? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய
ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.
'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம்' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே' என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம்' என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய
போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
'ரோமாபுரி ராணி' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை? எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி? ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல்' என்று ஒரு கதை எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய். அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே? வேறு என்ன?
இதுவா தமிழ் நாகரீகம்?
சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். -உரை முடிந்தது-


Vazhga vazhamudan
Endrum Anbudan

said...

when i was reading thru the comments, i found a person not finding e kalappai , so he was typing in english , the tamil language
i recently saw this site http://quillpad.in/tamil online which allows you to make posts in native scripts wherever,whichever comp you are using
this is because it is a online translation tool converting what you type in english to tamil immediately once you type..

said...

super machaan...superoooo super

said...

இப்படித்தான்... அப்ப அப்ப.... நாம மற்ற ஜாதிக்காரனுகள திட்டிக்கிட்டே இருக்கனும்.. அயயனுக, தேவனுக, நாடானுக, நாய்க்கனுக, கவுன்டனுக, வன்னியனுக... அவனுக 300 வருசம் நம்மள ஏச்சானுகள்ள...இப்ப நாம நாறடிப்போம்....அனாவுனா நாடான்ட சாதிடான்னு சொல்லுவானுக...எந்த நாட ஆன்டானுகலோ.. pooddu thakku machii...

said...

அசுரன்,

முத்துராமலிங்கம், காமராஜ் ஆகியோரைப் பற்றி இப்படிப் படிப்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆதார நூல்கள் எந்த அளவுக்கு உண்மையை உரைக்கின்றன என்பது தெரியாத நிலையில், இணையம் கொடுக்கின்ற தைரியத்தில் யார் யாரை வேண்டுமானாலும் பற்றி எழுதலாம் என்றாகிவிட்டது (பின்னூட்டங்களையும் சேர்த்து).

இறந்தவர்களைப் பற்றி தவறான வகையில் விமர்சனம் செய்வது நாகரீகமற்ற செயல் என்ற வகையில், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 'தலைவர்கள்' (அவர்கள் எந்த சாதியாகவும் இருக்கட்டும்!) பற்றி, இப்படிப் பிட்டு வைக்கும் ஏதாவது நூல்கள் உள்ளனவா?

நன்றி.

said...

வரலாற்றைத் தலைவர்கள்தான் உருவாக்கினார்கள் என்கிற வழிபாட்டு மணோபாவத்திற்கு சாட்டையடி கொடுக்கும் பதிவு. சாதியம் என்பது ஆளும் வர்க்கத்தின் மேலாண்மைக் கருத்தியலாக செயல்படுவதையும் அதன் தர்க்க நீட்சி இந்து மேலாதிக்க உணர்விற்கும் தலித் மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கு எதிராக எப்படி மாறும் என்பதையும் கூறும் இக்கட்டுரை அனைத்து ஜனநாயக சக்திகளும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

பல புதிய தகவல்களை தந்தமைக்கு. நன்றி.

said...

தோழா ...சிறப்பான, காலத்திற்க்கேற்ற செயல்..வாழ்த்துகள் கூடவே தந்தை பெரியாரின் செயல்பாடுகளை (தேவன்) இருந்த காலங்களில் எழுதினால் சிறப்பாக இர்க்கும்..

said...

நன்றாக சொன்னீர்கள் கற்பக விநாயகம். அந்த கோமாளிப்பய புத்தி சொல்லி நடிச்சுக்கிட்டு இருக்கான். அவனுக்கு என்ன அருகதை இருக்குன்னு தெரியல.........

said...

தங்களுடைய இந்த பதிவு மிகவும் நல்ல உண்மை-தீணியாக இருந்தது. இதன் நம்பகத்தன்மை எவ்வளவு. தெரிவிக்க வேண்டும்.

தாங்களுடைய இந்த பதிவை pdf வடிவில் பெற விரும்பினேன் முடியவில்லை. உதவி செய்யவும்.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி.
suresh.sasa2125@gmail.com

said...

அப்படி தியாகமே உருவாக வாழ்ந்து மடிந்தவரை (கடைசிக் காலத்தில் தேர்தலில் தோற்கடித்து, நோகடித்துக் கொன்றனர் நம் தமிழ் மக்கள்) அவர் காலத்திலேயே ஒருவர் இப்படி கேவலமாக சிறுமைப் படுத்தி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது..முத்துராமலிங்கத் தேவர் இப்போது உயிரோடு இருந்து என் முன்னே நின்றால் அவர் வாயில் ஒரு செருப்பை கவ்வக் கொடுத்து அடிப்பேன்...ஆக்ரோஷமாக..தைரியமாக...

fantastic. I will also join

said...

Hi Muthukumar,

shall i know which Muthukumar this and exactly which ...valasu near nalroad? because i am Muthukumar from Kangayam, Nallroad, :-). it became too hard to proove my friends and clgs that i am not the one who had posted all these comments. can you please send some info about you to muthuggkumar@gmail.com

Thanks in advance,
Muthukumar

said...

THE GREAT LEGEND DEVENDRAKULAVELLALAR
LEADER TYAGI IMMANUVEL DEVENDRAR WAS KILLED BY
JATHIVERIPIDITHANAAI
MUTHURAMALAINGAM.HE IS THE MAIN ACCUSED OF THE CASE.BUT COURT SAYS, HE IS NOT A CULPRIT...
THEN WHO KILLED...

said...

devana seruppal adikkanum

said...

jathi veri piditha thevidiya makan muthuramalingathai seruppu vilakamaral adikka vendum

said...

நண்பர் மாலைக்கருப்பு,

உங்களது இரு பின்னூட்டங்களை தவிர பிறவற்றை பிரசூரிக்கவில்லை. உங்களது கோபம் புரிகிறது. ஆனால், வெறுமே முத்துராமலிங்கம் ஒரு சாதிவெறியன் என்பதால் அவனை கெட்ட வார்த்தைகளில் திட்டினால் ஏதாவது நடந்துவிடப் போகிறதா?

