tag:blogger.com,1999:blog-28837873.post7921741672492246548..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-28837873.post-6815487740795643192007-05-22T22:43:00.000-07:002007-05-22T22:43:00.000-07:00சும்மா....சும்மா....அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-38277400923317932232007-05-15T05:34:00.000-07:002007-05-15T05:34:00.000-07:00TPRJoseph என்பவரின் தளத்தில் நான் இட்ட பின்னூட்டங்...TPRJoseph என்பவரின் தளத்தில் நான் இட்ட பின்னூட்டங்கள்:<BR/><BR/>///<BR/>//வாங்க முத்துக்குமரன்,<BR/><BR/><BR/>எதிர்ப்பு குரல்கள் சிலருக்கு எப்போதும் தமாசாகத்தான் இருக்கும் கொஞ்சம் மேலே ஏறிய பின். //<BR/><BR/>அப்படியா? ஏன் நேரடியாவே சொல்லுங்களேன்.. ஏன்னா நா மேஏஏஏஏல போயாச்சி... பாங்குல ஒரு கோடி பாலன்ஸ் இருக்கு..<BR/><BR/>அதனாலதான் ரோட்டடீர காய்கறி கடைகள்ல வாங்காம ரிலையன்ஸ் கடைக்கு போறேன்...<BR/><BR/>அதனால எனக்கு இது தமாஷாத்தான் தெரியுது....அப்படீன்னு சொல்லுங்க...////<BR/><BR/>அதுதான் உண்மை என்பது போல தெரிகிறது. ஏனேனில் தண்ணீர் தனியார்மயம் குறித்து முத்துக்குமரன் எழுப்பிய கேள்விக்கு உங்களது பதில் எனக்கென்ன வந்தது என்பது போலத்தான் உள்ளது. <BR/><BR/>//குடிநீரை விலைகொடுத்து வாங்குவதைப் பற்றி கூறுகிறீர்கள். இன்று தமிழகத்தில் தினம் ஒன்றுக்கு ரூ.20 கொடுத்து குடிநீர் கேன் வாங்குபவர்கள் எத்தனை சதவிகிதம் பேர் என்று நினைக்கிறீர்கள்? எல்லோரும் காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தால் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் கூட சப்ளை செய்ய முடியாது...//<BR/><BR/>தண்ணீர் தனியார் ஆனால் விலை கொடுத்த வாங்க இயலுபவ்ர்களுக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்றாகிப் போகும். இதோ இந்தியா சீனாவில் நல்ல தண்ணீர் கிடைப்பவரின் சதவீதம் படு பாதளத்திற்க்கு குறைந்துள்ளது. <BR/><BR/>அவர்கள் நாளை தனியார் த்ண்ணீர் இறைப்பு நிலையங்களை தாக்கும் போதோ அல்லது அதனை எதிர்த்து போராடும் போதோ இதே போல நீங்கள் பதிவெழுதுவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதாவது இவர்கள் இங்கு வியாபாரம் செய்ய உரிமை உள்ளது என்று.<BR/><BR/><BR/>//<BR/>இந்த போக்கை அனுமதித்தால் நாளை மொத்த வியாபாரிகள் எல்லோருமே சில்லறை வியாபாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள்தான் ஆகவே அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நிலைவந்தால் என்னாவது?//<BR/><BR/>இது உங்க கற்பனைதான். அப்படியெனில் நீங்கள் மொத்த வியாபாரிகளின் ஆதரவாளரா என்று என்னால் கேட்க்க முடியும். இன்று வாழ்க்கை பறிபோகும் பெரும்பான்மை சிறுவியாபாரிகள் போராடினால் அதற்க்கு பதில் சொல்ல வக்கின்றி இப்படி சப்பை கட்டு கட்டுவது நேர்மையானது அல்ல. மேலும் இந்திய மொத்த வியாபாரிகளுக்கும் ரிலையன்ஸ் பாணி தரகு பன்னாட்டு மூலதனத்துக்கும் வேறுபாடு உள்ளது.<BR/><BR/>மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் காவு வாங்கும் திட்டங்களீன் ஒரு அம்சமாக சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிப்பது உள்ளது. இந்த் போக்கை அனுமதித்தால் என்ற எச்சரிக்கை உண்மையில் இந்த அம்சத்தை முன்னிட்டே வந்திருக்க வேண்டும். ஆயினும் உங்களது வர்க்க இயல்பு போராடும் மக்களை குறித்து எச்சரிக்க வைக்கிறது. <BR/><BR/>ராஞ்சி ரிலையன்ஸ் கடைகள் உடைக்கப்பட்டதில் எந்த பமகா அரசியல் செய்தது என்பதையும் கண்டுபிடித்த் தருவார் tpr <BR/><BR/>ஒரு பிரச்சனை நடக்கிறது எனும் பொழுது அதில் எந்த பக்கத்தை எழுதுகிறீர்கள் என்பதுதான் உங்களது அரசியல் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள உதவுகிறது.