இது நமது ஆத்திரத்தை குறைக்குமேயொழிய முத்துராமலிஙகம் என்பவன் ஒரு தலைவனாக இன்று உருவாக்கப்பட்டுள்ளதை உடைக்க எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி
அசுரன்

said...

Dear Asuran avarkale...

muthuramalingathin muga thirayai killika oru vali sollungal

said...

சூப்பர் நல்ல பதிவை இவ்வள்வு நாள் வாசிக்க வில்லையே.??

நல்லதுதான். அத்தனை பின்னூட்டங்களையும் சேர்த்து வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தன..

வாழ்த்துக்கள்..

said...

Rosa Vasanth and others,
Thirumavalavan has not attended Thevar Jeyanthi but has demanded that Thevar Jeyanthi should be declared as a State Holiday!

said...

how can i give comments

said...

நல்ல கற்பனை கதை, இது உனது சாதி வெறியின் வெளிப்பாடே அன்றி வேறொன்றுமில்லை.

said...

அந்த ஜாதி வெறியனை முத்துராமலிங்கம் என்று அழைக்காமல் தேவர் என்று அழைத்து எழுதியது இந்த பதிவின் கேவலமான பிழை!
அவன் உடம்பில் ஓடும் ரத்தம் ஆயிசா என்ற முஸ்லிம் தாயின் பால்!
ஆனால் அந்த துரோகி வழி வந்தவர்கள் மற்றும் அவனும் நன்றி கெட்ட நாதாரிகள்!

said...

this is written by full he dont no any think . be fore to write any think first think ur self . muthu ramalinka thever is a god he helped to SC/ST his worn firm. sc/st people have the imperiority complex
thats why you all scandal against thever

said...

மலைகருப்பு ஒரு பறையர். கற்பகவிநாயகம் ஒரு நாடார் என்று நினைக்கிறேன். நீங்கள் எல்லாம் ஜாதி எதிர்ப்பாளர்கள் என்று பொய் சொல்கிறீர்கள். நீங்கள் தேவரை பற்றி கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதிலிருந்தே நீங்கள் எவ்வளவு பெரிய ஜாதி வெறியர்கள் என்பது தெரிகிறது. காமராஜரை தேவர் திட்டியதாக சொல்லும் நீங்கள் தேவரை பற்றி 9 என்று சொல்வதிலிருந்தே உங்கள் நாகரீகம் நன்றாக தெரிகிறது.

said...

hi i am vasu devan,
pasumpon is one of the god, u was put message fully lie, he is genius, he is genune, he is great political man, trueman,ok,this type message u. ok mind it.

said...

ஆதாரத்துடன் எழுதப்பட்டமைக்கு நன்றி. தேவர் போன்ற சாதி வெறிப்பிடித்த கழிசடைகளப் பற்றி தமிழகம் தெரிந்துகொள்ளட்டும்.

said...

முத்துராமலிங்க தேவர் ஒரு தேசிய தலைவர்.. உனக்கெல்லாம் ஒரு இண்டர்நெட் கனெக்சன் கெடச்சா என்னவேணாலும் எழுதுறதா??.. ஏன் இப்படி எழுதி எழுதி ஜாதிவெறிய தூண்டிவிடுறீங்க.. அவர 9 நு சொல்லுற நீ ஆம்பளயா இருந்தா இங்க சொன்ன கருத்த பசும்பொன் போயி ஒரு மீட்டிங் போட்டு சொல்லி பாரேன்..

said...

தோழர் இம்மானுவேலும் முத்துராமலிங்கத் தேவரும் தங்களது சாதிக் கொடியை நட்டு வைத்துக் கொண்டு சண்டை போட்டார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். அப்போது போலிஸ் மந்திரியாக இருந்தவர் கக்கன்.

இம்மானுவேல் தனக்கு சமமாக உட்கார்ந்து விட்டார் என்று... முத்துராமலிங்கத் தேவர் தனது ஆட்களுக்கு கண்ஜாடை காட்ட; கூட்டம் முடிந்து வெளியே வந்த இம்மானுவேல் சேகரனை முத்துராமலிங்கத் தேவரின் ஆட்கள் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டி கூறு போட்டார்கள். அப்படி ஒரு சாதி வெறி .

இன்னும் திருந்தாத இவர்கள் போன்றோர்தான் தமிழனின் வளர்ச்சியை தடுக்கும் உன்மையான கோடாலிக் காம்புகள்.

said...

yelai neeum oru nadar entru theriuthu////////////

said...

சாதி வெறியை கண்டிப்பவன் நாடார்( நாடக்கூடாதவர்)என்றால் நாங்கள் அனைவருமே நாடக்கூடாதவர்தான்...........

சாதியை உள்ளத்தில் நிறுத்திக் கொண்டு நாடக்கூடாதவர்கள்...

said...

முதலில் காமராஜர் என்ற ஜாதி வெறியன் - என்றொரு கட்டுரை எழுதலாம். அவரே செட்டியார் எனப்படும் வணிகரை ஒழித்துக் கட்டியவர். தம் இன மக்களை வணிகம் செய்வ்தற்காக. தூத்துக்குடியின் பூர்வீக மக்களான பரதவர்களின் Chemical Factory-ஐ வராமல் தடுத்தவர், மற்றும் அந்த இனம் முன்னேறாமல் இருக்க பல வழிவகை செய்தவர்.

said...

useless topics at this time, Tamilan always good for depates..

said...

உங்கள் கட்டுரை உண்மையாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் மேற்கோள் காட்டிய அத்தனை புத்தகங்களையும் எழுதியவர் ஜீவபாரதி ஒருவரே. எனில் இது ஜீவபாரதி என்ற தனிப்பட்ட ஒருவருடைய கருத்தாக அமைகிறது. மேலும் ஜீவபாரதிக்கு தேவருக்கும் விரோதம் இருக்குமோ? ஜீவபாரதி நாடார் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பாரோ? என்றெல்லாம் ஆராய்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. எனவே வெவ்வேறு ஆசிரியர்களுடைய கட்டுரை பத்திரிகை செய்திகளை வெளியிட்டு இருக்கலாமே.

said...

சிவந்தி ஆதித்தன் தான், தென்காசிப் பாண்டிய மன்னர்களின் வாரிசு எனும் கருத்து உடையவர் அவர் எனக்கேள்விப்படுகிறேன்.
above is good commedy.
naadars or any other casts never belong to the sera chola pandiyars.they came from North Srilanka/eela saanars).every sangam literature say the moo vendars are came from "Mallar" cast.if you want such of true,please study the all sangam literature and Pallu Literature.
-vijaj-

said...

நல்ல பதிவு. பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டேன்.

said...

நல்ல பதிவு. பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டேன்.

said...

ஒன்று நன்றாக புரிகிறது ஜாதிவெறி ஜாதிவெறி என்று அவரவர் தங்கள் வெறியை இங்கே கொட்டுக்கிறிர்கள்...... தமிழன் என்றும் ஒழுக்கத்திற்கும், நாகரிகதிற்கும் கடைபிடிப்பவன்...... ஆனால் இங்கு (பின்னுட்டங்கள்) மிக மோசமான (சில)பதிவுகளால் தரம் கேட்டுக்கொண்டிகிறது.......

said...

Asuran,
i think all ur reference authors (author)were lived during kamarajar and PASUMPON MUTHURAMALINGA THEVAR AYYA period or something like genius who created all this dialogue and screenplay if u have any clarification regarding AYYA's life history u better read any good and well human books else if u were belong to any dalit community ask ur ancestors (who were residing in r near pasumpon),u come to know all about HIM and HIS wealth.Everyone says that "kamarajar is the kingmaker" but AYYA s the one who made him.but s there any thing saying about AYYA in kamarajar's history.NO

can anyone prove that AYYA was not the one who bought kamarajar,a goat and made him a contestant ?

AYYA ,once rejected offered ministry position and also HE s from the bloodline of RAMANAD RULERS and hav much legacy(owner of more than 33 villages when HE born),also unmarried and died with the wealth (more than kamarajar) of 6 feet grave.
HE s in no need to get publicity by accusing anyone (and also no KING can get popular by accusing others)and from all this we can conclude of who s that fond of ruling..


Many commented that you exposes other face of GREAT HUMAN but actually the one who know the truth(many who even live now) will surely know that u camouflaged what karmavirar framed to revenge on his disrespect.


if kamarajar s that good CM ever before and ever after y so he lose in election in his own constituency?


Once neethikatchi members kidnapped kamarajar and THE ONE who rescued him from them s none than AYYA
Do u know this?


In the history of TN Election the ONE who won even after charging "VAIPUTU SATAM" before election ,was AYYA.So i dont know y u are saying AYYA s so accusing kamarajar? for wat?

for publicity?(no not at all which s born property of AYYA)

To disprove kamarajar?(why the ONE wats to defeat by growing him, so not at all)


for wat reason?


thiyaki immanuvelsekaran hav really did a great job in making conflict between communities and before reading u blog i dont know much about him but came to know that he is one who really lost his life and get place in history great work to gain name THIYAKI.really great isnt it?


anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

Asuran,
i think all ur reference authors (author)were lived during kamarajar and PASUMPON MUTHURAMALINGA THEVAR AYYA period or something like genius who created all this dialogue and screenplay if u have any clarification regarding AYYA's life history u better read any good and well human books else if u were belong to any dalit community ask ur ancestors (who were residing in r near pasumpon),u come to know all about HIM and HIS wealth.Everyone says that "kamarajar is the kingmaker" but AYYA s the one who made him.but s there any thing saying about AYYA in kamarajar's history.NO

can anyone prove that AYYA was not the one who bought kamarajar,a goat and made him a contestant ?

AYYA ,once rejected offered ministry position and also HE s from the bloodline of RAMANAD RULERS and hav much legacy(owner of more than 33 villages when HE born),also unmarried and died with the wealth (more than kamarajar) of 6 feet grave.HE s in no need to get publicity by accusing anyone (and also no KING can get popular by accusing his servant)and from all this we can conclude of who s that fond of ruling..



Many commented that you exposes other face of GREAT HUMAN but actually the one who know the truth(many who even live now) will surely know that u camouflaged what karmavirar framed to revenge on his disrespect(obviously truth).


if kamarajar s that good CM ever before and ever after y so he lose in election in his own constituency?



Once neethikatchi members kidnapped kamarajar and THE ONE who rescued him from them s none than AYYA
Do u know this?


In the history of TN Election the ONE who won even after charging "VAIPUTU SATAM" before election ,was AYYA.So i dont know y u are saying AYYA s so accusing kamarajar? for wat?

for publicity?(no not at all which s legacy of AYYA)

To disprove kamarajar?(why the ONE wats to defeat by growing him, unbelievable)


for wat reason?


thiyaki immanuvelsekaran hav really did a great job in making conflict between communities and before reading u blog i dont know much about him but came to know that he is one who really lost his life and get place in history great work to gain name THIYAKI.really great isnt it?


anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

Asuran,
i think all ur reference authors (author)were lived during kamarajar and PASUMPON MUTHURAMALINGA THEVAR AYYA period or something like genius who created all this dialogue and screenplay if u have any clarification regarding AYYA's life history u better read any good and well human books else if u were belong to any dalit community ask ur ancestors (who were residing in r near pasumpon),u come to know all about HIM and HIS wealth.Everyone says that "kamarajar is the kingmaker" but AYYA s the one who made him.but s there any thing saying about AYYA in kamarajar's history.NO

can anyone prove that AYYA was not the one who bought kamarajar,a goat and made him a contestant ?