<BR/><BR/>ஓட்டுக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை எழுதிய நீங்கள் உண்மையிலேயே ரிலையன்ஸ் எதிர்ப்பில் உள்ள நியாயத்தையும் எழுதியிருக்கலாம். <BR/><BR/><BR/>//ஆத்மசுத்தியோடு நாம் தவறு என்று கருதுவதை எதிர்த்து மட்டுமே போராடவேண்டும். ரிலையன்சோ அல்லது வேறெந்த இந்திய நிறுவனமோ ஒரு தொழிலிலோ அல்லது வணிகத்திலோ ஈடுபடுவதை நம்மால் தடுக்க முடியாது... தடுக்கவும் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து... <BR/>//<BR/><BR/>அது என்ன ஆத்ம சுத்தியோடு தவறு? உஙக்ளுக்கு தவறு என்று ஏற்புடைய தவறா? அதாவது சென்னையை அசிங்கப்படுத்தும் சேரிவாழ் மக்களின் தவறு என்பது போல, நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யும் கோடிஸ்வர ந்டைப்பாதைக் கடைக்காரர்களின் தவறு என்பது போல...(ஒரு எ-காதான்)<BR/><BR/>அது என்ன இந்திய நிறுவனம்? அமெரிக்க பெப்ஸ்யின் CEO ஒரு இந்திய பெண். அது ஒரு இந்திய நிறுவனமா?<BR/><BR/>இந்திய தேசிய முதலாளியோ அல்லது சிறு வியாபாரியோ வணிகத்தில் வாழ்வதை நீங்கள் சொல்லும் மேற்ப்படி தரகு பன்னாட்டு மூலதனங்கள் தடுக்கிறதே? அது குறித்து TPRன் கலகக் குரலை எங்குமே கேட்க்க இயலவில்லையே? <BR/><BR/>அசுரன்<BR/><BR/>**************8<BR/><BR/>//இது விஷயமா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சார். பாதிப்பு இருக்கவே இருக்காதுன்னு உறுதியா சொல்ல முடியலை. கண்டிப்பா பாதிப்புன்னும் உறுதியாச் சொல்ல முடியலை. புட்வேர்ல்டு கடைகள் ஊர் முழுக்க இருக்க. அதுலயே காய்கறிகளும் கிடைச்சிக்கிட்டுதான் இருந்தது. இப்ப காய்கறிக்குன்னு தனிக்கடை.<BR/><BR/>ஆனா ஒன்னு. மக்களுக்கு எத எங்க வாங்குறது நல்லதுன்னு தெரிஞ்சிருக்கு. குறிப்பா பெண்களுக்கு. சகோதரியோட ரிலையன்ஸ் கடைக்குப் போயிருந்தேன். சென்னையில. அங்க காய்கறிகள் அது இதுன்னு வாங்குனா. அப்ப மருமகன் பலாப்பழம் வேணும்னு கேட்டதாச் சொன்னா. நானும் ஒரு பாலாப்பழப் பாக்கெட்டைப் பையில போட்டேன். அத அவ எடுத்து வெளிய வெச்சுட்டு. இத வெளிய வாங்கனும். அங்கதான் வெலையும் குறைச்சலா இருக்கும்னு சொன்னா. நானும் சரீன்னு கேட்டுக்கிட்டேன். எது எப்படியோ! எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி. <BR/>//<BR/><BR/><BR/>// எது எப்படியோ! எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி.//<BR/><BR/>இந்த எல்லாரும்கிறதுல யாரெல்லாம் வராங்க? ரிலையன்ஸ் அம்பானிக்கு இதில் இடம் உண்டா? ரிலையன்ஸால் நால்லாயில்லாமல் போகும் ஒரு பெரும் கூட்டம் குறித்து உங்களது கருத்து என்ன? ஓ... ஒரு வேளை உங்களது கவலையெல்லாம் உங்கள் அக்காவினுடைய மருமகனுக்கு விலை குறைவாக ஆனால் தரமான பொருள் கிடைப்பது குறித்துதானா? <BR/><BR/>நல்ல பிழைப்புவாதம். ஏன் ராகவன் அடுத்தவங்க பிரச்சனை குறித்து நமது இன்றைய நாகரீக வாழ்விற்க்காக உழைத்து ஓடாய் தேய்பவர்கள் குறித்தேல்லாம் யோசிப்பீர்களா?<BR/><BR/>இவையெல்லாம் கேள்விகள்தான்<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-33277641370855248602007-04-30T08:11:00.000-07:002007-04-30T08:11:00.000-07:00நாகர்கோவிலில் விவசாயிகளும் வியாபாரிகளும் இணைந்து அ...நாகர்கோவிலில் விவசாயிகளும் வியாபாரிகளும் இணைந்து <BR/>அட்டகாசமான குளிர்பதனமூட்டப்பட்ட மார்க்கெட் கட்டியிருக்கிறார்கள்.<BR/>இந்த வார விகடனில் பார்க்கவும். ஆதிக்கம் இல்லாத ப்ரெஷ் <BR/>காய்கறி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-82972197338390454892007-04-30T07:55:00.000-07:002007-04-30T07:55:00.000-07:00santhosh's article on Retail Businesshttp://santho...santhosh's article on Retail Business<BR/><BR/>http://santhoshpakkangal.blogspot.com/2007/03/170.html<BR/><BR/>http://santhoshpakkangal.blogspot.com/2007/03/164.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-48452614641544118212007-04-30T02:34:00.000-07:002007-04-30T02:34:00.000-07:00//கண்கூடான உண்மை.. ஆனால், இன்னும் இந்த அல்பைகள் இத...//கண்கூடான உண்மை.. ஆனால், இன்னும் இந்த அல்பைகள் இதை உணராமல் இருப்பது தான் வேதனை.//<BR/><BR/>அல்பைகளை தோழி லிவிங் ஸ்மைலும் புரிந்து கொள்கிறார் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் குறிப்பாக அழகி பட விமர்சனம் குறித்த டாலர் செல்வனின் கட்டுரையில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டம் பல பக்க கட்டுரையால் செய்ய இயலாத விமர்சனத்தை செய்துவிட்டது. அல்பைகளை நன்கு புரிந்து கொண்டதனாலேயே அது போன்ற நறுக்குத் தெறித்தாற் போன்ற விமர்சனத்தை தங்களால் செய்ய முடிந்தது என்று கருதுகிறேன். <BR/><BR/>பின்னே, சமூகத்தின் வன்முறையை அதன் முழுமையான வடிவத்தில் அனுபவித்த உங்களிடம்தான் அல்பைகள் பற்றிய பாரிய புரிதல் இருக்க சாத்தியமுண்டு, எமது புரிதல்களில் குறிப்பிடத்தகுந்த பகுதி புத்தக அறிவாக இருக்கும் போது, உங்களது புரிதல் நடைமுறை அனுபவம் சார்ந்ததாக இருப்பதாலேயே வெகு சில வரிகளில் அல்பைகளை தூசு போல துடைத்தெறிந்து விட்டீர்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள் தோழி லிவிங் ஸ்மைல்,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-20828109599847448542007-04-30T02:25:00.000-07:002007-04-30T02:25:00.000-07:00கருணாநிதியின் அரிசியும், ஹிட்லரின் ரொட்டித் துண்டு...கருணாநிதியின் அரிசியும், ஹிட்லரின் ரொட்டித் துண்டும் 'சிறுவணிகத்தை அழிக்கும் ரிலையன்ஸ் ·ப்ரஸ்'<BR/>http://poarmurasu.blogspot.com/2007/04/blog-post_30.html<BR/><BR/>இன்று நீதிமன்றம் இடஒதுக்கீடுக்கு தடை என்று உத்தரவு பிறப்பித்தவுடன் "அது சமுக நீதிக்கு எதிரானது" என்றும், "நீதிமன்றத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் இல்லை" என்றும் கூறி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து பந்த் நடத்தினார் கலைஞர். ரிலையன்ஸ் கடைதிறப்பதால் பாதிக்கப்படும் சிறு காய்கறிகடைகாரர்களும், சிறு வணிகர்களும் போராட்டம் நடத்தும் போது அதே சமூக நீதி அமைதி காக்கிறது.<BR/><BR/>இடஒதுக்கீட்டுக்குத் தடை என்றால் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமுகநீதி பேசும் இவர்கள், ரிலையன்ஸ் பிரஷ் வருவதால் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் என்று தெரிந்தும் உயர் ஜாதி பனியாவான அம்பானியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.<BR/><BR/>இன்று ரிலையன்ஸ் செல்போனில் 24 மணி நேரமும் சன் டி.வியை கண்டுகளிக்கலாம் என்று விளம்பரம் செய்கிறான், இதனை சிவப்பு கம்பளத்தோடு சேர்த்து பார்க்கும் போது அம்பானிக்குள் கலைஞரும் அடக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா?<BR/><BR/>14..... 24....ரிலையன்ஸ் கடைகள் திறப்பு...கோயம்பேட்டில் 40% வியாபாரம் பாதிப்பு, சிறு காய்கறிகடைகாரர்களும், சிறு வணிகர்களும் போராட்டம், கடையடைப்பு என தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கும் போது கலைஞர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?<BR/><BR/>பா.விஜய் எழுதிய நூல் வெளியீட்டுக்கு சென்று கொண்டும் (இந்த வித்தக கவிஞர்தான் 'சின்ன விடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா' என்று பாடல் எழுதியவர்), அம்மாவின் கருத்து மிக்க விமர்சன அறிக்கைகளுக்கு பதில் அறிக்கை எழுதிக்கொண்டும் இருக்கிறார்.