AYYA ,once rejected offered ministry position and also HE s from the bloodline of RAMANAD RULERS and hav much legacy(owner of more than 33 villages when HE born),also unmarried and died with the wealth (more than kamarajar) of 6 feet grave.HE s in no need to get publicity by accusing anyone (and also no KING can get popular by accusing his servant)and from all this we can conclude of who s that fond of ruling..



Many commented that you exposes other face of GREAT HUMAN but actually the one who know the truth(many who even live now) will surely know that u camouflaged what karmavirar framed to revenge on his disrespect(obviously truth).


if kamarajar s that good CM ever before and ever after y so he lose in election in his own constituency?



Once neethikatchi members kidnapped kamarajar and THE ONE who rescued him from them s none than AYYA
Do u know this?


anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

In the history of TN Election the ONE who won even after charging "VAIPUTU SATAM" before election ,was AYYA.So i dont know y u are saying AYYA s so accusing kamarajar? for wat?

for publicity?(no not at all which s legacy of AYYA)

To disprove kamarajar?(why the ONE wats to defeat by growing him, unbelievable)


for wat reason?


thiyaki immanuvelsekaran hav really did a great job in making conflict between communities and before reading u blog i dont know much about him but came to know that he is one who really lost his life and get place in history great work to gain name THIYAKI.really great isnt it?




anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

Asuran,
i think all ur reference authors (author)were lived during kamarajar and PASUMPON MUTHURAMALINGA THEVAR AYYA period or something like genius who created all this dialogue and screenplay if u have any clarification regarding AYYA's life history u better read any good and well human books else if u were belong to any dalit community ask ur ancestors (who were residing in r near pasumpon),u come to know all about HIM and HIS wealth.Everyone says that "kamarajar is the kingmaker" but AYYA s the one who made him.but s there any thing saying about AYYA in kamarajar's history.NO

can anyone prove that AYYA was not the one who bought kamarajar,a goat and made him a contestant ?

AYYA ,once rejected offered ministry position and also HE s from the bloodline of RAMANAD RULERS and hav much legacy(owner of more than 33 villages when HE born),also unmarried and died with the wealth (more than kamarajar) of 6 feet grave.HE s in no need to get publicity by accusing anyone (and also no KING can get popular by accusing his servant)and from all this we can conclude of who s that fond of ruling..



Many commented that you exposes other face of GREAT HUMAN but actually the one who know the truth(many who even live now) will surely know that u camouflaged what karmavirar framed to revenge on his disrespect(obviously truth).


if kamarajar s that good CM ever before and ever after y so he lose in election in his own constituency?



Once neethikatchi members kidnapped kamarajar and THE ONE who rescued him from them s none than AYYA
Do u know this?


In the history of TN Election the ONE who won even after charging "VAIPUTU SATAM" before election ,was AYYA.So i dont know y u are saying AYYA s so accusing kamarajar? for wat?

for publicity?(no not at all which s legacy of AYYA)

To disprove kamarajar?(why the ONE wats to defeat by growing him, unbelievable)


for wat reason?


thiyaki immanuvelsekaran hav really did a great job in making conflict between communities and before reading u blog i dont know much about him but came to know that he is one who really lost his life and get place in history great work to gain name THIYAKI.really great isnt it?


anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

Asuran,
i think all ur reference authors (author)were lived during kamarajar and PASUMPON MUTHURAMALINGA THEVAR AYYA period or something like genius who created all this dialogue and screenplay if u have any clarification regarding AYYA's life history u better read any good and well human books else if u were belong to any dalit community ask ur ancestors (who were residing in r near pasumpon),u come to know all about HIM and HIS wealth.Everyone says that "kamarajar is the kingmaker" but AYYA s the one who made him.but s there any thing saying about AYYA in kamarajar's history.NO

can anyone prove that AYYA was not the one who bought kamarajar,a goat and made him a contestant ?

AYYA ,once rejected offered ministry position and also HE s from the bloodline of RAMANAD RULERS and hav much legacy(owner of more than 33 villages when HE born),also unmarried and died with the wealth (more than kamarajar) of 6 feet grave.HE s in no need to get publicity by accusing anyone (and also no KING can get popular by accusing his servant)and from all this we can conclude of who s that fond of ruling..



Many commented that you exposes other face of GREAT HUMAN but actually the one who know the truth(many who even live now) will surely know that u camouflaged what karmavirar framed to revenge on his disrespect(obviously truth).


if kamarajar s that good CM ever before and ever after y so he lose in election in his own constituency?



Once neethikatchi members kidnapped kamarajar and THE ONE who rescued him from them s none than AYYA
Do u know this?



anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

In the history of TN Election the ONE who won even after charging "VAIPUTU SATAM" before election ,was AYYA.So i dont know y u are saying AYYA s so accusing kamarajar? for wat?

for publicity?(no not at all which s legacy of AYYA)

To disprove kamarajar?(why the ONE wats to defeat by growing him, unbelievable)


for wat reason?


thiyaki immanuvelsekaran hav really did a great job in making conflict between communities and before reading u blog i dont know much about him but came to know that he is one who really lost his life and get place in history great work to gain name THIYAKI.really great isnt it?




anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

Asuran,
i think all ur reference authors (author)were lived during kamarajar and PASUMPON MUTHURAMALINGA THEVAR AYYA period or something like genius who created all this dialogue and screenplay if u have any clarification regarding AYYA's life history u better read any good and well human books else if u were belong to any dalit community ask ur ancestors (who were residing in r near pasumpon),u come to know all about HIM and HIS wealth.Everyone says that "kamarajar is the kingmaker" but AYYA s the one who made him.but s there any thing saying about AYYA in kamarajar's history.NO

can anyone prove that AYYA was not the one who bought kamarajar,a goat and made him a contestant ?

AYYA ,once rejected offered ministry position and also HE s from the bloodline of RAMANAD RULERS and hav much legacy(owner of more than 33 villages when HE born),also unmarried and died with the wealth (more than kamarajar) of 6 feet grave.HE s in no need to get publicity by accusing anyone (and also no KING can get popular by accusing his servant)and from all this we can conclude of who s that fond of ruling..