<BR/><BR/>மற்றபடி ரிலையன்ஸால் பாதிப்பு இல்லை என்று குங்குமத்தில் எழுதிக்கொண்டு வருகிறார்கள். ரிலையன்ஸ் பிரஷ்-ஆல் எந்த பாதிப்புமில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்களே, அவனை ஏன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டால் பதில் இல்லை...<BR/>சரி இந்த விஷயத்தில் மற்ற தலைவர்களை பார்த்தால், பல லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் எதிர்கட்சியான அம்மா.. போராட்டம் நடக்க ஆரம்பித்தவுடன் ரிலையன்ஸை எதிர்த்து அறிக்கை விட்டார். இப்ப உத்திரபிரதேசத்திற்கு சென்று அம்பானியின் கூட்டாளியான முலாயம் சிங்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். இவர் இங்கு அம்பானியின் ரிலையன்ஸை எதிர்ப்பார், மேடை போட்டுப் பேசுவார் என்று எதிர் பார்க்க முடியுமா? அப்படி யோசிப்பதற்குத்தான் என்ன அடிப்படை உள்ளது?<BR/><BR/>அடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். இன்று ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.<BR/><BR/>இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே? <BR/><BR/>அடுத்து சொல்லில் மட்டும் மார்க்சியம் பேசும் சி.பி.எம் யின் DYFI..இன்று மாநாட்டு கோஷங்களுடன் சேர்த்து ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்தும் சுவரொட்டி எழுதி வருகின்றனர். இதை விட மோசடி இருக்க முடியாது. ஏனெனில் இவர்கள் ஆட்சியின் இருக்கும் மேற்கு வங்காளத்தில் தான் ரிலையன்ஸின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது. டாட்டா, சலிம் நிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களை பறி கொடுத்துவிட்டுப் போராடும் மக்களைச் சுட்டு கொன்றும் , ஒடுக்கியும் வருகிறது, சிபிஎம் அரசு. இதே ரிலையன்ஸ் பிரஷ்க்கு கூட அனுமதி வழங்க புத்ததேவ் பட்டாச்சாரியா தயாராகி விட்டார்.ஆனால் DYFI இங்கு ரிலையன்ஸை எதிர்க்கின்றனர்.<BR/><BR/>மற்றொரு தலைவர் திருமா.. இவர் எல்லாரையும் விட மிக அறிவுடன் ரிலையன்ஸால் பாதிப்பே இல்லை என்று சொல்லி விட்டார். இவர் கட்சியின் சங்கம் தான் கோயம்பேட்டில் பெரியது. கோயம்பேட்டில் மூட்டை தூக்கி , கூறு போட்டு காய்கறி வாங்கி விற்பனை செய்யும் தலித் மக்கள் தாங்கள் பாதிக்கப் படுவதாகச் சொல்லிப் போராடுகின்றனர். ஆனால் இந்த 'வாழும் அம்பேத்கர்' பாதிப்பு இல்லை என்கிறார்.<BR/><BR/>இன்று சட்டசபையின் ரிலையன்ஸ் பிரஷ் பற்றி இவர்களின் எவரும் வாய்திறப்பதில்லை. இதிலிருந்தே இவர்கள் அனைவருக்கும் அம்பானிக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை அறியலாம். <BR/><BR/>கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மக்கள் போராட்டங்களை நாம் திரும்பிப் பார்ப்போமானால் அவை 'வேலைகொடு' என்றோ, 'சோறு போடு' என்றோ, 'கல்வி, மருத்துவமனை வேண்டும்' என்றோ இருப்பதை விட 'எங்களை வாழவிடு' என்றுதான் இருக்கிறது. <BR/>கடந்த மாதம் நந்திகிராமத்தில் மக்கள் தங்களது உயிராதாரமான நிலத்தைப் பன்னாட்டுக் கம்பெனியின் லாபத்திற்காகக் கொடுக்க முடியாது என்று போராடினார்கள். அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கு முன்பு, கலிங்க நகர் பழங்குடி மக்களின் வாழ்விடமான, கனிமவளம் மிக்க காடுகளை டாட்டாவுக்கு விற்பதை எதிர்த்துப் போராடிய பழங்குடிமக்களைச் சுட்டு வீழ்த்தினர். அதற்கு முன்பு டெல்லி விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுப்பதை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் போராடினார்கள். ஆனால் அவர்களது