Many commented that you exposes other face of GREAT HUMAN but actually the one who know the truth(many who even live now) will surely know that u camouflaged what karmavirar framed to revenge on his disrespect(obviously truth).


if kamarajar s that good CM ever before and ever after y so he lose in election in his own constituency?



Once neethikatchi members kidnapped kamarajar and THE ONE who rescued him from them s none than AYYA
Do u know this?



anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

In the history of TN Election the ONE who won even after charging "VAIPUTU SATAM" before election ,was AYYA.So i dont know y u are saying AYYA s so accusing kamarajar? for wat?

for publicity?(no not at all which s legacy of AYYA)

To disprove kamarajar?(why the ONE wats to defeat by growing him, unbelievable)


for wat reason?


thiyaki immanuvelsekaran hav really did a great job in making conflict between communities and before reading u blog i dont know much about him but came to know that he is one who really lost his life and get place in history great work to gain name THIYAKI.really great isnt it?




anyways "Climbing peak s optional but reaching plain back is mandatory"

i think u can answer me ....



by
TRUTH TELLER

said...

பார்ப்பன பணியா கும்பலை அடியொற்றி சாதிய வெறி பிடித்து அலையும் இந்த தேவர் ? முக்குலத்தோர் கும்பல்கள் நவீன உலகிலும் இப்படி வெறி பிடித்து அலைவது வெட்ககேடு !நான் நிறைய பிற சாதி (அவர்கள் கூற்றுப்படி)? மக்களுடன் நட்பு வைத்துள்ளேன் அதில் மிக மோசமான சாதி வெறி பிடித்தவர்கள் முதலில் தேவர்கள் அடுத்து வன்னியர்கள் .நான் படித்த காலத்தில் ஒரு சுவற்றில் தேர்தலின் போது வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்று தனது சாதி வெறியை உணர்த்தி இருந்தார்கள் (அதில் குறும்பாக கீழே அந்த சுன்னியன் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை என்று எழுதப்பட்டு இருந்ததும் கொசுறு )

said...

இவ்வளவு சொன்ன நீங்க காமராஜரோட ஜாதி பற்ற மட்டும் சொல்லாதது ஏன்?
நேதாஜி விமான விபத்துல சாகவில்லை என்பது நேரு அமைசரவையில் அமைத்த விசாரணை குழுவே அறிக்கை அளித்தது அந்த அறிக்கையின் பல பக்கங்கள் காணவில்லை என்று நேரு சொன்னது உங்களுக்கு தெரியுமா ? உங்கள் நோக்கம் தேவரை இழிவு படுத்துவதும் குறை சொல்லுவது மட்டும் தான் .தேவரின் சொத்துகள் பல ஹரிஜன்களிடம் தான் உள்ளது.இன்னும் பல உண்மைகள் உண்டு ஆனால் உங்கள் மனநிலை எதையும் ஏற்று கொள்ளும் மனநிலை இல்லை.யாரை பற்றியும் குறை கூறலாம்.கருத்து கூறும் முன் சற்று சிந்தியுங்கள்

said...

இவ்வளவு சொன்ன நீங்க காமராஜரோட ஜாதி பற்ற மட்டும் சொல்லாதது ஏன்?
நேதாஜி விமான விபத்துல சாகவில்லை என்பது நேரு அமைசரவையில் அமைத்த விசாரணை குழுவே அறிக்கை அளித்தது அந்த அறிக்கையின் பல பக்கங்கள் காணவில்லை என்று நேரு சொன்னது உங்களுக்கு தெரியுமா ? உங்கள் நோக்கம் தேவரை இழிவு படுத்துவதும் குறை சொல்லுவது மட்டும் தான் .தேவரின் சொத்துகள் பல ஹரிஜன்களிடம் தான் உள்ளது.இன்னும் பல உண்மைகள் உண்டு ஆனால் உங்கள் மனநிலை எதையும் ஏற்று கொள்ளும் மனநிலை இல்லை.யாரை பற்றியும் குறை கூறலாம்.கருத்து கூறும் முன் சற்று சிந்தியுங்கள்

said...

இவ்வளவு சொன்ன நீங்க காமராஜரோட ஜாதி பற்ற மட்டும் சொல்லாதது ஏன்?
நேதாஜி விமான விபத்துல சாகவில்லை என்பது நேரு அமைசரவையில் அமைத்த விசாரணை குழுவே அறிக்கை அளித்தது அந்த அறிக்கையின் பல பக்கங்கள் காணவில்லை என்று நேரு சொன்னது உங்களுக்கு தெரியுமா ? உங்கள் நோக்கம் தேவரை இழிவு படுத்துவதும் குறை சொல்லுவது மட்டும் தான் .தேவரின் சொத்துகள் பல ஹரிஜன்களிடம் தான் உள்ளது.இன்னும் பல உண்மைகள் உண்டு ஆனால் உங்கள் மனநிலை எதையும் ஏற்று கொள்ளும் மனநிலை இல்லை.யாரை பற்றியும் குறை கூறலாம்.கருத்து கூறும் முன் சற்று சிந்தியுங்கள்

said...

இவ்வளவு சொன்ன நீங்க காமராஜரோட ஜாதி பற்ற மட்டும் சொல்லாதது ஏன்?
நேதாஜி விமான விபத்துல சாகவில்லை என்பது நேரு அமைசரவையில் அமைத்த விசாரணை குழுவே அறிக்கை அளித்தது அந்த அறிக்கையின் பல பக்கங்கள் காணவில்லை என்று நேரு சொன்னது உங்களுக்கு தெரியுமா ? உங்கள் நோக்கம் தேவரை இழிவு படுத்துவதும் குறை சொல்லுவது மட்டும் தான் .தேவரின் சொத்துகள் பல ஹரிஜன்களிடம் தான் உள்ளது.இன்னும் பல உண்மைகள் உண்டு ஆனால் உங்கள் மனநிலை எதையும் ஏற்று கொள்ளும் மனநிலை இல்லை.யாரை பற்றியும் குறை கூறலாம்.கருத்து கூறும் முன் சற்று சிந்தியுங்கள்

said...

போய் புள்ளக் குட்டிங்களை படிக்க வைங்கடா.. இன்னமும் சாதியப் பத்திப் பேசிக்கிட்டு..

said...

தேவர் இவ்வளவு மோசமான நபராக இருப்பார் என்று நினைக்கவில்லை..இப்படிப்பட்டவரையா நம் அரசியல் தலைவர்கள் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது..நன்றி..

said...

If i put Against Thevar only hope you will Publish.. Thevar is National Leader, Dont Create communtity circle with him..

If He Born Another Community means He is Become World Leader.. He is Equal to Vivekandar.. Dont Try to become smart..

Why You Guys are making fight with Thevar and Scheduled caste..

said...

சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை"
என மனிதனுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை என்று கூறினார் தேவர் அய்யா
தாழ்த்தப் பட்டவர்களும், ஆதி திராவிடர்களும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமடைய கல்வி மி்க முக்கியம் என உரைத்தார்"ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள பள்ளியில் மற்றொரு சாதி மாணவருக்கு இடம் கிடைக்காத நிலையா" என் மனம் நொந்தார்.
சமுதாயத்தில் தாழ்த்தப் பட்ட நிலையில் உள்ளோர் தங்கள் தொழிலை தூக்கி எறிந்து விட்டு வாழ்க்கையின் முன்னேற்றமான தொழிலை செய்து பொருளாதார வசதிகளை பெருக்கி அதன் மூலம் தங்கள் குழந்தைளின் கல்வி வளர்ச்சியில் கவனம் அதிகம் பெற வேண்டும்-என்ற கேட்டுக்கொண்டார். பெரும் பணக்காரர்களே நிலங்களை வாங்கி குவித்து கொண்டிருப்பதை அறிந்து ஏழை மக்களும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு நிலங்களைப் பகிர்ந்து கொடுங்கள். அவர்களை சொந்த நிலமுள்ள விவசாயிகளாக ஆக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். தாங்களும் மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலை வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். தாழ்த்தப் பட்டவர்களுக்காகக் கட்டப் படும் குடியிருப்புகள் ஊரை விட்டு தொலைவிலில்லாமல் ஊருக்குள்ளேயே கட்டவெண்டுமென்றார். பஸ்ஸிலோ, ரயிலிலோ சம அந்தஸ்த்தோடு பயணம் செய்ய வேண்டும்; மக்களோடு மக்களாக இணைந்திருக்க வேண்டும் என்று கூறினார். வெறும் பேச்சளவில் போலிவேடமி்ல்லாமல் தமது சொத்துக்களை தனது ' ம ர ண சா ச ன த் தி ல்' கூட ஆதிதிராவிட மக்களுக்காக தனது நிலத்தின் பெரும் பகுதியை எழுதிவைத்துவிட்டு இறந்தார். சமபந்தி உணவுமுறையைத் தானே முன்னின்று நடத்திக் காட்டினார்.. தனது கண்காணிப்பிலேயே பல ஆதி திராவிடச் சிறுவர்களை தனது இல்லத்திலேயே வளர்த்து அவர்களை படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்வடையச் செய்தார்.
நேரிடையாக தேவரிடம் மோதி வெற்றி பெற முடியாத காங்கிரஸ் கட்சித்தலைவர்கள்... மறைமுகமாக தேவரவர்களைப் பழிதீர்த்துகொண்டார்கள். 1957 ல முதுகுளத்தூர் கலவரத்தை வெகு நேர்த்தியாக திட்டமி்ட்டு உயிர் சேதங்களை மட்டுமல்ல இன்றுவரைக்கும் தலித்துகளுக்கும் தேவரினத்துக்கும் குரோதத்தை மூட்டிவிட்டு மன ஊனங்களை ஏற்படுத்திய பெருமை காங்கிரஸாரையே சாரும். விரும்பத்தகாத அந்த சம்பவத்தால் மனம் நொந்த தேவரவர்கள் "பரம்பரை பரம்பரையாக அரிசனங்களும், தேவர்களும் தோளோடு தோள் இணைந்தவர்கள். அவர்களைத்தாக்குவதும் துன்புறுத்துவதும் என் ரத்தத்தைச் " "அரிசன மக்கள் என் சகோதரர்கள் அவர்களைத்தாக்காதீர்கள். அவர்களைத்தாக்க வேண்டுமென்று நினைத்தால் முதலில் என்னைக் கொன்று விட்டு அப்புறம் அவர்களிடம் போங்கள்" என்று 10.09.1957 பொதுக்கூட்டத்தில் உரைத்தார். தேவரவர்கள் அனைத்து வகுப்பினருக்கும் பா.பிளாக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்; தலித் களுக்கும் பொறுப்புக்களையும்,எம்.எல்.ஏ., போன்ற பதவிகளையும் கொடுத்திருந்தார் "எனக்கு வகுப்புவாதி என்று பெயரிட்டுப் பார்த்தார்கள். நான் எல்லோருக்கும் பொதுவான தேசிய வாதியாக இல்லாமல் வெறும் வகுப்புவாதியாக மட்டும் இருந்திருந்தால் நான் தேர்தலில் ஜெயித்திருக்கவே முடியாது. ஏனெனில் என் தொகுதியில் 18 ஆயிரம்பேர்தான் நான் சார்ந்துள்ள வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் நான் இரண்டு லட்சம் ஓட்டுக்களுக்கும் மேல் ஒவ்வொருதடவையும் வாங்குகிறேன்"
மனம் நொந்து, விரக்தியாகி வாழ் நாளின் கடைசி பொதுக் கூட்டத்தில் பேசும்போது தேவரவர்கள் ஆற்றிய சோக உரை இது.
இம்மானுவேல் கொலை வழக்கில் கடுமையாக அலைக்கழிக்கப் பட்டு... இறுதியில் குற்றவாளியில்லையென விடுதலை செய்யப் பட்டார். ஒரு எம்.பி -ஐ, ஒரு தேசியத்தலைவரை, விடுதலைப் போராட்ட வீரரை, ஆங்கிலத்திலும் தமி்ழிலும் சரளமாகச் சொற்பழிவு நிகழ்த்துகின்ற அபூர்வத் தலைவரை....... குற்றவாளி இல்லையெனச் சொல்ல எடுத்துக்கொண்ட காலங்களில் திட்டமி்ட்டே அவரது உடல் நலத்தைச் சீர்குலைத்து... துன்பத்தைக் கொடுத்து.. இறுதியில் மரணத்தையும் கொடுத்தார்கள்
இம்மானுவேல் கொலைவழக்கில் அவரது மைத்துனரும், பரமக்குடி தேவேந்திர குல் வேளாளர் பண்பாட்டு மையத்தின் தலைவர் ஜி.பாலச் சந்திரன் கூறுகிறார் "தேவர் சட்ட மன்றத்திலும், தனது சொந்த வீட்டிலும் பள்ளர் இன மக்களை சமமாகப் பாவித்து நானே நேரில் பார்த்துள்ளேன். மறவர், பள்ளர் இடையே நல்லுறவை வளர்த்தவர் தேவர். அவர் இம்மானுவேல் கொலைக்கும் காரணமாக இருந்தார் என்பதில் நம்புவதிற்கில்லை" தேவரவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டதும் : 1962 ல் நடந்த அருப்புக்கோட்டை பாராளுமன்றத்தேர்தலிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலிலும் அமோக வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றார். அமோக வாக்குகள் தலித் மக்களேல்லொரும் சேர்ந்தளித்த வாக்கு ....... அவர் மேலிருந்த கலங்கம் துடைக்கப் பட்டது
ஆனால் அவரது உயிரையுமல்லவா எடுத்துக்கொண்டுபோய் விட்டது 55 வயதிலேயே