போராட்டமும் வீணாகி டெல்லி விமான நிலையம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, இன்று சென்னை விமான நிலையத்தையும் தனியாருக்கு விற்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. <BR/><BR/>வீட்டைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து விட்டுக் கடைசியில் அந்த வீட்டுப் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியைக் குறிவைத்துப் பறிக்கும் போது அப்பெண் "இதைமட்டுமாவது விட்டுவிடு" என்று கதறுவதைப் போலத்தான், 'எல்லாவற்றையும் கொள்ளையடித்தாய் பொறுத்துக்கொண்டோம் ஆனால் இன்றைக்கு எங்களை உயிர்வாழக்கூட விடாமல் தாலியறுக்கிறாயேடா நாயே!' என்று மக்கள் போராடுகிறார்கள்.<BR/><BR/>இப்படி அரசாங்கம் - தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத் தான் செயல்படுகிறது என்பதனை மறைக்கத்தான் மக்களுக்கு 'இரண்டு ரூபாய்க்கு அரிசி', 'இலவச டி.வி' என்று கலைஞர் வழங்குகிறார். இது கூட இவர்கள் கண்டுபிடித்தது அல்ல.அன்று ஜெர்மனியில் நாஜிக்கட்சி தொடர்ந்து மக்களுக்கு எதிராக அடக்குமுறை செலுத்தி வரும் போது மக்கள் நமக்கு எதிராக போராட மாட்டார்களா என்று கட்சிக்குள்ளே ஒரு விவாதம் வந்த போது ஹிட்லர் கூறினான் ' மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும் , சர்க்கஸ் மட்டுமே' என்று. அதைத்தான் இன்று மக்களுக்கு ரொட்டித் துண்டுக்குப் பதிலாக 2 ரூபாய் அரிசியும், சர்க்கஸ¤க்குப் பதிலாக கலர் டி.வி யும் வழங்குகிறார் கலைஞர்.<BR/><BR/>இன்றைக்குக் காசு இருந்தால் மட்டுமே நல்ல கல்வி பெற முடியும். இல்லையென்றால் கூலி வேலைக்குத்தான் போகவேண்டும். பணவசதியிருந்தால் மட்டுமே அப்பல்லோவுக்குப் போய் மருத்துவம் பார்க்க முடியும். இல்லையென்றால் அரசு மருத்துவமனைக்குப் போய் இன்னும் பல வியாதிகளை வாங்க வேண்டும். என்று பணம் இருத்தால்தான் உயிர்வாழலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இப்படி மக்களைப் பற்றி எந்தக் கவலையுமின்றி இந்த அரசு இருக்கையில் மக்களாகப் பார்த்து தாங்கள் உயிர் வாழத் தானாகக் கையை ஊன்றிக் கரணம் போட்டு, 5 வட்டி 10 வட்டிக்குக் கடன் வாங்கி, ஒரு சிறு தள்ளுவண்டி, தரைக்கடை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கும் ஆப்பு வைக்க அம்பானியைக் கொண்டு வருகின்றனர். <BR/>இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு எல்லா முயற்சிகளும் செய்து விட்டுக் கடைசியில் வேறு வழியின்றி விவசாய நிலத்தை, குடியிருந்த வீட்டை விற்றுப் பணம் கொண்டுவந்து ஒரு சிறு மளிகைக் கடை நடத்தி எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்று நம்பி இருக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட வந்தது 'ரிலையன்ஸ் பிரஷ்'<BR/><BR/>'போட்டி போடு' என்று வாதாடும் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கும் இவர்கள்தான், 250 ரூபாய் காய்கறி கடை வைத்துப் பிழைக்கும் ஒரு பெண்னை , 25,000 கோடி போட்டு தொழில் நடத்தும் அம்பானியுடன் போட்டு போடச் சொல்கிறார்கள்.<BR/><BR/>ரிலையன்ஸ் பிரஷ்ஷால் நன்மை என்ன? என்று கேட்டால் , வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார் ப சிதம்பரம். சரி. எத்தனை பேருக்கு? புதிதாக வேலை வாய்ப்பை அம்பானி உருவாக்குகிறானா என்றால் அது இல்லை. இருக்கின்ற 18 லட்சம் சிறுகாய்கறி ,சிறு மளிகைக் கடை வியாபாரிகளின் வேலையைப் பறித்து விட்டு வெறும் ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை தருவானாம். இந்த அயோக்கியத்தனத்தைத் தைரியமாக இந்த ஏகாதிபத்திய அடிமை கூறுகிறது.