said...

thevar ayya
தலித் மக்களுக்கான ஆலயப் பிரவேசம் நடத்த ராஜாஜி மந்திரிசபை சுதந்திரப் போராட்டவீரர் வைத்திய நாதய்யர் வழியாக முயன்றபோது, வெளியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

செய்வதறியாது திகைத்துப் போயிருந்த அய்யரவர்களுக்கு"தேவரை அணுகுங்கள்" என்கிற ஆலோசனை ராஜாஜியிடமி்ருந்து கிடைத்தது.

அப்பொழுது தேவரவர்களுக்கும் ராஜஜிக்கும் அரசியல் ரீதியாக முரண்பட்டு இருந்தாலும், இக்காரியத்தில் தேரரவர்கள் உதவ முன் வந்தார்.

"உங்களின் எதிர்ப்பைக் கைவிடாமல் மேலும் கெடுதல் செய்தால் நானே பல்லாயிரக்கணக்கான ஹரிசனங்களையும் மற்றுமுள்ளவர்களையும் படையாகத் திரட்டி தமி்ழகம் முழுக்க ஆலயப் பிரவேசம் செய்வேன்" - என்று சானாதனிகளைப் பார்த்து தேவரவர்கள் கடுமையாக எச்சரித்ததும் சானாதனிகள் பணிந்தனர்.

இதனைத் தேவரவர்களே தமி்ழக சட்டமன்றத்திலும் தனது சொற்பொழிவில் தெரிவித்திருக்கிறார்

1952 ல் மீண்டும் ராஜாஜி மந்திரிசபை அமைந்தபோது "குலக் கல்வித்திட்டம்" என்ற வர்ணாஸ்ரம அடிப்படையிலான திட்டம் கொண்டுவந்தபோது இதை வன்மையாக எதிர்த்து இவ்வாறு கூறினார்"ராஜாஜி கொண்டு வந்த ஆலயப் பிரவேசத்தை முன்பு ஆதரித்த நாங்கள், குலக்கல்வியை எதிர்க்கிறோம்" என்று தலித்களுக்காகக் குரல் கொடுத்தார்

மேலும் அதே சபையில் பலமுறை பேசும் போதும் குலக் கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்

"தகப்பன் தொழிலை மகன் செய்யத்தான் வேண்டும் மென்ர ஒரு சூழ்னிலை ஒரு சமுதாய அமைப்பு கல்வி முறை முன்பு இருந்ததது. அதை நான் மறுக்க வில்லை. ஆனால் இன்றைக்கு எந்த ஜாதியில் பிறந்தவனாக இருந்தாலும் கூட, தன்னுடைய திறமைக்கேற்ப எந்தத்தொழிலையும் செய்யலாமென்ற ஒரு சூழ் நிலை ஏற்பட்டுவிட்டது என்பது கணம் முதலமச்சரப் போன்ற அறிவாளிக்குத் தெரியாமலிருக்க முடியாது"

தாழ்த்தப் பட்டவர்களும், ஆதி திராவிடர்களும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமடைய கல்வி மி்க முக்கியம் என உரைத்தார்"ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள பள்ளியில் மற்றொரு சாதி மாணவருக்கு இடம் கிடைக்காத நிலையா" என் மனம் நொந்தார்.

சமுதாயத்தில் தாழ்த்தப் பட்ட நிலையில் உள்ளோர் தங்கள் தொழிலை தூக்கி எறிந்து விட்டு வாழ்க்கையின் முன்னேற்றமான தொழிலை செய்து பொருளாதார வசதிகளை பெருக்கி அதன் மூலம் தங்கள் குழந்தைளின் கல்வி வளர்ச்சியில் கவனம் அதிகம் பெற வேண்டும்-என்ற கேட்டுக்கொண்டார்.