<BR/><BR/>இத்தகையதொரு தனியார்மயம், தாராளாமயம் , உலகமய நடவடிக்கை தான் அனைத்துத் துறைகளில் முழு வீச்சாக இந்த ஆளும் வர்க்க அடிமைகளால் தினத்தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தான் நாடு மறுகாலனியாக்கத்துக்கு உட்பட்டு வருகிறது என்று நாம் சொல்கிறோம்.<BR/>இன்று நாட் டில் இருப்பது இரண்டே அணிகள் தான். <BR/><BR/>ஒன்று அம்பானி, டாடா , வால்மார்ட் போன்ற பன்னாட்டு,தரகு முதலாளிகள் - அவர்களுக்காக ஏவல் வேலை செய்யும் ஓட்டு கட்சிகள் இவை அனைத்தும் ஒரு அணி.<BR/><BR/>சிறுகாய்கறி ,சிறு மளிகைக் கடை வியாபாரிகள்,தொழிலாளர்கள்,விவசாயிகள், மாணவர்கள், உழைக்கும் மக்கள் ஆகிய நாம் ஒரு அணி.<BR/><BR/>நாமாக ஓரணியில் திரளாவிட்டாலும் அவன் இன்று நம்மை ஓரணியில் திரள வைக்கிறான்.<BR/><BR/>அரசாங்கமே அவன் பின்னால் உள்ளது, அரசாங்கமே முடிவு செய்து விட்டது என்று புலம்புவதால் ஒன்றும் நடக்க போவதில்லை, துணிந்து அவனா , நம்மளா என்று பார்த்து விடுவோம். நம் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குபவனை பார்த்து வேடிக்கை பார்க்க முடியுமா ? போராடுவதைத் தவிர வேறு வழிதான் இருக்க முடியுமா? வாருங்கள், அத்தகையதொரு போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் என்று அழைக்கின்றோம்.<BR/><BR/>(27-4-07 புரசைவாக்கத்தில் தோழர் மருதையன் உரையில் இருந்து தொகுக்கப்பட்டது)அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-91341714897686775692007-04-30T00:13:00.000-07:002007-04-30T00:13:00.000-07:00//முடிவு செய்யுங்கள். சிறு முதலாளிகளின் அங்காடிகள்...//முடிவு செய்யுங்கள். சிறு முதலாளிகளின் அங்காடிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக் கடை அண்ணாச்சிகளிடம் மட்டும்தான் பொருள் வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டுப் பற்றை காட்ட இதை விட சுலபமானதொரு வழி இருப்பது போல தெரியவில்லை. இந்த சின்ன தியாகம்கூட செய்ய தாயாரில்லாத பிழைப்புவாதிகளை அவமானப்படுத்துங்கள். இதில்கூட சுயநலமாக சிந்திக்கும் ஒருவனின் உறவு எந்த காலத்திலும் நமக்கு ஆபத்துதான் என்பதை உணருங்கள்.<BR/>//<BR/><BR/>கட்டுரையின் இந்த வரிகளை மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-85156374548934219122007-04-30T00:10:00.000-07:002007-04-30T00:10:00.000-07:00வாழ்த்துக்களுக்கு நன்றி போன்ஸ்,நட்சத்திர வாரத்தை க...வாழ்த்துக்களுக்கு நன்றி போன்ஸ்,<BR/><BR/>நட்சத்திர வாரத்தை கொஞ்சம் உருப்படியாக பயனபடுத்தும் வேகம் ஒன்றிரண்டு உருப்படியான கட்டுரைகளை என்னிடமிருந்து வெளிக் கொண்டு வந்து விட்டது. <BR/><BR/>கோபாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி,<BR/><BR/><BR/>அரசு பால்ராஜின் வாழ்த்துக்களுக்கு நன்றி,<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-8898359051706671692007-04-27T01:05:00.000-07:002007-04-27T01:05:00.000-07:00நட்சத்திர வார வாழ்த்துக்கள் அசுரன். வழக்கத்தை விடவ...நட்சத்திர வார வாழ்த்துக்கள் அசுரன். வழக்கத்தை விடவும் அதிக வேகத்துடன் வெளிப்படுகின்றன நட்சத்திரவாரக் கட்டுரைகள்.. மிகவும் நன்று...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-29133760991394298442007-04-26T21:12:00.000-07:002007-04-26T21:12:00.000-07:00நல்ல அலசல் ....அடிமை புத்திகளையும், அருவருடிகளையும...நல்ல அலசல் ....<BR/>அடிமை புத்திகளையும், அருவருடிகளையும் இனம் காண்கிறது கட்டுரை.<BR/><BR/>நட்சத்திர வாழ்த்துக்கள் அசுரன்!<BR/><BR/><BR/>//"இந்தா பார் விவசாயி, நான் வால்மார்டை உள்ளே நுழைய விட்டால் உனக்கு நல்ல விலை கிடைக்கும் ஆனா வியாபாரியின் வாழ்க்கை வம்பாக போய்விடும், அதை நீ கண்டுக்க கூடாது" வேண்டுமென்றே விவசாயத்தை காயப்பொட்டுவிட்டு இப்பொழுது இப்படி பச்சையானதொரு பேரம் பேசுகிறார்கள், சகோதர வர்க்கத்தை விரோதிகளாக்க பார்க்கிறார்கள் இந்த அடிமை வர்க்கத்தினர். இந்த கோஸ்டிகளை தரகு கோஸ்டி என்று சும்மாவா சொல்கிறார்கள்? ஆக, பிரச்சனையின் மூல காரணமான நாட்டமை ஏகாதிபத்தியத்தை திரை மறைவில் மறைத்துவிட்டு பண்ணையடிமைகளான விவசாயிக்கும், வியாபாரிக்கும் முரன்பாட்டை உருவாக்குவதன் மூலம் ரிலையன்ஸ்க்கு புனித வட்டம் கட்ட இங்கு சில அடிமைகள் அலைகிறார்கள்.//<BR/><BR/>//கோழி குருடாய் இருந்தால் என்ன குழம்பு ருசியாய் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று பிழைப்புவாதம் பேசி அண்ணாச்சிகளின் ரத்த கறைபட்ட பலசரக்கு சாமான்களை வாங்கி தின்னத் தயாரான அடிமைகள் குறித்து ஒன்றும் சொல்வதற்க்கில்லை. சுயமரியாதையும், மனிதாபிமானமும் உள்ளவர்களை நோக்கியே இந்த கட்டுரை பேசுகிறது.<BR/>//கோபாhttps://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-42333386588695931922007-04-26T10:01:00.000-07:002007-04-26T10:01:00.000-07:00//இவர்கள் நுகர்வோர் நுகர்வோர் என்று பேசும் போதெல்ல...//இவர்கள் நுகர்வோர் நுகர்வோர் என்று பேசும் போதெல்லாம் நாம் ஏதோ இந்திய ஜனங்கள் எல்லாத்தையும் சொல்கிறார்கள் என்று நினைத்தால் தவறு செய்கிறோம்.// <BR/>உண்மைதான், இவர்களின் நுகர்வோர்களெல்லாரும் வாங்கும் சக்தியுள்ளவர்கள் மட்டும்தானே! <BR/><BR/>பிரச்சினை, வியாபாரிகளிடம் மட்டுமிருந்தால் சீக்கிரம் திருத்திவிடலாம், புற்றீசலாய், அதிகாரத்திலிருப்பவர்கள் அனைவரும் வியாபாரிகளின் பணத்திற்கு அடிமையாகி நாட்டை மறப்பது தான் பெரும் பிரச்சினை! பலமுனைத் தாக்குதலாய்த் தான் உள்ளது! ஊடகங்களோ பணத்திற்கும் அதிகாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தந்து, அடிக்கட்டு மக்களின் நிலையை திரித்து எழுதுவதும், வியாபாரிகளைத் தாங்கி நிற்பதுவும் பெரும் எதிர்ப்புக்குரியது!<BR/><BR/>அமெரிக்காவில், வால்மார்ட்-ஐ "Main Street Killer" என்றுதான் அழைக்கின்றனர். இருக்குமிடங்களிலெல்லாம், அந்த ஊர் சிறு வணிக வியாபாரிகளை, அவர்களின் தொழிலைவிட்டு அழித்ததுபற்றி கூகுள் செய்தால் உங்களுக்கே தெரியும்! அதைத்தான் இன்று ரிலையன்சும் இந்தியாவில் செய்யத் துவங்கியுள்ளது!<BR/><BR/>அரசாங்கம் என்பது, மக்கள் சக்தி என்பதிலிருந்தும், மக்களின் கேள்விகளுக்கு பொறுப்பானது என்ற நிலையிலிருந்தும், வியாபாரங்களின் செயல் இயந்திரமாக மாற்றப்பட்டு வரும் நிலைதான் மிகவும் வருத்தத்திற்குரியது. இன்று இதை கேள்வி கேட்காமல்விடுவது, நாளைய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நாம் செய்யும் பெருங்கேடாகும்!<BR/><BR/>அசுரனின் முயற்சிகளுக்கும், தொடர் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்!நம்பி.பா.https://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-50877487835802311592007-04-26T06:32:00.000-07:002007-04-26T06:32:00.000-07:00சிரத்தையும், உழைப்பும் மிளிர்கின்றன.உணர்ச்சித் தெற...சிரத்தையும், உழைப்பும் மிளிர்கின்றன.<BR/>உணர்ச்சித் தெறிப்போடு <BR/>வெடிக்கும் வார்த்தைகள்....<BR/>வாழ்த்துக்கள் தோழர்!Arasu Balrajhttps://www.blogger.com/profile/06002794104614017240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-15644387688192660072007-04-26T01:45:00.000-07:002007-04-26T01:45:00.000-07:00ஆழமான கட்டுரை பாராட்ட வேண்டியது நிறைய உள்ளது.. நேர...ஆழமான கட்டுரை பாராட்ட வேண்டியது நிறைய உள்ளது.. நேரமின்மை.. தொடர்ந்து ஆதிக்கத்திற்கு எதிரான நம் குரலை எழுப்பிக் கொண்டே இருப்போம்.