பெரும் பணக்காரர்களே நிலங்களை வாங்கி குவித்து கொண்டிருப்பதை அறிந்து ஏழை மக்களும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு நிலங்களைப் பகிர்ந்து கொடுங்கள். அவர்களை சொந்த நிலமுள்ள விவசாயிகளாக ஆக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். தாங்களும் மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலை வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தாழ்த்தப் பட்டவர்களுக்காகக் கட்டப் படும் குடியிருப்புகள் ஊரை விட்டு தொலைவிலில்லாமல் ஊருக்குள்ளேயே கட்டவெண்டுமென்றார்.

பஸ்ஸிலோ, ரயிலிலோ சம அந்தஸ்த்தோடு பயணம் செய்ய வேண்டும்; மக்களோடு மக்களாக இணைந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

பெரும்பாலான நிலங்கள் வீணாகக் கிடக்கின்றன. அந்த பெரும்பாலான நிலங்களை தர்காஸ்து கொடுக்கிறபோது பழைய அரசாங்கத்தின் பழக்கப்படியே உயர்ந்தவர்கள், வேண்டியவர்கள் என்பவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறதே தவிர, அந்த ஏழைகளுக்கு ஏன் சலுகை காட்டவில்லை...

பெரும்பாலான ஹரிசனங்கள் உழுதுகொண்டே வாழ்வோர்களாக சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கை கட்டி வாழ்கிற இழிவான நிலைமையிலிருந்து மாறி ஹரிசனங்கள் நல்ல விவசாயிகளாவார்கள். அந்த முறையில் ஹரிசனப் பிரச்சினையை 60% செளகரியமாகத் தீர்க்கலாம்"

மதுரையில் ஹரிஜனங்களுக்கு என்று ஒரு விடுதியை அரசு கட்டியது, அது ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாகக் கட்டினார்கள் இதனை தேவர் விமர்சித்தார்:

"அது நகரத்தின் மத்தியில் இருந்திருக்குமானால் பல ஹரிஜனங்கள் வந்து தங்கவோ, அவர்கள் இதர சமூகத்தோடு பழகவோ வசதியளிக்கும்" என்றார

said...

தேவர் வாழ்க ! தேவரை பற்றி பேச தகுதி வேண்டும் முதலில். தென்னாட்டு போஸ் , பசும்பொன் தங்கம், இவை மக்களால் தேவருக்கு கொடுக்கப்பட்ட பட்டங்கள் .

said...

தமிழ்நாட்டில் 4கோடி மக்கள் மனதில் தெய்வமாக வாழ்ந்துகொண்டிருக்கும் தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை இது போன்ற சில தரங்கெட்ட நாய்கள் அவரை பேசுவதால் அவர் புகழ் மறையாது





said...

4கோடி மக்கள் மனதில் தெய்வமாக வாழ்ந்துகொண்டிருக்கும் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை இது போன்ற சில தரங்கெட்ட நாய்கள் அவரை தவறாக பேசினால் அவர் புகழ் மறையாது

said...

தரங்கெட்ட நாய்களின்
தரமில்லா பேச்சு

said...

தரங்கெட்ட நாய்களின் தரமில்லா பேச்சு

said...

தரங்கெட்ட நாய்களின் தரமில்லா பேச்சு

said...

தரங்கெட்ட நாய்களின் தரமில்லா பேச்சு

said...

மிகச்சரியான சரியான காலகட்டத்தில் எழுதப்பட்ட பயனுள்ள கட்டுரை.தேசியத்தலைவர் என்றும் தெய்வீக தலைவர் என்று பொய்பிம்பங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தேவர் என்னும் ஆளுமை, சாதி வெறியன் மற்றும் பார்ப்பன பிரச்சார பிற்போக்கு வாதி என கூழாங்கற்களாக சரிந்து அம்பலப்பட்டு நிற்கிறார்.இது சாதி ஆதிக்கவாதிகளின் அரசியலுக்கு வைக்கப்பட்ட நல்ல ஆப்பு!

said...

தேசியவாதி என்றும் தெயவீகவாதி என்றும் பொய்பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட முத்துராமலிங்கத்த்திண் முகத்திரை இப்பதிவு மூலம் முற்றமுழுக்க அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சாதி வெறியினை மூலதனமாக்கி அரசியல் நடத்தும் ஆதிக்கவாதிகளின் அடித்தளம் தகர்க்கப்பட போலி ஆளுமைகள் குறித்த இன்னும் பல பதிவுகள் காலத்தின் அவசியம்.நன்றி்

said...

சரியான பதிவு.தொடர்ந்து அம்பலப்பட்ட்டும் சாதிவெறியன் முத்துராமலிங்கத்தின் பொய்முகங்கள்.

said...

சரியான பதிவு. தொடர்ந்து அம்பலப்பட்ட்டும் சாதி ஆதிக்க வெறியன் முத்துராமலிங்கத்தின் பொய்முகங்கள் !

said...

dai punda magane unna adipenda.. thevara pathi evan thappa pesinalum uyir irukathuda.

said...

muthuramalingam , kamarajar. imanuvel sekar, innum silla thalaivargal pondravargalai kadavulaga parkamal manitharaga parungal.. apputhu ellam sari agum.. tavaru seyaatha manidhal ullagil yaarum illai .. athu muthuramalingam , kamarajar. imanuvel sekar yaraga irunthalum sari.. athae nerathil avargal setha nanmaiyayum nan mathikka vendum...

said...

muthuramalingam , kamarajar. imanuvel sekar, innum silla thalaivargal pondravargalai kadavulaga(illatha ondraga) parkamal manithanaga parungal .. appothu than thelivu pirakum.. thavaru seyyatha manithargal yaarum illai.. neengalum seri naanum seri yallorum thavaru sekendravargal than.. but muthuramalingam , kamarajar. imanuvel sekar, pondravargal setha nanmaiyaiyum konjam nenaithu pathu pesa vendum.. devarai 9 endru sollavarukirar oruvar.. antha varthaiyel thirunagaigalai keli seyum ungal aanmaiyen thimir therigirathu..

Related Posts with Thumbnails