<BR/><BR/>முக்கியமாக நடசத்திர வாழ்த்துக்கள்!!லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-3658094838672893952007-04-26T01:39:00.000-07:002007-04-26T01:39:00.000-07:00//// இன்று தான் சுரண்டுவதற்க்கு முன்பு சுரண்டப்பட...//// இன்று தான் சுரண்டுவதற்க்கு முன்பு சுரண்டப்படும் மனோநிலைக்கு மக்களை தாயார்ப் படுத்தத் தேவையான எல்ல புறச் சூழல்களையும் உருவாக்கி விட்டுதான் காரியமாற்றுகின்றனர் அவர்கள். ////<BR/><BR/>கண்கூடான உண்மை.. ஆனால், இன்னும் இந்த அல்பைகள் இதை உணராமல் இருப்பது தான் வேதனை.<BR/><BR/><BR/>///////நந்திகிராமத்தில் பதினான்கு நந்திகிராம மக்கள் தமது உயிரை வீரமுடன் தியாகம் செய்தன்ர். இதோ வெற்றியடைந்துள்ளனர். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அழுத குழந்தை பால் குடிக்கும்.//////<BR/><BR/><BR/>நிச்சயம் அப்படி ஒரு ரத்தம் சிந்தும் நாள் வரத்தான் போகிறது.லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-51057985469015684282007-04-26T01:20:00.000-07:002007-04-26T01:20:00.000-07:00மிகச் சிறப்பான கட்டுரை. எந்தப் பகுதியைக் குறிப்பிட...மிகச் சிறப்பான கட்டுரை. எந்தப் பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டுவது என்றே தெரியவில்லை..<BR/><BR/>நட்சத்திர வாழ்த்துக்கள் அசுரன்!<BR/><BR/><BR/>//நிற்க, இந்திய அரசு நியயாமாக செய்து தர வேண்டிய விவசாயத்திற்க்கான உள்கட்டுமானங்களை செய்து தராமல் ஏமாற்றுவது, பிறகு உள்கட்டுமானங்கள இல்லாததை காரணம் காட்டியே விவசாயத்தை பன்னாட்டு கம்பேனிகளுக்கு கதவை திறந்து விடச் சொல்லும் இந்த பதர்கள்.//<BR/><BR/>அதே போல் பொதுவினியோகத்தை சீரழித்தது.. உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி பலவண்ண கார்டுகள் போட்டு மக்கள் ரேசன் பொருட்கள் வாங்காமல் இருப்பதை உறுதி செய்து விட்டு.. அதன் காரணமாய் கையிருப்பில் இருந்த தானியத்தின் அளவு கூடியதைக் காரணம் காட்டியே விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதைக் குறைத்துக் கொண்டது. <BR/><BR/>சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்குவதை (அ)நீதி மன்றங்களே மறைமுகமாய் ஆதரிக்கிறது. டில்லியில் கடந்த சில மாதங்களாய் சிறு வணிகர்களின் கடைகளை ஆக்கிரமிப்பு என்று சொல்லி நீதி மன்றமே இடித்துத் தள்ள உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் ரிலையன்ஸ் பி.எஸ்.என்.எல்லுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பட்டை நாமம் போட்ட போது இதே (அ)நீதி மன்றங்கள் எங்கே போனது? <BR/><BR/>தாங்கள் எந்த வர்க்கத்துகு சாதகமானவர்கள் என்பதை அவர்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள்.. <BR/><BR/>//கறிச் சோறு கேட்ட காட்டேரி தலைப் பிள்ளையைத்தான் தின்பேன் என்று நின்றதாம் //<BR/>//, நடுத்தர வர்க்க வியாபாரிகளின் சந்தை ஆதிக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வதற்க்கும் பின்னால் உள்ள இயங்கியல் கோடிகளை சுரண்டிக் கொடுக்கும் இந்த அட்சயப் பாத்திரத்தின் மீதான முறை தவறிய காமம்தான்//<BR/><BR/>//உண்மைதான், நுகர்வோன் என்ற முகமூடி போட்டுக் கொண்டால் நமது சதையை கொத்திக் கிழிக்கும் வலி தெரியாமல் இருக்க நுகர்வுக் கலாச்சார போதை மருந்து கொடுக்கப்படும்.<BR/>//<BR/><BR/><BR/>//குரங்கு அப்பம் பிரித்த கதை. அதாவது விவசாயி, வியாபாரி முரன்பாட்டில் குரங்கு அம்பானி வயிறு வளர்க்கும் கதை.<BR/>//<BR/><BR/>நல்ல ஒப்பீடுகள்<BR/><BR/>வாழ்த்துக்கள் அசுரன்<BR/><BR/>ராஜாவனஜ்rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.com